|
குகானந்தலகரி
|
||
|
1
|
சிகையிருந்த
பசுமயினடாத்து பரதீரசம்பரம வெண்ணிருதயக்
|
|
|
குகையிருந்து
குகநாதனென்று பெயர்கொள்ளமட்டு மனமுண்டலாற்றே
|
||
|
பகையதாயதனுணீ
டுகாரிருளதேகமட்டுமொருபணிசெயாய்
|
||
|
தகையதீபமிடவேண்டுமென்று
சொலியிடுவதோ நினது தகையதே.
|
||
|
2
|
வேயிருந்து
முடல்வாயுடைக்கடவுள் வேதனிந்தினொ டேனையோர்
|
|
|
வாயிருந்து
வருமுறைகள்கொண்ட பயமுதவுசெந்திலுறை வள்ளியோய்
|
||
|
நீயிருந்தும்
வரமயிலிருந்தும் வடிவேலிருந்தும் மலநீர்மையாற்
|
||
|
றாயிருந்து
முலைவேட்டழுங் குழவியாயினேனிது கொல்தன்மையோ.
|
||
|
3
|
போதவார்த்தைசொலல்
கொண்டு நல்லருள் செய்வதனமொன்றஃது போக நான்
|
|
|
மாதர்போல
நெடுவிரகவார்த்தை சொலல்கொண்டு நல்லருள்விளங்கிடக்
|
||
|
கோதையாரிருவர்
தம்மை வேட்டவொருகுண முகம்பிறிதுவைத்துளான்
|
||
|
வேதமோதுகுக
ணவனையல்ல தினியாரை மேவுமென்விருப்பமே.
|
||
|
4
|
குமுழ்முலைச்சிறிய
குறமின் மேவிடுகுகாதி பாநினது கோயினிறிற்
|
|
|
கமழ்வதும்
பணியர்கூட்டி வாரியொரு கடைகுவிப்பது நின்வாயிருந்து
|
||
|
துமிழ்வதும்
பரமஞானமென்னிலிவனோ தித்தாவெனவிரந்து நான்
|
||
|
றமிழனந்தமுறை
செய்தனன் மடமைதக்க நீயது பொறுத்திடே.
|
||
|
5
|
சீறுமூச்சையொபந்தனஞ்
செயவுமறிகிலேன் சிவசிவானேன்
|
|
|
வேறுவேறு
பலநூல் படித்ததிலுமெய்மைகண்டறியன் குவற்குகா
|
||
|
ஆறுமாமுகமுமாறு
கொண்ட தினியந்தகண்படரு நாளினுங்
|
||
|
கூறுபோதிலுளமெங்ஙனுவேதனை
யறிகிலேன் குறுகுகின்றனே.
|
||
|
6
|
நாமரூப
மிடமேதுமற்ற நினைநங்குகா குமரசண்முகா
|
|
|
காமனிற்பெரிய
செந்தினாதவெனவில் புகழ்ச்சியது கழறினேன்
|
||
|
யாமிதாகமென
வோதலாஞ்சிறியனெத்திலாகி நினையிந்தெனு
|
||
|
ளாமடத்தினையுபோற்று
வந்தையிதிலியாவர் மிக்கரணிவேலரே.
|
||
|
7
|
வாட்டமுற்றவெனை
மடியிருத்திமணநறிய பாலடிசில்வாயிடத்
|
|
|
தூட்டவுண்டபின்னு
றங்கவைக்க விருதாயர்வேண்டுமென வுன்னிமுன்
|
||
|
வேட்டுவக்கொடியை
வானமங்கைதனை வேட்டுநின்றநிறை விமலமே
|
||
|
மூட்டமாயை
வசம்விட்டதேது குறையேது செய்தனதை மொழிவையே.
