திருச்செந்தூர் பதிகம்

திருச்செந்தூர் பதிகம்
1
நாதநான் மறைகடேரா நம்பனேயும் பரார்க்கு
மாதியே செந்தின் மேயவாறு மாமுகத் தெங்கோவே
பாதநாண்மலர்கள் சூடிப்பாடி மாதவ ரோடாடா
தேதமேபுரிய வல்லேனென்னினைந் திருக்கின்றேனே.
2
புத்தமுதனைய சொல்லாள் புனக்கொடி தழுவநீடு
மத்தனே செந்தின்மேயவாறு மாமுகத் தெங்கோவே
மித்திர விழியார்மாலில் வீழ்ந்து மெய்யடியான் போலு
மெத்தனாய் வாழுகின்றேனென் னினைந்திருக்கின்றேனே.
3
துண்டவெண் மதியுங்கொன்றையுஞ் சூடியுமேனையோரு
மண்டரும் பரவுஞ்செந்தினாறு மாமுகத்தெங்கோவே
பண்டருமொழியினுர் தம்படுமயற் காடுபுக்கி
யெண்டருவினைகள் செய்வேனென்னினைந் திருக்கின்றேனே.
4
மும்மலந்தணிந்தோர்க்கான முத்தனே யெளிவந்தாளூ
மம்மையே செந்தின் மேயவாறு மாமுகத் தெங்கோவே
கொம்மை வெம்முலையாரூட்டுங் கொடுமயலுருவனாகி
யெம்மையுமிழக்க வல்லேனென்னினைந் திருக்கின்றேனே.
5
வட்டமா வாயசூரை வடியயிலேவிக்கூளூ
யட்டவோய் செந்தின்மேயவாறு மாமுகத் தெங்கோவே
சுட்டவூனருத்தி வெந்தோற்றுருத்தியை வளர்த்தற்கான
விட்டமே பூணவல்லேனென்னினைந் திருக்கின்றேனே.
6
தப்பதை யறியாவன்பர் தமையுருப்படுத்தவல்ல
வப்பனே செந்தின்மேயவாறு மாமுகத் தெங்கோவே
துப்பமை யிதழார் மாலைத்தூண்டியே வளர்த்துலாவும்
இப்புலத்தோடு போவேனென்னினைந் திருக்கின்றேனே.
7
கொல்லியந்தேனைப்புல்லுங் குன்றமே குருந்தேகோல
அல்லியம் போதனேற்று மானுமாமுகத் தெங்கோவே
பல்லிய முழங்கவாவும் படைமதன் வாளிபொய
எல்லியும் பகலுஞ்சாவே னென்னினைந் திருக்கின்றேனே.
8
பார்முதல் விண்ணீராய பகுதியே வினையைநீற்றும்
ஆரழலுருவே செந்திலாறு மாமுகத் தெங்கோவே
காரடுகுழலினார் தங்கடுவிழி நெடியாவாளா
லீரிடவாழுகின்றே னென்னினைந் திருக்கின்றேனே.
9
வள்ளமென் முலைகளாட வரைமகள் மகவே வாவென்
றள்ளிமோந்தேத்த வாருமாறு மாமுகத்தெங் கோவே
புள்ளுலாங் கூந்தல் மின்னார் புணர்ப்பை யேகருதிவீட்டை
யெள்ளியீடழிய வல்லே னென்னினைந்திருக்கின்றேனே.
10
மணிமலர்ப்பதங்கள் சூட்டுமாதவர் எட்டற்காண
அணியதே செந்தின்மேலவாறு மாமுகத் தெங்கோவே
பிணிமலமறுத்துணர்ந்த பெற்றியன் நடையன் போலும்
இணையிலா வஞ்சம் பூண்பே னென்னினைந்திருக்கின்றேனே.
திருச்செந்தூர் பதிகம் முற்றிற்று