|
குமரபோதம்
|
|
|
1.
|
வள்ளிக்குருகி
மலர்ப்பதஞ்சூடுமணக்குமரா
|
|
கொள்ளிக்கொடுஞ்சிறு
தேள் கொட்டியாடுங்குரங்க தென்னத்
|
|
|
துள்ளித்
துடிக்குமனத்தேற்குமா மறைசூட்டுபதம்
|
|
|
உள்ளிக்கசியக்கிடைக்குங்
கொலோ விவ்வுலகத்திடையே.
|
|
|
2.
|
வீரக்கலாபமிசை
வருவோன் வெய்ய சூர்தடிந்த
|
|
தீரப்ரதாபன்
மலரடியே யிந்ததீய வல்லற்
|
|
|
பாரப்பவக்கடனீந்தும்
புணையெனப் பற்றல் செய்யார்
|
|
|
ஆராப்பரோ
வரியேனுலகீர் சொல்லுமாய்ந்துணர்ந்தே.
|
|
|
3.
|
கணியுங்
கழையுங் கருவேலும் வேலுஞ் செங்காள்தனாமாத்
|
|
துணியுங்
குணிலின் றெளியுந்துதைபுனத்தோகைபதம்
|
|
|
பணியுங்
கீழவநினைப் பாடல் செய்யப் பயந்தசுகம்
|
|
|
பிணியும்
பெருந்துன்பமென்றாலிங் காருனைப் பேசுவதே.
|
|
|
4.
|
இந்தார்
சடிலத்ரிசூலக்குமாரிக்கு மேந்துகர
|
|
மந்தாகினிக்கு
மதலாய் நினை சொற்றவாயதனாற்
|
|
|
சிந்தா
குலத்தரை நிச்சீந்தரே யென்றுந்தீயவரை
|
|
|
யைந்தருவே
யென்று மோதி நின்றேன் நல்லவாக்குமிதே.
|
|
|
5.
|
சுதையிற்சிறந்த
கவிபாடி யாடித்துதிக்கச் சொற்ற
|
|
வதை
முற்றும் பற்றிட வில்லேனெனினும் யிலரசே
|
|
|
புதையப்புதைக்கவும்
பின்னிடங்கொள்ளி பொருத்தியெனைச்
|
|
|
சிதையிற்கிடத்தவுஞ்
செய்யாது நின்பதஞ் சேர்த்தருளே.
|
|
|
6.
|
திரங்கலும்
வாசத்துடியுஞ் செந்தேனுந் தினையுநின்பால்
|
|
வரங்
கொள்வன சரத்தாருந்திகழ்புனமானுளத்தாய்
|
|
|
உரங்குகொளவுண்டலுமுண்டபின்னொண்
டொடியார்க்குருகி
|
|
|
இரங்குலுமாயிருந்தாலென்று
வாழ்வனிவ் வேழையேனே.
|
|
|
7.
|
கண்ணென்று
பின்னரக்கண்ணுக்குக் கண்ணெனக்காட்டியிதே
|
|
நண்ணுங்கதியு
நமக்காரமு மென்றிந் நாய்க்கருளி
|
|
|
யெண்ணுமனஞ்
செத்தவே காந்தத் தென்று மிருக்கவைத்த
|
|
|
புண்ணிய
நீயலதேவர் பெற்றோர் செங்திற்புங்கவனே.
|
|
|
8.
|
செந்திலும்
வாரியலைப் பெருக்கேளு திறலுமந்தச்
|
|
சந்தன
வெற்புஞ் செழுவாலுகுழுநின் சந்நிதியு
|
|
|
முந்தவழைக்கு
முகமாறும் வேலு முண்ணூலணியும்
|
|
|
மிந்த
விப்பாவி கண்ணுள்ளேயிருக்கின்ற வென்னவிதே.
|
|
|
9.
|
எப்போது
நீயிங்குவாவென்றழைத்தற் கிசைந்தனையான்
|
|
அப்போது
முன்னிடல் சித்தங்கண்டாய் நின்னடியறியத்
|
|
|
தப்போது
வல்லனல்லேன் குமரா நின்றன்றாளிணைக்கே
|
|
|
இப்போதழைத்துக்
கொளலாமெனிற் செய்கவிட்டமுண்டே.
