|
கிளிக்கண்ணி
|
||
|
ஐந்துகரனுக்கிளைய வாறுமுகவேலவனைச்
|
||
|
செந்திற்குகந்தவனைக்
|
கிளியே
|
|
|
சேரமனந்
தேடுதடி
|
(1)
|
|
|
கூடிக்குலாவிமெத்தக்
குகனோடு வாழ்ந்ததெல்லாம்
|
||
|
வேடிக்கையல்லவடி
|
கிளியே
|
|
|
வெகுநாளைத்
தொந்தமடி
|
(2)
|
|
|
நீலமயில்வாகனனால்
நெஞ்சக்கரைந்ததன்றிப்
|
||
|
பாலுங்கசப்பாச்சுதே
|
கிளியே
|
|
|
பசலையும்
பூத்ததடி
|
(3)
|
|
|
சேமநிதியாடைபணி
சென்றாலுஞ்சிறுதுயர்
|
||
|
காமங்கொடுந்துயரடி
|
கிளியே
|
|
|
கன்னிகைமார்களுக்
கெல்லாம்
|
(4)
|
|
|
மாலைவடிவேலவர்க்கு
வரிசையாய் நானெழுதும்
|
||
|
ஓலையுங்கிறுக்காச்சடி
|
கிளியே
|
|
|
என்னுள்ள
முங்கிறுக்காச்சடி
|
(5)
|
|
|
ஊரார்
வசைசொல்லவும் உற்றார் வகைசொல்லவும்
|
||
|
வாராத
வார்த்தையெல்லாம்
|
கிளியே
|
|
|
வந்து
வந்து போகுதடி
|
(6)
|
|
|
ஐந்து
வயதினிலே யறியாப் பருவத்திலே
|
||
|
பிஞ்சிலே
கூடினானடி
|
கிளியே
|
|
|
பிரியமனங்
கூடுதில்லை
|
(7)
|
|
|
வள்ளிக்
குகந்தவனை மருவியிருந்த விதம்
|
||
|
கள்ளப்
புணர்ச்சியல்லடி
|
கிளியே
|
|
|
கற்பு
நிலையப்படியடி
|
(8)
|
|
|
அந்தந்த
நாளையினான் அறியாதே கூடிவிட்டேன்
|
||
|
இந்த
விதிவருமென்று
|
கிளியே
|
|
|
நான்
எண்ணியறிந்தேனில்லை
|
(9)
|
|
|
எல்லார்க்கு
மொருவிதம் எனக்கொருவிதமடி
|
||
|
வல்லார்க்கும்
வல்லவனாம்
|
கிளியே
|
|
|
மான்
மருகன்றந்தமையால்
|
(10)
|
|
|
எட்டாப்
பழமடியோ இறக்காதனடியோ
|
||
|
வட்டாத
வானந்தமே
|
கிளியே
|
|
|
மான்
மருகன்றந்த சுகம்
|
(11)
|
|
|
கட்டும்
பொருளுமற்றுச் சும்மா விருக்கவைத்தான்
|
||
|
எட்டிரண்
டுமறியேனடி
|
கிளியே
|
|
|
ஏமாந்திருந்
தேனடி
|
(12)
|
|
|
மோகந்தவிர
வென்னை முந்தி பிடித்திழுத்து
|
||
|
ஏகவெளி
தனிலே
|
கிளியே
|
|
|
என்னைக்
கலந்தானடி
|
(13)
|
|
|
வள்ளி
கணவன்பேரை வழிப்போக்கர் சொன்னாலும்
|
||
|
உள்ளங்
குழையுதடி
|
கிளியே
|
|
|
ஊனு
முருகுதடி
|
(14)
|
|
|
எட்டி
யெட்டிப்பார்ப்பவர்க்கு எட்ட எட்ட நிற்குமது
|
||
|
கட்டுக்
கடங்காதடி
|
கிளியே
|
|
|
சுந்தரத்தின்
பேருருவம்
|
(15)
|
|
|
கன்னல்