|
||
|
8
|
முந்தைநாளின்
மறைமுடிவதான பரஞானமோனமொழி மூர்த்தனை
|
|
|
அந்தநன்னிகம
சாகைதற்கு மயலாகிநின்றருள் விசாகனை
|
||
|
சந்திலோர்
தொழிலுமற்று நிற்பவனையவரொடொப்பனெனவதிசய
|
||
|
மெந்தநூலுதவி
செய்ததோ வறியனெண்ணிலீரஃதையெண்ணுமே.
|
||
|
9
|
தெவ்வராமைவரை
வென்றபேத கதிசென்று தேயந்தகமதற்றிடு
|
|
|
மவ்விடத்துவெளியாகி
யெங்குமுளதன்மை காட்டிடுகுகாநினை
|
||
|
இவ்விடத்துள
வனவ்விடத்துளவ னென்றிசைத்தனரிசைப்பினும்
|
||
|
உவ்விடத்துமுள
னென்றிடார் களெனிலென்னதாகுமிவர் கன்மமே.
|
||
|
10
|
புண்படுத்து
மடநெஞ்சினோடலையு மென்னையங்ஙனொருபொருளதாய்ப்
|
|
|
பண்படைத்த
மறைமுடிவையோதியது மாகுகாதிபதிநீயலால்
|
||
|
மண்படைத்தவனு
மண்ணையுண்டவனு மாதிடத்துவ னுமாயிரங்
|
||
|
கண்படைத்தவனுமில்லையென்றறியுமுலகமாகாகனமுகடுமே.
|
||
|
11
|
வித்திருந்து
முளைவருமுன்னுண் முளையவ்விடத்திலுறு முறைமைபோல்
|
|
|
நித்தாதியொட
நாதியென் பவைகணின்னிடத்திலுல ளகாலமென்
|
||
|
நுத்தமப்பெறியர்
கண்டுமேற்பதவியுன்னி நின்றிடுவ ரெம்மனோர்
|
||
|
பித்தராகிமன
நொந்தலைந்திறுதி பெறுவதுங் கொடியபிரமமே.
|
||
|
12
|
அன்பிடைப்பகுதி
நொடியினிற் சகசமறியலாமெனு மறுமுகா
|
|
|
பின்புனுற்
பவமதமறியும்விஞ்சையது தருதிநான்பி உமமென்றிடும்
|
||
|
வன்பர்பின்
வரலையறிவனோதிடுவனவரும் நோக்கி மனநாணுவார்
|
||
|
இன்புசொற்றிடினு
மேற்பரந்நிலைமை யெய்துதற்கு மனமாவரே.
|
||
|
13
|
நாள்மறைத்துணி
வையாவரோதுபவரோத வென்றுவரில் நங்குகா
|
|
|
சூன்யமன்றதுநி
சூன்யமன்று மலதொந்தமாயை மயலற்றிடு
|
||
|
மான்மியத்தர்
குருபாதமேகதி யாதாயிரங்குவது மன்னிடும்
|
||
|
பான்மைமோன
மயமவர்கண்மட்டின் முளம்வாரி முத்தமிடநிற்பதே.
|
||
|
14
|
பொன்பதிப்பவரை
மோன ஞானநெறி போயிடாக் கொடியபொய்யரை
|
|
|
என்குலக்குரவ
ரென்றிடாது சுரரைந்தொழிற்றலை வரியாவரும்
|
||
|
தன்குலக்
குரவனென்னுநீ யெனதுகுருவதாகி யருள்தந்திட
|
||
|
முன்படைத்த
தவம்யாததோவறியன்முருகநாத குகமூர்த்தியே.
|
||
|
15
|
பற்றுணர்ந்தெளிய
பற்றைவிட்டுழல்வர் பற்றிநிற்கு முனதருளதைப்
|
|
|
பெற்றனென்று
மதினின்றனென்று மெதிர்பேசும் டம்பமொழியென்றுபோம்
|
||
|
உற்றுணர்ந்தவர்கள்
மாதரல்குலிழிகுழியையா வுறவுகொள்ளுவார்
|
||
|
இற்றனின்று
மிரவேயிருந்துன ருளென்குகாதருண மீய்ந்திடே.