|
|
|
10.
|
என்போதம்
போக விருமாந்திருக்குமிருப்பை விட்டேன்
|
|
மன்போத
மானந்தம்விட்டேன் மவுனவரம்பை விட்டேன்
|
|
|
முன்போலுயாந்தவர்
கூட்டங் கண்டாடலை முற்றும் விட்டேன்
|
|
|
நின்பாதத்தன்பொன்றுமே
போது மென்னலுள் பிற நிச்சயித்தே.
|
|
|
11.
|
இன்றைக்குண
வெங்கு நாளைக்குணவெங்கு யார் கொடுப்போர்
|
|
அன்றைக்கவர்
கொடுத்தாரே யென்றெண்ணி யலைந்துலைந்து
|
|
|
பொன்றைக்கிடந்தவுடல்
வளர்த்தே னென்புதுமையிதே
|
|
|
குன்றைப்
பொருதகுழகா திருச்செந்திற்கோகிலனே.
|
|
|
12.
|
எல்லாங்
கடந்தது மெல்லாமிருப்பது மெம்மிடமென்
|
|
னுல்லாச
வளத்தை யருள்குமரா நின்னையன்றி யொன்றைப்
|
|
|
புல்லாமற்
பொய்யினை மெய்யென்று வாழும்புன்னாய் கருரிடஞ்
|
|
|
செல்லாமற்
புன்கவி சொல்லாமனிச்சிந்தை செய்தருளே.
|
|
|
13.
|
தூணிக்கண்ணீர்
விட்ட முதாலும்படித் தொண்டனென்னப்
|
|
பாணிப்பிலேனும்
பகர்ந்தாயிலை யென்னபாவஞ் சொலாய்
|
|
|
ஆணிக்கனகப்
பொருப் பேபினாகிக் கருந்தவமே
|
|
|
மாணிக்கமாமலையே
மயிலேறு மழவிடையே.
|
|
|
14.
|
கேதம்
பெருக்குமில்வில்லற வாழ்க்கையைக் கிட்டிக்கிட்டிப்
|
|
போதம்
பறிகொடுத்தேனையனேயல்லல் போதுமினி
|
|
|
நாதங்
கலகலெனுநூபுரத்து நளிர்வனசப்
|
|
|
பாதம்
புகலிடமாகச் செய்வாய் செந்திற்பண்ணவனே.
|
|
|
15.
|
துட்டக்கிராதகக்
கூற்றன் வெம்ப செஞ்சுழற்றியென்னைக்
|
|
கட்டிப்பிடித்துக்கொண்டேகவுமிங்குள்ளகாரிகையார்
|
|
|
கிட்டிபுலம்பியழவுஞ்
சிதையிற்கிடத்தியுள்ளாரிட்டப்படி
|
|
|
செய்யவுங்
காண்பையோ செந்திலீச்சுரனே.
|
|
|
16.
|
ஆயுங்கலைசொற்றவானானுக்கப்புறத்தங்ஙன்மது
|
|
பாயும்
பரம சுகங்கண்டு கண்டதைப் பற்றிப்பற்றித்
|
|
|
தேயும்
பெருமைபெற்றென்றிரண்டாமெனச் செய்யாறியாப்
|
|
|
பேயும்
பிறத்தற் இசைந்தேன் குகாநினைப் பேசவென்றே.
|
|
|
17.
|
சேய்போல
முன்னிற்கும் வேலரசே செழுநான் மறையுந்
|
|
தோயாப்பரானந்தவாரிதியாடிச்சுகித்திடவுந்
|
|
|
தாய்போலு
நின்னிருதண்டையந்தாள் பற்றிச் சார்ந்திடவு
|
|
|
நாய்
போற்றவஞ் செய்ததியாவருளாரிந்த நானிலத்தே.
|
|
|
18.
|
செய்யு
மகரக்குழையுஞ் சடானனச் செப்பமுந்தேன்
|
|
பெய்யுங்
கடப்பமணி மார்புமாறிரு பேதமதாய்க்
|
|
|
கையிற்றிகழும்
படைகளும் வேலுமென் கண்முனின்றால்
|
|
|
மையிற்றிகழ்பகடேறும்
பசாசெங்ஙண் வந்திடுமே.