மதுரமொழிக் கட்டழகன் என்குரவன்
|
||
|
என்னபொடி
போட்டானோடி
|
கிளியே
|
|
|
இடைபிரியக்
கூடுதில்லை
|
(16)
|
|
|
அறிவு
என்றானப்பால் அறியறிவுதானென்றான்
|
||
|
பிறிதொன்றுமில்லை
யென்றான்
|
கிளியே
|
|
|
பேசாதிருந்தானடி
|
(17)
|
|
|
அலைந்து
திரிபவர்க்கு ஆசையுண்டு தாபமுண்டு
|
||
|
கலந்து
சுகிப்பவர்க்குக்
|
கிளியே
|
|
|
கண்ணீரும்
வருமோடி
|
(18)
|
|
|
கானமயிலேறு
மென்றன் கட்டழகன்றந்து வரும்
|
||
|
ஆனந்த
மென்பதெல்லாம்
|
கிளியே
|
|
|
அழுது
தவிப்பதோவடி
|
(19)
|
|
|
உண்டாற்
கிறுக்கவைக்கும் ஊரிலுள்ள கட்சரக்கு
|
||
|
கண்டாற்
கிறுக்கவைக்கும்
|
கிளியே
|
|
|
என்
கட்டழகன் பேருருவம்
|
(20)
|
|
|
தாழ்வாரைக்கை
தூக்குந் தம்மனைக்குள்ளேயிருந்து
|
||
|
வாழ்வாரை
வாழ்த்துமடி
|
கிளியே
|
|
|
மான்
மருகன்றன் கருணை
|
(21)
|
|
|
எட்டும்
வரைக்குந்துன்பம் எட்டிவிட்டாற் பேரின்பம்
|
||
|
தட்டினாலும்
போகாதடி
|
கிளியே
|
|
|
தானாயறிந்ததடி
|
(22)
|
|
|
மணத்தகுழலிருந்தென்
மற்றவழகிருந்தென்
|
||
|
குணந்தான்
குறியடியோ
|
கிளியே
|
|
|
என்
கோலமயில் வாகனற்கு
|
(23)
|
|
|
சொல்லாத
சொல்லும்வரும் துறவாத்துறவும் வரும்
|
||
|
கல்லாத
கல்வியும்வரும்
|
கிளியே
|
|
|
என்
கணவரைக் சேர்ந்தவர்க்கு
|
(24)
|
|
|
என்னோடுடன்
பிறந்தா ரெத்தனையோபேர்கள் பட்டார்
|
||
|
அத்தனை
பேர்கள் பட்டுங்
|
கிளியே
|
|
|
அவனாசை
போகுதில்லை
|
(25)
|
|
|
மாடுமனை
போனாலென்னமக்கள்சுற்றம் போனாலென்ன
|
||
|
கோடிசெம்பொன்
போனாலென்ன
|
கிளியே
|
|
|
அவன்
குறுநகை போதுமடி
|
(26)
|
|
|
முத்து
நகைக்குமவன் மோனமொழி வார்த்தைகட்கும்
|
||
|
பித்துப்
பிடித்தேனடி
|
கிளியே
|
|
|
பேசுதற்குக்
கூசுதடி
|
(27)
|
|
|
ஆடுமயில்
வாகனனாலன்று முதற்பட்டதுயர்
|
||
|
ஏடுமடங்காதடியோ
|
கிளியே
|
|
|
எல்லாமெழுதவென்றால்
|
(28)
|
|
|
என்னைக்கெடுத்தான்பின்
என்னைத்தானென்றுசொன்னான்
|
||
|
தன்னையுங்கெடுத்துக்
கொண்டான்
|
கிளியே
|
|
|
ஷண்முகத்தான்
மாயவித்தை
|
(29)
|
|
|
பக்தியுள்ள
பேர்களுக்குப் பயன்றரும் பொருளது
|
||
|
முக்திபெற்ற