|
||
|
16
|
கிட்டியிரிருகை
கால்களைத்திருகிவைத்துக் கீறுதுணி கொண்டதைக்
|
|
|
கட்டிநீழ்விழியை
மூடியப்பிவிதிகண்ட யூரவர்கள் பைங்கிளை
|
||
|
வெட்டியிட்ட
திலோர்பாடைக்கட்டியதின் மீக்கிடத்திடுமுன் மின்னனார்
|
||
|
முட்டியிட்டழு
முன்வந்துநின்ன ருள்செய்மோனம்வைத்த குகநாதனே.
|
||
|
17
|
சினையதாஞ்செழிய
மாவில்வேற்கடவுள் செய்கை கண்டுநினைவந்தியா
|
|
|
மனமெனுங்கொடியதருவில்
வேல்விடுவையென்று வந்தனன் மனம்செயாய்
|
||
|
அனையமாவடலில்
மஞ்சை கிட்டியதுபலாமுண்டி தனையட்டிடி
|
||
|
லென்கிடைக்குமென
வெண்ணமோலறிய னென்குகா வில்தென்மொழிவையே.
|
||
|
18
|
தங்குடிக்கினிய
மதலைவேண்டினர்கள் சங்கபரணிமுதன்மற்றுளோர்
|
|
|
எங்குலக்கு
மரியாகியுமதனை யெண்ணியே நினைமுனீய்ந்துளான்
|
||
|
நங்குடிக்குமொரு
மதிலைவேண்டுமென நினைவிலாதெனை வெறுத்தனை
|
||
|
தங்குமென்
குமரபின்ன ரெண்ணிடு வைதாயரோடு மெனை நேடியே.
|
||
|
19
|
மறமிகுந்த
கொலை மிருக நீடு நெடுவன மதேயெனது மனமதைக்
|
|
|
குறமினைத்தழுவு
குரவனல்ல தினயாவர் கூடுபவர் குறைவிலோய்
|
||
|
அறமுரைக்கு
பவரோடுரைக்கிலவர் வருவரோவரினு மூப்பினர்
|
||
|
திறமதாயருள்
கொடுறை திவேட்டமுள செய்யலாங் குமரதீரனே.
|
||
|
20
|
ஓடுகின்றனர்கள்
சாடுகின்றனர்களுள்ள வொன்றினை யிழந்ததாய்
|
|
|
வாடுகின்றனர்கள்
மீட்டும் வந்ததென மகிழுகின்றனர் களம்மமா
|
||
|
ஆடுமானவயிவர்
மீதிலேது குறையந்த மாயை தருவலியதா
|
||
|
மூடயிவ்வுலகினோடு
கூடுகிலன் முருகனே முகிலன் மருகனே.
|
||
|
21
|
அடியன்
மீதிலுள பிரியமிக்கொடிய மனதின் மீதும் வரிலையவென்
|
|
|
குடிகெடுத்து
விடுநினை மறக்கவநு கூலயுக்தியுமியம்பிடு
|
||
|
முடிவின்
மெல்லமெல நின்றனோடு சமனென்று மோதுமிதை முடி கொள்வாய்
|
||
|
துடியிடைச்
சிறுமி மன்னபின்வரவு சொல்லினேனுனது சித்தமே.
|
||
|
22
|
கொலை
புரிந்துபூலும் வக்ரதந்த மடமறலியே நமது கூறல் கேள்
|
|
|
சிலையிடைக்
கொடிய வாளியானெடியவேலினாற் கரிய சிங்கியாற்
|
||
|
றலையடுத்த
மதயானையாற்றின முனநந்து சாம்பியோர் குடும்பெனும்
|
||
|
யலைபுகுந்தவரையடுவதா
நினது வலிமை யெங்ஙனுளவலிமையே.