|
|
|
19.
|
இகுளைக்கிதஞ்சொலியேனற்
சிறுமிதற்கின்புசொலி
|
|
முகுளப்பயோதரஞ்சேர்ந்திட்டவாவென்னைமுன்பினில்லா
|
|
|
வகிலத்தார்
சொல்லும் பழிப்பையுங் கேட்டுக் கொண்டன் பற்றபுன்
|
|
|
நகிலக்கசட்டு
மின்னார்பாலென்னெஞ்ச நணுகுவதே.
|
|
|
20.
|
பானக்கிரணத்தொருகோடிபாஸ்கரபந்தியென
|
|
மானப்பெரிய
மகுடமுஞ்சண்முகமண்டலமும்
|
|
|
வானப்பிடியுமடமானுங்கூடிடுமந்தரமு
|
|
|
நானெத்தினத்தினிற்காண
வல்லேனென்றனன் னெஞ்சமே.
|
|
|
21.
|
சுத்தமதாகுநின்வைபவநாமஞ்
சொலிநடிக்கும்
|
|
பித்தங்
கொளவுமனமுண்டு செந்திலைப் பேணிவந்து
|
|
|
நித்தந்தொழவு
மனமுண்டு மோன நிறைந்த நின்வாய்
|
|
|
முத்தங்கொளவுமன
முண்டுமால் செந்தில் முன்னவனே.
|
|
|
22.
|
பாரதிகேள்வன்
பதுமிக்கிறைவன் பவானி மன்னன்
|
|
வாரதிருக்குந்
தனிச்சிமோகன் மற்றுள்ளபலர்
|
|
|
சீரதெல்லா
முற்றும பார்த்தேன் மிகுதுன் பந்தேர்ந்து கொண்டேன்
|
|
|
சாரச
பாதத்தினன் பொன்னுமே சுகஞ்சண்முகனே.
|
|
|
23.
|
எல்லாந்தருவன்
குமரனென்றேதியு மென்றன்வழி
|
|
நில்லாய்பதைக்கின்ற
பேதை நெஞ்சே நின்னோடு நித்த
|
|
|
மில்லாத
வாதங்கள் செய்வதற்காவியிருக்கின்றதா
|
|
|
கல்லாகினுஞ்
சற்றுருகிடுமே யென்ன கர்மமிதே.
|
|
|
24.
|
பாடலஞ்
செண்பகம் பஞ்சரஞ்சேர்புனப் பைங்கிளியை
|
|
நாடல்
கொண்டேகி மணந்தோ யெனக்குயிர் நாயகமே
|
|
|
தேடல்
கொண்டல்விடத்தே யென்னையாண்ட திருவருளே
|
|
|
டூடலுங்கூடலுமாயிருந்தாலெங்ஙனுய்குவதே.
|
|
|
25.
|
ஜாலம்பயப்பயச்
செல்கின்றதுய்ந்திடக்காட்டுமறு
|
|
கூலமும்
பையவெனை வெறுக்கின்றது கேர்க்குமரா
|
|
|
சீலந்தவஞ்சற்றுமில்லேனென்னாவனெனுஞ்செறுக்கோ
|
|
|
சாலம்பலவுஞ்
செய்கின்றேனெங் கேவருஞ் சற்கதியே.
|
|
|
26.
|
குணித்தாற்குணிக்கப்
படாப்பாவஞ்செய்வதைக் கொண்டுவெறுத்
|
|
தணித்தாய்
நமனைவிட்டென்னாவியோட்டியலம் வந்திடப்
|
|
|
பிணித்தாலு
நின்றன்கை வேலாயிரண்டு பிளவுபடத்
|
|
|
துணித்தாலு
நின்னடிப்பற்று விடேன் செந்திற்சுந்தரனே.
|
|
|
27.
|
எனக்கு
நினைக்கும் பொருத்த மதிலை யெனினுமிந்த
|
|
மனக்குக்கலை
நின்வசஞ்சேர்த்துக் கொள்ளாதிமான்மதத்தாற்
|
|
|
கனக்குந்தனச்
சிறவேடிச்சியோடுஞ் கலந்தவந்தப்
|
|
|
புனக்
குன்றிலேறி பலவேட்டஞ்செய்யப் பொருந்துமிதே.