பேர்கட்கெல்லாம்
|
கிளியே
|
|
|
மூடிவைக்குஞ்
செம்பொருளது
|
(30)
|
|
|
ஊனம்
வருமென்றறியேன் உள்ளுக்குள்ளே கலந்தேன்
|
||
|
மானம்பறி
போச்சடி
|
கிளியே
|
|
|
மற்றவருக்
கேச்சாச்சடி
|
(31)
|
|
|
அஞ்சியொடுங்கி
நின்றேன் அழுது சலித்துநின்றேன்
|
||
|
பஞ்சுபடு
பாடுபட்டேன்
|
கிளியே
|
|
|
என்
பாக்கியத்தைக் காணவென்று
|
(32)
|
|
|
கொஞ்சியிருப்பார்கள்
குழலைமொழி மாதரெல்லாம்
|
||
|
அஞ்சியிருப்பேனடி
|
கிளியே
|
|
|
என்
ஆறுமுகவேலவர்க்கு
|
(33)
|
|
|
மோகம்
மெத்தவானாலும் முன்னும் பின்னும் பார்த்து
|
||
|
ஏகாந்தவேளையிலே
|
கிளியே
|
|
|
என்
குறையைச் சொல்வேனடி
|
(34)
|
|
|
மதியாதொருவார்த்தை
வாயிருத்து வந்து விடும்
|
||
|
எதிர்த்தொன்றும்
சொல்லாரடி
|
கிளியே
|
|
|
என்றன்
மட்டும் சொந்தமடி
|
(35)
|
|
|
சீவிச்சிணுக்கெடுப்பார்
சிந்தூரப்பொட்டிடுவார்
|
||
|
மேவியிருந்திடுவார்
|
கிளியே
|
|
|
விகற்பமொன்றுமில்லையடி
|
(36)
|
|
|
வைவேன்
பிணங்கிடுவேன் மறுத்துமறுவிடுவார்
|
||
|
பொய்மட்டுங்
கூடாதடி
|
கிளியே
|
|
|
என்பொன்னின்
வடிவேலவற்கு
|
(37)
|
|
|
பேசியிருக்கின்றார்கள்
பித்தமுதனோய்களுக்கு
|
||
|
ஆசைக்கொருமருந்தைக்
|
கிளியே
|
|
|
அங்கெழுதிவைத்தாரில்லை
|
(38)
|
|
|
சரியா
யெழுதிவந்துந் தங்கவடிவேலரென்னைப்
|
||
|
பிரியாவெழுத்தெழுதக்
|
கிளியே
|
|
|
பிரமன்
மறந்தானடி
|
(39)
|
|
|
இரண்டு
என்றானப்பால் இரண்டு மொன்றாமென்றான்
|
||
|
ஒன்றென்றுமில்லை
யென்றான்
|
கிளியே
|
|
|
உணர்வுதெரியுதில்லை
|
(40)
|
|
|
தாரணியோர்மெச்சத்
தனியரசுசெய்து வந்தேன்
|
||
|
சீரலைவாய்வந்ததனால்
|
கிளியே
|
|
|
என்
சீரலைவாயாச்சுதடி
|
(41)
|
|
|
ஏகம்பேதமுனக்
கின்று மென்றுமானாலும்
|
||
|
தேகமிருக்கும்
மட்டுங்
|
கிளியே
|
|
|
சேர்ந்து
சுகித்திரென்றான்
|
(42)
|
|
|
ஆதரவாய்க்கூடிடினும்
அங்குபிரிந்திடினும்
|
||
|
பேதமற்று
வாழ்வதுவே
|
கிளியே
|
|
|
பெருவாழ்வு
என்றுசொன்னான்
|
(43)
|
|
|
நான்
பேதையாதலினால் நாதனென்ன சொன்னாலும்
|
||
|
பேதமென்
றெண்ணேனடி
|
கிளியே
|
|
|
பேதமிருக்காதடி