|
||
|
23
|
தேர்ந்தநற்பரமஹம்ஸர்
சித்தர் கணர்தேவர் மற்றுளவரியாவரும்
|
|
|
ஆர்ந்திருக்கு
மிருபதமதே புனையாதாக வேண்ணியுனையணுகினேன்
|
||
|
சேர்ந்த
நான்மறைகளெட்ட வெட்டுநிரை தேசுளாய்குமரதேசிகர்
|
||
|
சார்ந்தபின்னரயல்
பேர்ந்திடாதவொரு சத்ததான நிலையருள்வையே.
|
||
|
24
|
கல்லெனிற்
கரிய விருளெனிற் சலனக்கடலெனிற் கொடிய தருவெனிற்
|
|
|
கொல்லுபூதமெனில்
வேல்விடுத்தடுவையென் குகாவிதனு ளொன்றெனச்
|
||
|
சொல்லொணா
மனதையெங்ஙனீயடுவை சொல்லலும் பயனில்சொல்லதாம்
|
||
|
வல்லவீதினுடனெந்த
நாள்வரையும் வாழவேண்டுவது கூறிடே.
|
||
|
25
|
குன்றவில்லிதரு
பாலவென்றனொடு கூடவாகடிதின் மனமெனும்
|
|
|
பன்றியுள்ள
தகமத்தமாவுளது புத்தியான படவரவுமுண்
|
||
|
மென்றுசித்தமெனும்
நாயுமுண்டவைகளோடு கூடிவிளையாடலாம்
|
||
|
இன்றுதாழ்ப்பையெனி
லவைகளேகிவிடுமே குவாரெவரி ருப்பவரே.
|
||
|
26
|
ஏதுமென்
முனுறுலில்லதுள்ள தெனயாது மெண்ணுகிலேனென்குகா
|
|
|
நாதநீமுன்
வரிலங்கனெண்ணனதை நனவில் வைத்தவொருசெயலதா
|
||
|
யாதரிக்குமுனம்
வரவுசெய்தையிலை யாதகா தருளிலுயத்தவோர்
|
||
|
போதகன்றனை
யுமங்ஙனெண்ண வரினல்லதாமெனது போதமே.
|
||
|
27
|
கர்த்ததந்திர
மொழியாறுணின்றிடு கெளமாரமன்னெனது மதுமிகப்
|
|
|
பத்திசெய்துருளடைந்து
தோய்ந்து பதனங்கடந்தவை யியற்றிடுஞ்
|
||
|
சுத்தமாயை
வலிகண்டு மேலகமிரண்டுமற்ற சுகவடிவமாய்
|
||
|
மத்தயானையென
நிற்பதேயெனது மதமதாங்கு மரமன்னனே.
|
||
|
28
|
குரவனாரடிமை
யென்ன வின்றுவரை கூறிவந்திடு வழக்கினாற்
|
|
|
பரமவென்
குமரவென் முனாவருதியென்று கூறியிசையாடினே
|
||
|
னிரதமின்னிலையினீ
யிருத்தியெனிலியாவரே யுனையுநினைகுவார்
|
||
|
வருதல்போதலென
லிலையெனிலிவனும் வாடல்கூடுதலு மில்லையே.
|
||
|
29
|
பழிகினின்னிருபதாம்
புயங்கிருபை பண்ணுமென்ன நெடிதெண்ணியே
|
|
|
தொழவிருந்தெனுளம்
வேறுபட்டதினி யென்செய்வேன் குமரசுந்தரா
|
||
|
இழவுகொண்ட
வுலகோடிருப்ப மெனிலேற்றிடா திசைவுமில்லைநொந்
|
||
|
தழுவிருப்ப
மெனிலாவியில்லையிவணது பவிக்கினு மனர்த்தமே.