|
|
|
28.
|
மாலப்பயோதரப்
பாகீரதிசுதன் பாதமதே
|
|
காலங்கடந்தொரு
கண்டந்தான் மசுகங்கடந்து
|
|
|
மூலங்கடந்து
ளமுற்றங்கடந்து முதுமறையி
|
|
|
னோலங்கடந்து
நிற்கும் பரமாமென் வோர்ந்திலரே.
|
|
|
29.
|
கல்லாச்
சிறியனை நாயினைப் பேயினைக் கண்ணிலியைப்
|
|
பல்லாரிகழவிடக்கணும்
பொக்கனைப் பத்தர்குழுப்
|
|
|
புல்லாப்புலையனை
யோர்போதமு மற்றபோக்கிலியை
|
|
|
யெல்லோருக்கு
மேல் வைத்தையால் செந்திலா யென்ணெ திருள்ளதே.
|
|
|
30.
|
இப்போதென்னோடு
மவுனம் வைத்தாயிதிலேதுமிலை
|
|
எப்போதுமின்னிலை
நின்றிடிற்குற்றமுண்டியாதென்னிலோ
|
|
|
மைப்போதெனும்
விழியெந்தாய் குறத்திமன்னா வென்றிடு
|
|
|
மப்போதிலென்னென
வேண்டுமையேயித்தையாய்வந்து கொளே.
|
|
|
31.
|
வருத்தமில்லாது
கவிகள் வந்தானின் மலர்ப்பதத்திற்
|
|
கருத்தாயழுந்திட
மாட்டாதென்னஞ்சங்கவிக்கரசே
|
|
|
மருத்துக்கிணைய
சொற்சேர்ந்து ளதாய் மறுநாள் வரையிற்
|
|
|
றிருத்தவொரு
கவிவந்தான் மிகுபயன் செய்தருளே.
|
|
|
32.
|
ஈரமில்லாநெஞ்சை
வைத்துக் கொண்டின்னருளீந்திடென்று
|
|
லார்ரதானளிக்குந்திருவுளத்தாரயிலேந்திவந்தோய்
|
|
|
சீர்கொடு
பாடிக்கொண்டாடி நெக்காடிச் செந்தீமெழுகை
|
|
|
நேர்படைந்து
கண்ணீர்விடச் சற்று நினைந்தருளே.
|
|
|
33.
|
அல்லினுக்கண்ணனுமந்திக்குத்
தோழனுயந்தரத்து
|
|
வில்லுக்கு
பெற்றத்தகப்பனு நாய்க்கொரு மித்திரனுஞ்
|
|
|
சல்லிய
மாதர்தம் வஞ்சகச் சொற்கொரு தாய்ப்பிள்ளையுங்
|
|
|
கல்லுக்கு
நட்பனு மென்மனமே செந்திற்காங்கெயனே.
|
|
|
34.
|
ஐவர்
முடக்குஞ்சிறுகுடி நொந்திங்கழிவதன்முன்
|
|
மெய்வைத்தமோனத்தைமேவனோ
வெற்பினூடுருவ்
|
|
|
வை
வைத்த வேல்விடுசூரா கிராதகர் வாழ்த்திநிற்கு
|
|
|
நெய்
வைத்த கூந்தற் சிறுமியை வேட்டவ நின்மலனே.
|
|
|
35.
|
அலையிலையின்
மடக்கிற்று றையிலடுத்திடு காத்
|
|
தலையிற்குலையிற்
பவளஞ் செறிசெந்திற்சண்முகத்தாய்
|
|
|
நிலையுந்திடமென்னசொன்னாலும்
பொக்க நிரம்புமுடல்
|
|
|
குலையங்குலையுமென்றெண்ணியென்னாவிகுலைகின்றதே.
|
|
|
36.
|
இல்லாவுலகை
மனைவிமகாரையிதமிதென்னச்
|
|
சொல்லிக்
கொண்டாடு மணமாய் பேய் வந்து சுற்றிக்கொண்டால்
|
|
|
வெல்லம்
புண்ணுக்குக்குப் போகாது தப்பொடுவில்லடித்தால்
|
|
|
மெல்லத்தலை
சுற்றியாடும் வரந்தரும் வேலப்பனே.
|
|
|
37.