|
(44)
|
|
|
சேர்க்கையிலென்
கணவன் திடமென்ன சொன்னாலும்
|
||
|
ஏக்கமெடுக்குதடி
|
கிளியே
|
|
|
என்புமுருகுதடி
|
(45)
|
|
|
விட்டுத்தான்
சொல்லுகிறேன் மெள்ளமெள்ளப்பித்தேற்றிக்
|
||
|
கட்டுக்குலைத்தானடி
|
கிளியே
|
|
|
கண்டவருக்கேச்சாச்சடி
|
(46)
|
|
|
கட்டுக்
கொடிபடர்ந்த கருவூருக்காட்டுக்குள்ளே
|
||
|
விட்டுப்பிரிந்தாரடி
|
கிளியே
|
|
|
வேலவர்க்குச்
சொல்வதெவர்
|
(47)
|
|
|
சார்பிலிருப்பேன்
சலிப்புவந்தாலென் கணவர்
|
||
|
மார்பிற்றுயின்
றிடுவேன்
|
கிளியே
|
|
|
மயங்கவுமாட்டேனடி
|
(48)
|
|
|
எல்லாரைப்
போலமனத் தெண்ணமற்று வாழ்ந்திடலாங்
|
||
|
கல்லா
திருந்தேனில்லை
|
கிளியே
|
|
|
கற்று
மென்னகண்டேனடி
|
(49)
|
|
|
வைவேலெடுத்த
வென்றன் மன்னனையல்லாதெவையும்
|
||
|
பொய்யாகத்தோற்றுதடி
|
கிளியே
|
|
|
பொருத்தமுமில்லையடி
|
(50)
|
|
|
தன்னையறிந்தாற்
றனியாகாதானாலும்
|
||
|
மன்னர்மறந்திடலாமோ
|
கிளியே
|
|
|
வழக்கிடுங்
காரியமோடி
|
(51)
|
|
|
எண்ணாதவெண்ணி
யெண்ணி யீடழிந்துபோவதற்குப்
|
||
|
பெண்ணாய்பிறந்தேனடி
|
கிளியே
|
|
|
பிறக்குமுன்
செய்தவினை
|
(52)
|
|
|
கூடிச்
சுகங்கொடுத்த கொற்றமயில் வாகனனாற்
|
||
|
பாடும்புலவர்கையில்
|
கிளியே
|
|
|
பட்டோலையானேனடி
|
(53)
|
|
|
வாடியிருப்பானேன்
வலியவேநங் கணவர்
|
||
|
தேடிவருவாரென்று
|
கிளியே
|
|
|
திடமும்
பிறக்குதில்லை
|
(54)
|
|
|
பர்த்தாமனைவியென்று
பாடும் பழக்கமெல்லாங்
|
||
|
கர்த்தாவின்
சீரடியோ
|
கிளியே
|
|
|
கருத்தில்
வேறெண்ணாதபடி
|
(55)
|
|
|
என்னைமருட்டவென்று
ஏன்றமட்டும் பார்த்துவந்தாய்
|
||
|
உன்றன்
மருட்டுக்குள்ளே
|
கிளியே
|
|
|
உலகமிருக்குதடி
|
(56)
|
|
|
ஆறுமுகம்
போற்றாமல் ஆருமிங்கே வாருமென்று
|
||
|
கூறுந்திருவாய்முத்தங்
|
கிளியே
|
|
|
கொண்டினிவாழ்வதென்று
|
(57)
|
|
|
என்னோடுநீயும்
இணங்கியவரைக்கலந்தும்
|
||
|
உன்குணம்
வேறாச்சடி
|
கிளியே
|
|
|
உனக்குத்
தெரியுதில்லை
|
(58)
|
|
|
எனக்குச்சலிப்புமுனக்
கெக்களிப்பு மாயிருந்தால்
|
||
|
மனத்துயர்
போவதென்று
|
கிளியே
|
|
|
மன்னர்