|
||
|
30
|
வானர்
மாமகுடபந்திதள்ளிமுனம் வருவதில்லைபத்ம வாய்களோ
|
|
|
மோனமோது
மலதென்று வந்தையென விடாது முகவிழிகண்மே
|
||
|
லான
பக்குவர்களெங்ஙனுள்ளரென நேடிநிற்குமல தருள்செயா
|
||
|
தீனமுற்றபுழு
நாய்க்கியாது கதியாரெனக் குறவுகுமரனே.
|
||
|
31
|
தப்பனேனு
மொருபுலவனென்ன மிகுடம்பனென்ன விடுநாமமுஞ்
|
|
|
சுப்பராயனென
வோதலாற் பரமசுப்பராய கருணாநிதி
|
||
|
முப்பொருத்த
முளதெற்கு நிற்குமினியெவ்வழக்கிலுள முனிவதா
|
||
|
மப்பனின்னருளையடைய
மோருறுதியடிமை கண்டனி னியஞ்சேனே.
|
||
|
32
|
இங்குவந்திடுக
வருள்புரிந்திடுக வென்னிலேன்முதுபிதாமகர்
|
|
|
மங்கை
கூறுடையரோனும் வந்திடுவர் வலிமிகுந்த வொருமரணாய்
|
||
|
எங்குமொட்டியுமோ
ரொட்டிலாதுறை நிர்லேபனாயிவணிருந்துமென்
|
||
|
னங்கநொந்து
விழிநீர் பெருக்குவன் முன்வந்திடாய் மிகவுமழகிதே.
|
||
|
33
|
தமசைவெல்லவருஞான்
மேவவொரு சாதனங்களு மில்லாததாற்
|
|
|
சமசுகாதிபர்கள்
தமசுமுப்பொழுதுமில்லை யென்றிடுவர் சரதமாய்
|
||
|
மமஷடானனவகத்தை
மாற்றிடுநிரகமுமோரகமே யானதால்
|
||
|
நமதிடத்தஃதிரண்டு
மில்லையென நிற்பர்நின் னருனாட்டரே.
|
||
|
34
|
பகமறந்திருப
யோதரத்தினிடைபடன் மறந்து சமதீயிலாஞ்
|
|
|
சுகமறந்ததை
மறந்த மென்றவொரு சொலுமறந்து பலதோற்றமாஞ்
|
||
|
செகமறந்து
இரவுபகன் மறந்திடுதிகம்பரற் குதவுமறுமுகா
|
||
|
யுகமறந்திடினு
மென்முன்னாவை யெனிலில்லையேது தவமுடையனே.
|
||
|
35
|
தேவநாயக
னீதேவயானையிவணேர் பொருந்தியது தீம்புனப்
|
|
|
பாவை
வள்ளியிடு பணியுமுற்றிவர லெப் பொருத்தமதினன்றியிரு
|
||
|
காவதோதிடுவள்
பெரியவம்மை யிவளதுவுமேகிலளிவளக
|
||
|
மேவலின்றியிரு
குமரநின்மலவிராக நிற்குண விலாசனே.
|
||
|
36
|
என்றநல்லுறவரென்னி
லென்பகைவரென்னி லென்குமர மகிழ்வுட
|
|
|
னின்று
முன்னிடுவையாது யுத்தியெனிலிகல் விழைத்திடு பகைஞரைக்
|
||
|
கொன்றுவென்று
வருவீரமேநினது குணமதாக வினியன்றியும்
|
||
|
அன்று
செந்தினிடைசூர் முடிக்க வலதியாவர் வாழ்நீதிடவமர்ந்
|
||
|
37
|
கங்கை
தும்பைமதிமத்தம் வாளரவுகழய கொன்றையணி வோரருள்
|
|
|
துங்கவேலகுருநாத
வென்னவொரு சுருதிகாண்பரிய பொருனெனக்
|
||
|
கங்கைபுத்ரனெனவாயி
மைந்தனென வள்ளியாள் கணவனென்னநான்
|
||
|
அங்கநொந்துனை
யழைத்தும் வந்தையிலை யாவனென்னில்மனமாமே.