|
துறப்போமென்றாலிவ்வெனத்தைத்
துறப்பது சூர்தடிந்தோய்
|
|
மறப்போமென்றாலிவ்வெனத்தை
மறப்பது மாயை கெட
|
|
|
விறப்போமென்றாலி
வணியாரேயிறப்பவரில்வண்ணமே
|
|
|
பிறப்போமென்றாலிவணியாரே
பிறப்பவர்பேசிடிலே.
|
|
|
38.
|
உதிரச்சிரித்தவர்
கோர் ஞானதேசிக உச்சிக்குமேல்
|
|
மதியமுதே
முத்தியென்போரும் பொன்னைமகிழ்ந்து கொண்டு
|
|
|
கதிதருவோமென்றுபதேசம்வைக்குங்கபட்டுநெஞ்சப்
|
|
|
பதிதருஞானக்குருக்களென்னாலென்னபண்ணுவதே.
|
|
|
39.
|
மின்னாரழலையுமக்களப்பாவெனவிம்மலையுஞ்
|
|
சின்னாருதேடிச்சிலர்
பாடை கட்டத்திரிவதையு
|
|
|
முன்னாகக்காண்பதற்கே
யிங்கு வாழ்ந்தனமூடனெஞ்சே
|
|
|
யென்னாவிருக்கின்றதே
குவம்வா செந்திலைக்குறித்தே.
|
|
|
40.
|
ஆய்ந்து
நற்சொல்லையடுக்கிக் கவிகளறைந்தறைந்து
|
|
வாய்ந்த
நின்பேரருள் பெற்றிடநாளு மறைந்திட்டதாற்
|
|
|
தேய்ந்திடு
நுண்ணிடை வள்ளிபங்காதினந்தேனுந்தெனுயிர்
|
|
|
ஓய்ந்திட்டநாளினிலெவ்வாறு
பாடவுதவிடுமே.
|
|
|
41.
|
ஒருவரிடஞ்சென்று
கற்கவுஞான முணர்ந்திடவு
|
|
மருவருப்பானவென்னுள்ள
மதனை யறிந்து கொண்டு
|
|
|
குருவுருவாக
வந்தாண்டனையே யென்கொடுப்பனென்றோ
|
|
|
இருவருந்தேடவறியார்
பயந்த விலஞ்சியமே.
|
|
|
42.
|
தந்திட்ட
மெல்லிடையார்க்கும் பொருளுக்குந்தாரணிக்கு
|
|
நொந்திட்ட
நாளிங்க நேகமுண்டாமென்ற நோய்கண்டுநீ
|
|
|
வந்திட்ட
நாளொன்றைக்காணே னென்மட்டென்ன வஞ்சநெஞ்ச
|
|
|
பந்திட்டமாமுலைவள்ளி
பங்காள பகருதியே.
|
|
|
43.
|
பேணித்தவஞ்சே
யல்கண்டிடவந்து பிதற்றியப்பால்
|
|
வேணிப்பிறையொடுவெள்விடைமீது
விளங்கிடலும்
|
|
|
நாணிக்குணிந்த
மலைமாது மங்கள நாயகிதன்
|
|
|
காணிக்குவாய்த்தகுழந்தாயெந்நாளுனைக்
காண்பதுவே.
|
|
|
44.
|
குன்றின்
சிறகரிந்தோனயன் நீல்வணக் கோவலவன்
|
|
என்றுந்தொழுதே
மலரடி போற்றிடவேற்குங் கந்தா
|
|
|
நின்றன்புகழ்சொற்றுமொன்றுங்கிட்டாது
நித்தம்நடந்து
|
|
|
பொன்றும்
புலையரைப் போயிரந்தே னென்னபுன்மையிதே.
|
|
|
45.
|
எங்குமுள்ளா
யெனினென்னுள்ளுமாகுவை யின்னுயிராய்
|
|
தங்குவை
யென்னினென்றனுயிராகவுந்தங்குவையான்
|
|
|
இங்கென்றுனை
வருவாயென்று நத்தியிறப்ப னென்னும்
|
|
|
பங்கக்கவிசொல்லல்
பேதமையாஞ் செந்திற் பண்ணவனே.
|
|
|
46.
