|
கழுகுமலைப் பதிகம்
|
||
|
பாடல்
கொண்டது மெய்பரமாபரமெனும் பகுப்பறவையென்னுள்ளே
|
||
|
கூடல்
கொண்டது மெய்யிவை கிடக்கவொருகுணனுமற்றநெடுவுலகையே
|
||
|
நவடல்
கொண்டுழலவைக்கு மாயைவலிநன்று நன்றிதனில் நாயினேன்
|
||
|
வாடல்
கொண்டு வரல்தர்மமோ கழுகுமாமலைப்பெரிய மன்னனே.
|
||
|
1
|
காமனைப்
பொடி படுத்தவோர் பரமனுதவு கந்த கழுகாசலா
|
|
|
வேமனைப்
பகைதடிந்த வென்றனிடம் வெருகுறாதெவர்கள் கவருவார்
|
||
|
சாம
நல்லிருளில் மெல்ல வந்தினியசரசமாகவெனையெண்ணியென்
|
||
|
சோமனைக்களவு
செய்த கள்வனினையல்லதில்லையிது துணிவதே.
|
||
|
(காயும் படை)
|
||
|
2
|
வெள்ளக்கண்ணீர்
பெருக்கியுரைவிம்மிவிம்மி நாக்குளறி
|
|
|
வள்ளமுலைப்பால்குடிப்பானாய்
மடிதொட்டிழுக்குமொருபசலைப்
|
||
|
பிள்ளைதனைக்காலாலுதைத்துப்பெயர்ந்தெங்கேனும்
போவென்னத்
|
||
|
தள்ளிக்கடிதனீதமதோஷண்முகேசப்பெருமாளே.
|
||
|
(வெண்பா)
|
||
|
3
|
வெற்றிவேலென்ன
விளம்புகின்ற நாவினீர்
|
|
|
வற்றிப்புலனவியமாதரெல்லாஞ்
–
சுற்றியிருந்
|
||
|
தையையோவென்னவழுதுபறையறைய
|
||
|
வையகதே
வைவேலவா.
|
||
|
4
|
மிக்கிரவாய்ப்பெயல்காலாய்
பெரும்பாராய்ப்பலமாயம் விளங்கக்காட்டும்
|
|
|
விக்கிரவாவெனச
சூறை விளித்தரியவுருக்காட்டி மேற்காணென்ன
|
||
|
வுக்கிரவாளயினொடுத்த
செந்திலெம்பெருமானையுவம்பினோடுஞ்
|
||
|
சுக்கிரவாரத்தினத்திற்கண்டலம்
புழகமெழத்தொழுதிட்டோமே.
|
||
|
5
|
கும்பபாரமுலையாவலற்றுரியகுணணுமற்று
நிருவாணியா
|
|
|
யும்பராருமறியாத
பேருணர்வினுருவதாயுலவலெந்தநாள்
|
||
|
செம்பராகமுதிர்
குழன்மறச்சிறுமிசேவகாவயில் கொள்செம்மவே
|
||
|
யெம்பராபரமென்னுள்ளானே
வளருமேகமேகுமரபோகமே.
|
||
|
(வேறு)
|
||
|
6
|
குயில்
போலுங்குறச்சிறுமி கூடிநிற்குங்குலக் கொழுந்தே
|
|
|
யயிலேந்து
தென்னமுதே யன்புருவே செந்திலாய்
|
||
|
மயில்போலு
மரய மின்னார் புணர்ப்பாலே மதி தளர்ந்திங்
|
||
|
குயிர்போகாவுடலாகிப்
பதைக்கின்றேனுடையானே.
|
||
|
7
|
குவலயம்
போற்றிடும் குமரா செந்திலாய் சக்தத நான் குடும்பங்காக்குங்
|
|
|
கவலையதாற்
பெருந்துயரப்படப்படுமாநின்னதருட்கருணானந்தத்
|
||
|
திவலை
பெற்றோர் பெறு சுகத்தைச் சொல் லெனிதோ சிறியேன்பாற் செறிந்து நின்ற
|
||
|
நுவலரியதுயரமெல்லாந்
தீரவட்டிரு நோக்க நோக்கிக்காவே.
|
||
|
8
|
தேம்போதனைச்
சிறையிட்ட செவ்வேலனைச் சேவகனை
|
|
|
யாம்போது
வாழ்த்து கில்லீர் புலவீரினியாயுளற்றுப்
|
||
|
போம்போது
போமென்ன வீடோதக் காடுபுறப்படென்னச்
|
||
|
சாம்போதிலோவுடல்
ரீவம்போதிலோ கவிசாற்றுவதே.
|
||
|
9
|
அம்புராசி
கெடவயில் விடுத்த நமதறு முகப்பரமனடியையே
|
|
|
நம்புவார்கள்
பெறு பேற்றினைத் தெளிய நாமறிந்தபடியோதுவா
|
||
|
மிம்பரும்பரென
மயல் களற்ற விருவினைகளற்ற குறியேதுமற்
|
||
|
றெம்பரம்பொருளிதெனலு
மற்றவொருயிணைலிலாப்பெரிய நிலையமே.
|
||
|
10
|
அலமிகுந்தவறிலாமை
யெனு மனுபவக்குழியிலாழ்ந்துன
|
|
|
சிலர்கள்
போனமது குமரனாதனடி சேர்ந்துளார்களறவில்லையாஞ்
|
||
|
சலனமற்ற
ஜெகஜீவபேதமுளயாவையுந்தனது செயலதாய்த்
|
||
|
தலநிறைந்தபடி
கண்டு நிற்பர் நமதுளமறிந்ததிது சரதமே.
|
||
|
11
|
மனைகட்டவும்
பெண்மணஞ் செய்யவும் பொன்வளர்த்திடவுந்
|
|
|
தினையத்தனையுமெய்யில்லாதபொய்யை
மெய் செய்திடவும்
|
||
|
நினைவெட்டுமட்டுநின்றராய்வர்நள்வழிநேட
வென்னில்
|
||
|
வினையொட்டுதில்லைஎன்பார்நடபடாதென்றும்
வேலத்தானே.
|
||
|
எங்கே
நடத்துமோ எங்கே கிடத்துமோ எங்கேயிருத்து போவென்
|
||
|
கங்கை
மதி சூடினான்தில்லைதனிற்றெந்தோமெனநடனமானாறறியேன் னெங்கோனருள்.
|
||
|
கழுகுமலைப் பதிகம்
முற்றிற்று
|
||
கழுகுமலைப் பதிகம்
Subscribe to:
Comments (Atom)