|
||
|
38
|
சரதமாக
நினைநம்பியுள்ளுருகியன்பு செய்யிலொரு சரதமுஞ்
|
|
|
சுருதியின்
பொருளும் முபநிடத்துணிவு மெளிதினீசொலுவதெண்ணிடார்
|
||
|
பிரதிபிம்பமென
பிம்பமென்ன கடபின்ன மென்ன விவனோதியே
|
||
|
வரையறுத்தநெடுநாளை
மாய்ப்பர்கு கவென்கொலோ இவர்தம்மதியதே.
|
||
|
39
|
இதையுணர்ந்
தவர்களதையறிந்திலர்கள தையுணர்ந்த வியல்பாளரோ
|
|
|
சிதையுமிவ்வுலகையறி
கிலாரிவர்கள் சேருமோர் கதியுமலளவரஞ்
|
||
|
சுதைபரந்த
மொழிமறமினைத் தழுவுசுமுகநாத குகசுந்தரர்
|
||
|
அதையும்
விட்டிதையும் விட்டிடைப்பிணமதாயின் யாதுகதியருள்பையே.
|
||
|
40
|
பொன்றுமிவ்வுலகர்
மொழிவர் வல்லபடிபுதியரான சிலவறிஞரு
|
|
|
ஒன்றுமில்லைவணென்று
தான்மலைவரொன் றுமற்றநின்னிடத்தெலாம்
|
||
|
நின்ற
தன்மையதையறிகிலார்குமரநீசொலாதொயிலறிவதார்
|
||
|
அன்றியுங்குறியவிழ்ந்துபோனவிடமளவுகட்டவிடமில்லையே.
|
||
|
41
|
ஒன்றுமற்றதனை
நம்பிவாழுபவனொன்று மற்றவனேயலா
|
|
|
லின்றுநாளைமுன்
மன்றுளானெனவிசைக்க நின்றிடுவ னல்லவாம்
|
||
|
குன்றையட்டவடிவேலவா
மருவுகுறிகடந்த வொருகுறியதாய்
|
||
|
யென்று
வாழவலனிவ்வுடன் முடிவிலெய்து மென்பவர்கள் காணவே.
|
||
|
42
|
முடிவிலா
நினதுவடிவமுண்டஃது முன்னிற்கு முகமாறுடன்
|
|
|
படியின்மீது
வரவேண்டுமென்ப திலையங்ஙனம்பகர நின்றதும்
|
||
|
அடியர்முன்
குரவர்வந்துவார்த்தை சொலல்வடிமை நானிடையினின்றதாயக்
|
||
|
கொடிய
விவ்வுலகமேசுகின்ற வசைகொண்டுதான் குமரமன்னனே.
|
||
|
43
|
ஓடியாடி
வருகாளையம் பருவமேகி யூடுநரைவந்தது
|
|
|
ஆடுகின்ற
வுளபற்களைம் பொறியராவரங்குவழி மெல்லெனத்
|
||
|
தேடுகின்றனர்பின்நாளை
யெண்ணின் மலதேகமாய்ந்திடு மோர்நாளதே
|
||
|
யீடதாயுளதிங்கென்
செய்வேன் குமரவிதனுளியாது பெறவல்லனே.
|
||
|
44
|
நினையும்
விர்த்தியதிலிட்ட முள்ளபடியுற்பவித்து வருநிலையினு
|
|
|
மினையணாதியெனவனை
யுனாதியென விங்குவேண்டுவது மழையதாம்
|
||
|
தனையர்வேண்டுவன
வேண்டினுமினியதாய ரென்னின் வழிவருதல்போற்
|
||
|
றுனதுசித்தமெதில
தியெனிஷ்டமுள தோதினேன் குமரநாதனே.