|
ஐயாறு
மாறுங் கடந்தப்புறத்துக்குமப்புறத்தாய்
|
|
மெய்யாய்விளங்கு
முனைப் போற்றல் செய்யும் விருப்பை விட்டுப்
|
|
|
பொய்யாம்
பிரபஞ்சந்தணில் விருப்பாயுயிர் போக்கி யென்று
|
|
|
நைவாரிப்
பேயரையா ரென்னலாஞ் செந்தினாயகனே.
|
|
|
47.
|
குடியிற்சிறந்த
குறமாதிடந்தன் குறையுரைத்துத்
|
|
துடிவிற்கையாளனென
நின்ற சுந்தரத்தோழநின்றன்
|
|
|
வடிவிற்றிலகநுதலினிலுந்தியின்
மார்பிற் பண்டி
|
|
|
மடியிற்சிறிய
வடியிலென்போத மறைந்ததுவே.
|
|
|
48.
|
என்மனஞ்சென்றுன
தீராறு தோள்களிலேறிற்றென்றன்
|
|
சொன்மலிசோனையர்
பாவிலுங் கற்பகத்
தொங்கலிலு
|
|
|
மென்மலர்
நீமத்தொடையிலுமின்னது மேம்பட்டதே
|
|
|
வன்னதேயா
மெனிலேன் வெறுத்தாய் செந்திலாண்டவனே.
|
|
|
49.
|
முன்னாகநிற்பது, நீயென்னைக் காக்க
முயன்றெனது
|
|
பின்னாக
நிற்பது செவ்வேலமுதைப்பிசைந்திருத்தப்
|
|
|
பன்னாளும்
பக்கத்திருதாய்ரெனனிலென் பாக்கியத்தான்
|
|
|
என்னவெவர்க்
குழந்தையே செந்தூரிலிருப்பவனே.
|
|
|
50.
|
கையான்
மலர்கொடு பூசித்து பாசித்துக் கைதொழுது
|
|
மெய்தான்விதிர்த்திடநாச்
சொற்குளறி வெதும்பியெ
|
|
|
னையா
செயந்திக்கிறைவா யென்றேத்தியழுதுருகலை
|
|
|
செய்யாவுனமெனக்கென்று
கிடந்தது சிருஷ்டியிலே.
|
|
|
51.
|
கண்டித்தடுத்த
சமயக் குரோதக்கசடர் தம்மைத்
|
|
துண்டித்தெதற்கு
மொருபரமே யெனுஞ் சொல்லில
|
|
|
முண்டித்து
நீசொற்றமோனவுல்லாச மொழிவரம்
|
|
|
யெண்டிக்கிலும்
பரவச் செய்வனோ செந்திலீசகரம்.
|
|
|
52.
|
மாயைக்கிடமறச்
செய்ததும் பொய்யின் மயங்கிநின்ற
|
|
சேயைப்
பரானந்த வாழ்வே நீயென்று திடமுறைத்
|
|
|
தோயைச்
செய்வித்தது மொன்றிரண்டென்று சொல்லாத
|
|
|
தாயத்தைச்
சொற்றது மோர்மொழியே செந்திற்சண்முகனே.
|
|
|
53.
|
பால
விலோசனப் பாகீரதி முடிப்பாவை பங்கன்
|
|
வேல
விசாகவிமலா வெனச் சொல்லி மெய்யணைத்துக்
|
|
|
கோலத்திருமுக
முத்தமிட்டேந்து குலவிளக்கே
|
|
|
வாலப்பருவத்திருவே
யெங்குற்றனை வந்திடையே.
|
|
|
54.
|
கங்கைதலையிற்
புராரிதன் றோழிற் கண்ணீ வெராற்
|
|
சங்கப்
பவானி முகத்திற்குறத்தி தனத்தின் மறை
|
|
|
யங்கத்தலையிற்
றிகழுந்திருப்பத மாய்ந்துணராய்
|
|
|
பங்கத்தவனென்றனுள்ளத்து
முண்டென்றன் பண்ணவனே.
|
|
|
55.
|
ஓலையுந்தூதரும்
வந்திடக் கண்டுயிரோடு முன்னம்
|
|
பாலையும்
பஞ்சையும் தேடுங்களென்று பலருரைக்கக்
|
|
|
காலையும்
நீட்டி விழியேறிய கடைவாயில் மொய்க்கத்
|
|
|
தாலையும்
நீட்டிக் கிடப்பன் கொலோ செந்திற்சண்முகனே.