மகிழ்வதென்று
|
(59)
|
|
|
மனக்கிளி
நீயொருமறுவற்ற பெருங்கிளி
|
||
|
சின்னக்கிளியானயடி
|
கிளியே
|
|
|
சேர்க்கையின்
தோஷத்தினால்
|
(60)
|
|
|
ஒருவருமறியாமல்
உள்ளுக்குட் கூடியதைத்
|
||
|
தெருத்தோறுந்
தூற்றுகிறாய்
|
கிளியே
|
|
|
செல்வரென்ன
வெண்ணாரடி
|
(61)
|
|
|
ஆசைக்கணவர்
சொன்ன அந்தரங்கச் சொல்லதனைப்
|
||
|
பேசிவிட்டோமென்றெண்ணுறாய்
|
கிளியே
|
|
|
பேசுதற்கும்
வாராதடி
|
(62)
|
|
|
வேண்டியென்ன
சொன்னாலும் மிஞ்சுகிறாய் நீயும்நானுந்
|
||
|
தோண்டியுங்கயிறுமடி
|
கிளியே
|
|
|
சொல்லியுந்
தெரியுதில்லை
|
(63)
|
|
|
எண்ணமுடிவதெல்லாம்
இந்தவுடலிற்போனால்
|
||
|
இந்தவுடலே
வருமென்று
|
கிளியே
|
|
|
யாருனன்குச்
சொன்னாரடி
|
(64)
|
|
|
தன்னிற்றிடம்
பிறந்தார் சத்தசத்தென்பதில்லை
|
||
|
சின்மயமென்பதில்லை
|
கிளியே
|
|
|
திரிபுடியுமில்லையடி
|
(65)
|
|
|
சுட்டிடுவாரவ்விடத்திற்
றூங்கிக் கிடந்திடுவார்
|
||
|
எட்டி
யெட்டிப்பார்த்திடுவார்
|
கிளியே
|
|
|
இருக்குந்திரிபுரியடி
|
(66)
|
|
|
கீழிருந்தே
போகவேணும் கிட்டிவிட்டால் மேற்குதித்துத்
|
||
|
தாழ்வில்லா
நிலையில்நிற்குங்
|
கிளியே
|
|
|
சமர்த்தேசமர்த்தடியோ
|
(67)
|
|
|
இப்படியப்படிநா
னிருந்திடவேணுமென்ற
|
||
|
தப்பிதவெண்ணமெல்லாங்
|
கிளியே
|
|
|
சற்குருமுன்
நில்லாதடி
|
(68)
|
|
|
மனமொன்று
சாக்ஷியொன்று மற்றதெல்லாம் நெடுவழி
|
||
|
மனம்போனாற்
சாக்ஷியென்ற
|
கிளியே
|
|
|
வார்த்தையும்
போகுமடி
|
(69)
|
|
|
இனிமேற்
பிறப்பதனை யாரறிபவர் அதனால்
|
||
|
யாரும்
பிரமமென்னக்
|
கிளியே
|
|
|
இயம்பிடலாமோவடி
|
(70)
|
|
|
மரிப்பாரொருவரன்றி
மனஞ்சஞ்சரித்ததென்றால்
|
||
|
மனம்போன
விடமதுவே
|
கிளியே
|
|
|
மாமவுன
மாகுமடி
|
(71)
|
|
|
பாடுவதும்
ஆடுவதும் பரநிலை கூறுவதுந்
|
||
|
தேடுவதுங்
கூடுவதுங்
|
கிளியே
|
|
|
சிந்திக்கிலகமேயடி
|
(72)
|
|
|
இரவு
பகலாகும் ஏந்திழையாரர் மோகமுற்றால்
|
||
|
பகலிரவாகுதேயடி
|
கிளியே
|
|
|
பாவியென்ன
செய்வேனடி
|
(73)
|
|
|
அறுநான்கிற்
கல்விபெற்றேன் அப்படியப்படித்தான்
|
||
|
எழுநான்