|
||
|
45
|
என்றணெண்ண
முனதெண்ணமா குமதிலென்றனெண்ணின் வநியொன்றுமுன்
|
|
|
னின்றுளு
தொழியிலாண்மையார்க்குளது நின்றனக்குளது சரதமால்
|
||
|
பொன்றுமிவ்வுடலமேனு
நீயினிது போந்திடு முறையுளானதாற்
|
||
|
கன்றிமாய்வதுவு
மறமதன்று குககாங்கெயாவெனது கண்ணனே.
|
||
|
46
|
தானடக்கு
நெறிமட்டுமுத்தியிடை சாரவுய்க்குமெனு நினைவிலான்
|
|
|
மோன
முக்தியஃதெவ்வகைத்ததனை முன்னிமேவிட நன்னெறிகளா
|
||
|
யானதெத்தனை
நன்மறைகள் சொற்றளது மென்னவாய்ந்திலர் களையையோ
|
||
|
ஒனிவ்வண்ணமிவர்
மதியழிந்ததருனெங்கு முள்ளகுகராஜனே.
|
||
|
47
|
பொங்கராவியிடை
யோதிமங்குழுமு பொற்செயந்திபுர நாதமுன்
|
|
|
அங்கராக
முலையேனலஞ்சிறுமிதோள் புணர்ந்து மகிழறுமுகா
|
||
|
இங்கராவினை
நிகர்த்து மாயவினை யென்னையட்டுவரல் கண்டிடிற்
|
||
|
சங்கராஜன்
முதன்மற்றுமுள்ள பலரெந்தவாறு சரணடைவதே.
|
||
|
48
|
மாவிருப்பினொடு
செந்தில்வாழ்ந்து வருநமைவணங்க வருவாயென
|
|
|
நீவிளிக்குமொரு
வார்த்தைதன்னை யெதிர்பார்த்துநிற்ப னெனிலென்குகா
|
||
|
யகவர்பாலுமென
திச்சையில்லையிவனாக வேண்டுவது மில்லைமேற்
|
||
|
றேவர்முத்தியதின்
வரவையுஞ் சிறிதுபார்க்கிலேனிஃது திண்ணமே.
|
||
|
49
|
அடலயிற்
குமரனென்னை யாதரவுசெய்திடாதற வெனுக்கினும்
|
|
|
முடலிளைப்பனலனென்
குலத்தியபிமான மெப்பொழுது முற்றுள்
|
||
|
வருகருண்டுபினும்
வடுகியுண்டுமெனைமைந்தமைந்தயிவன் வாவெனக்
|
||
|
கழதழைத்த
முதருத்தியும் பலவுமுதவிநின்றிடுவர் காணவே.
|
||
|
50
|
முற்றநான்மறையு
மறிகிலாத மகமோனமாநினது பேரருள்
|
|
|
பெற்றனென்றிடவு
மல்லனென்றிடவுமறிகிலாத வொரு பேதைநான்
|
||
|
குற்றமே
பெருகவந்துளேன் புலவுகூட்டியுண்ணும் புலையென்னினுங்
|
||
|
கற்றவர்க்குதவு
செந்தினாத வெனையாளுவாய் கழல்கள்சூட்டியே.
|
||
|
51
|
அண்டர்கொண்ட
துயர்கண்டுவேக முடனம்புராசியிடை அசுரர்கள்
|
|
|
கண்டமாக
வடிவேனொடுங் கரமிராறுடைக்கடவுள் புகழையே
|
||
|
பண்டுதொட்டெனது
நாவுபாடிவருகின்ற தல்லதொரு பகவன்மற்
|
||
|
நுண்டெனச்
சிறிதெனுள்ள மெண்ணிடினுமோதிடா தெனதுநாவுமே.
|
||
|
குகானந்தலகரி முற்றிற்று
|
குகானந்தலகரி
Subscribe to:
Comments (Atom)