|
|
|
56.
|
கட்டிவிழியினிற்
சந்தப்பிப்பின்னடைக் காயிலையைத்
|
|
தட்டி
வெள்வாயில் வைத்தண்ணேயிப்பாடையைத் தாங்குவேன்
|
|
|
கொட்டிக்
கொடுசென்று சுட்டிடுவாரது கூடுமுன்னங்
|
|
|
குட்டிக்
குறைத்தலைப்பேயீர் செந்தூரனைக் கூறுமினே.
|
|
|
57.
|
பாட்டன்
செத்தானவன் பரட்டன் செத்தான் பின்பு பாட்டிசெத்தாள்
|
|
பூட்டன்
செத்தனவனம்மை செத்தாமென்று போய்புலம்பி
|
|
|
வாம்டமுற்றே
யிருகானீட்டியம்மைகள் வாய் விட்டழக்
|
|
|
கேட்டதல்லானெஞ்சமே
யெது கேட்டுக்கிடந்தனமே.
|
|
|
58.
|
பத்தியற்றாய்
குகன் செந்தாளைப் பேணிடப்பாவிசைக்கும்
|
|
யுத்தியற்றாயுயர்ந்
தோர்குழுக்கூடிடும் யூகமற்றும்
|
|
|
சத்தியற்றே
யெனன்றுஞ் சொல்வாயவ்வண்ணஞ்சரி கண்டிலேன்
|
|
|
முத்திவிலைக்குக்
கொளலா மென்றோ வெண்ணமூட நெஞ்சே.
|
|
|
59.
|
பந்தென்பை
வாலப் பயோதரமென்பை பதுமைமுக
|
|
மிந்தென்பை
யல்குலைத்தேன்றட்டிதே யென்பை யேழை நெஞ்சே
|
|
|
யுந்தியொருபுறஞ்சீக்கட்டிநாறியொழுகிவிழும்
|
|
|
பொந்தென்பையோ
ஷண்முகரிடத்தேயென்புகலுவையே.
|
|
|
60.
|
ஊருண்டுசோறிட
வோண்டு கொண்டிடவுன் பெரிய
|
|
பேருண்டு
சொல்லவது கொண்டு முத்தியும் பெற்றிடுவேன்
|
|
|
பார்கொண்டபாச்
சொற்றிங்கே தேனுங்கேட்பனென்றெண்ணமிடேல்
|
|
|
கார்கொண்டபூண்
முலைவள்ளி பங்கா முன்பு வந்தருளே.
|
|
|
67.
|
ஆலங்கொண்டாலுங்
கொளலாஞ் சினந்தடுத்தீப்புகலாங்
|
|
காலச்
சரீரத்தை வாளாயரிந்து குவித்திடலாஞ்
|
|
|
சீலந்தந்தோங்கு
நின் சீரடிக் யேன்புசெய்பவர் போற்
|
|
|
சாலங்கொண்டார்தமைச்
சேரவொண்ணா தென்றன் சண்முகனே.
|
|
|
62.
|
அபிராமியந்தரி
சுந்தரி கொளரியமலிநித்தந்
|
|
தபியாததாண்டபியாயிபவானி
ஜடானனத்தி
|
|
|
கபிக்கநுகூலிநற்போதப்
பரமசுகாதிபற்கே
|
|
|
லபிக்குஞ்
சிவபுத்ரனென்று முன்விட்டது லெளகிகமே.
|
|
|
63
|
பட்டுக்கும்
பாவையர்கட்டுக்கு மின்னிடு பைந்தொடிகைக்
|
|
குட்டுக்கும்
பாவிகள் பாதச் சுமைக்குங் கொடியவல்குற்
|
|
|
றட்டுக்குமாளெனச்
செய்தையல்லானின்றன்றண்டையந்தான்
|
|
|
மட்டுக்கு
மாளெனச் செய்தாயிலை மயில் வாகனனே.
|
|
|
64.