காமாண்டினிலே
|
கிளியே
|
|
|
என்னையறிந்தேனடி
|
(74)
|
|
|
ஒருசொல்
சொன்னாலதற்கே யுயிர்விடவேணுமப்பாற்
|
||
|
பலதரஞ்சுட்டிச்
சொல்லியுங்
|
கிளியே
|
|
|
பாவியுயிர்
போகுதில்லை
|
(75)
|
|
|
கண்கொடுத்து
வாழவைத்த கண்மணியோடேகூடி
|
||
|
எண்ணமெல்லாம்
முடியாவிட்டால்
|
கிளியே
|
|
|
என்குலத்திற்கேவசையடி
|
(76)
|
|
|
பெரும்பாவி
மாதேவன் பேருறுப்பெல்லாம்படைத்து
|
||
|
உருகாமனமதொன்றைக்
|
கிளியே
|
|
|
ஊடேபடைத்தானடி
|
(77)
|
|
|
பத்தஞ்சுவைத்திருக்கும்
பாக்கியத்தினாலல்ல
|
||
|
உத்தமர்
தஞ்சேர்க்கையினால்
|
கிளியே
|
|
|
ஒன்றையுமதியேனடி
|
(78)
|
|
|
அண்ணலை
நினைக்கும் போதாறாகநீர் பெருகும்
|
||
|
கண்ணுக்குத்தான்
சுபாவமோ
|
கிளியே
|
|
|
கள்ளக்கண்ணீரோவடி
|
(79)
|
|
|
கள்ளங்கபடுவைத்தே
கவல்கின்றேனழுகின்றேன்
|
||
|
உள்ளங்
கனிந்ததென்றால்
|
கிளியே
|
|
|
உத்தமரறியாரோடி
|
(80)
|
|
|
அன்பு
பெருகவவன் அன்று சொன்னதைநினைந்தால்
|
||
|
என்புகுளிருதடி
|
கிளியே
|
|
|
என்னென்னவோ
தோணுதடி
|
(81)
|
|
|
ஆகமெல்லாம்
நோவுகின்ற தவன்றந்தமையல்மிஞ்சி
|
||
|
முகத்திற்
கண்ணீர்வருகுதே
|
கிளியே
|
|
|
மூச்சுமொடுங்குதடி
|
(82)
|
|
|
சீராளன்
என்குடிச் செல்வனவன் றிருவாயை
|
||
|
வாரிமுத்தங்
கொள்வதற்குக்
|
கிளியே
|
|
|
வாயிதழ்துடிக்குதடி
|
(83)
|
|
|
உருவமுமென்
கணவனுருவல்லா வுருவைப்போற்
|
||
|
பரமசுகவடிவமே
|
கிளியே
|
|
|
பாலுந்தேனும்
போலவடி
|
(84)
|
|
|
நிமிஷம்யுகமாமென்பர்
நேரிழையா ரெல்லாரும்
|
||
|
அதுவோரளவு
பட்டதே
|
கிளியே
|
|
|
அப்படியுமில்லையடி
|
(85)
|
|
|
அரைக்கணம்
வீண்போக்கேன் அப்படியே வாழ்ந்து
|
||
|
மருவாவொரு
நாளோடே
|
கிளியே
|
|
|
வந்தேன்
வாணாளும் போகுதடி
|
(86)
|
|
|
விட்டுப்
பிரிந்தாரென்றும் விடாமலேயெப்போதுந்
|
||
|
தொட்டேயிருக்கின்றா
ரென்றுங்
|
கிளியே
|
|
|
துணிந்து
சொல்லப்படுவதில்லை
|
(87)
|
|
|
கனவு
நனவாகும் கைகலந்தாற் போற்களிப்பார்
|
||
|
நனவுகனவாகுதே
|
கிளியே
|
|
|
நானினியேது
செய்வேன்
|
(88)
|
|
|
நான்போனால்
நீபோவாய் நானிருந்தால் நீயிருப்பாய்
|
||
|
நான்தானே
போய்விடுவேன்
|
கிளியே
|
|
|
நாணந்தலைகுனியுதே
|
(89)
|
|
|
நம்முடைய
சொல்லவன்சொல் நந்தொழிலவன்றொழில்
|
||
|
நம்மாசை
யவனாசையே
|
கிளியே
|
|
|
நாமெனுமகம்
போய்விட்டால்
|
(90)
|
|
|
ஓயாத்துயர்
தனிலும் உயிர் போனாற்றேவையில்லை
|
||
|
பாய்ந்து
விடுவோமென்றாலுங்
|
கிளியே
|
|
|
பாக்கியத்தினுயிரடியோ
|
(91)
|
|
|
கருக்கொண்ட
தென்றுவன்றே கணவன்நானென்று
|
||
|
உருக்கொண்டு
நின்றாலல்லவோ
|
கிளியே
|
|
|
ஊடலெல்லாந்
தீர்த்திடலாம்
|
(92)
|
|
|
சாருந்தொழில்
கட்கெல்லாஞ் சாடைசெய்கின்றான் தன்னைக்
|
||
|
கூர்ந்தறியும்
புத்தியில்லையே
|
கிளியே
|
|
|
கொடும்பாவி
யென்னசெய்வேன்
|
(93)
|
|
|
கண்டோர்க்குப்பேரிழிவு
கலந்தார்க்கு இன்பநிலை
|
||
|
கொண்டாரைத்
தெய்வமென்று
|
கிளியே
|
|
|
கோடிமறை
கூப்பிடுதடி
|
(94)
|
|
|
இதைச்சதமென்று
கண்டோர்க் கேயது தெரியாதென்றால்
|
||
|
அதைச்சதமென்று
கண்டோர்க்கு
|
கிளியே
|
|
|
அவனிதெரியுமோடி
|
(95)
|
|
|
வேதத்தின்
சாகைகட்கு மேலானானாதலினால்
|
||
|
விசாகனெனப்பெயர்
கொண்டான்
|
கிளியே
|
|
|
வேலெடுத்தமூலகுரு
|
(96)
|
|
|
எங்கும்
நிறைந்திருப்போன் எட்டியுமெட்டாதிருப்போன்
|
||
|
குங்கும
வர்ணனடி
|
கிளியே
|
|
|
என்
குமரப்பெருமானடி
|
(97)
|
|
|
வள்ளிக்குகந்தவன்றான்
மறையின்முடிவில் வந்தான்
|
||
|
புள்ளிமயிலூர்ந்தானடி
|
கிளியே
|
|
|
போக்குவரத்தில்லானடி
|
(98)
|
|
|
கண்ணன்
கரிமுகவன் கபாலியேமுதலாம்
|
||
|
எண்ணரிய
தேவரிவனே
|
கிளியே
|
|
|
எமதாயி
சத்தியிவனே
|
(99)
|
|
|
நீ
நானெனும்போது நினக்கர்த்தமானாலது
|
||
|
தானே
நிர்வாணமென்று
|
கிளியே
|
|
|
சற்குருமுன்
சொன்னாரடி
|
(100)
|
|
|
இங்குமங்கு
மெங்குமுள்ள தேகரசவானந்தம்
|
||
|
அங்கமுமனந்தமென்றால்
|
கிளியே
|
|
|
அவதூதமாகுமென்றான்
|
(101)
|
|
|
மாமயிலோன்
வாழ்க நாம் வருந்தாதுவகைதந்த
|
||
|
நீமனமே
வாழ்ந்திருப்பாய்
|
கிளியே
|
|
|
நீடுழிகாலம்வரை
|
(102)
|
|
|
கிளிக்கண்ணி முற்றிற்று
|
||
கிளிக்கண்ணி
Subscribe to:
Comments (Atom)
No comments:
Post a Comment