|
தந்தங்கருக்கு
முன்னீ வந்து மொய்க்குமுன்றக் கண்ணிற்
|
|
சந்தனமப்பு
முன் கால் கையிற் கட்டிட்டுச் சாரவைத்துக்
|
|
|
குந்தியிருந்து
குறைத்தலைப் பேய்கள் குளறிடுமுன்
|
|
|
எந்தையைச்
செந்தனை யேற்றுமின்காளுமக்கின்பமுண்டே.
|
|
|
65.
|
கன்னலுந்தேனுங்கனியுமழுதுங்
கருப்புவட்டும்
|
|
பன்னலஞ்
செய்யுமறு சுவையும் பானவர்க்க
|
|
|
மென்னெதிர்
வந்தவையாவுங் கசந்திட்டதென்குமரா
|
|
|
உன்னருணூபுரப்
பாமிர்தந்தனை யுண்டு கண்டே.
|
|
|
66.
|
பச்சைக்கலாபமும்
பன்னிருதோளும் பதாம்புயமும்
|
|
செச்சை
யணியுந்திருமுகமாறுஞ் செவ்வேற்கரமுங்
|
|
|
கச்சையரையுமுடை
வாளுங்கண்டு களித்தவனும்
|
|
|
பிச்சை
யெடுப்பனென்றால் நல்லதானதிப்பேய்பிறப்பே.
|
|
|
67.
|
தீவினைத்தாருபவை
மோதுங் குடாரத்திருக்கரத்தைப்
|
|
பாவனையா
லென்றும் பற்றியதேதுக் குப்பாழுடலை
|
|
|
யோவலிலாவினையே
தேனுஞ் செய்பொழுதோடி வந்து
|
|
|
காவ
கொண்டாள் வதற்கே யென்ன வோர்ந்தீலை.
|
|
|
68.
|
அல்லார்
குழற்கிஞ்சுகவாய்க் குறத்தியினாவல்கொண்டு
|
|
மல்லார்
புயத்தொடும் வில்லொடு மேக வழிகொண்டநாள்
|
|
|
பல்லாயிரமடி
தாங்கிய பைம்புனத்தே பருக்கைக்
|
|
|
கல்லாகியேனுங்
கிடந்திலனே செந்திற்காங்கெயனே.
|
|
|
69.
|
நன்னுந்தெரிகிலன்றீதுந்தெரிகிலன்னான
நெறி
|
|
யொன்று
மறிகிலனென்னுடையாயிவ்வுடல் கழிந்தா
|
|
|
லென்றும்பிறந்து
வருவன்கொலோ நின்னிணையடிக்கீழ்
|
|
|
பொன்னாதிருப்பன்
கொலோ வறியேன் செந்திற்புண்ணியனே.
|
|
|
70.
|
ஐயார்ந்து
நாச்செத்திருவிழி செத்திங்கயலிருந்த
|
|
மையாருங்கண்ணியரையோ
வென்றோதி மயங்கியழுத
|
|
|
தெய்யாமுன்னின்னிருதாளுஞ்
செவ்வேலு மெழில் முகமும்
|
|
|
பொய்யாது
தோன்றிடு மோவறியேன் செந்திற் புண்ணியம்.
|
|
|
71.
|
மாயாரகிதமனோன்
மணிபால மந்தாகினிக்குஞ்
|
|
சேயாயிருந்த
பெருஞ் செல்வமே நினைச் சிந்தை செய்யு
|
|
|
மோயாப்பிணிக்கு
மின்னா ரெனப் பேர்கொண்ட வோண்டொடிக்கை
|
|
|
பேயார்தமக்கு
முருகிநின்றேனென்னபெற்றியிதே.
|
|
|
72.
|
வட்டத்தனக்குறவள்ளி
பங்காவென் வாய்க்கவியை
|
|
யிட்டம்
பெறவிங்கு கேட்பது போலெனியேன்றனது
|
|
|
கட்டநட்டத்தையுங்
கேட்டல் செய்யாய் நின்றன்னைப் பொறுப்பாக்
|
|
|
நட்டம்
வருமென்றிங் கெண்னங் கொலோ செந்தினாயகனே.
|
|
|
73.
|
எல்லாநினது
செயலெனிலென் செயயேது மில்லை
|
|
வல்லாய்
நடுவிற்கிடந்தயர்ந்தேனிந்த மாமயலைச்
|
|
|
சொல்லா
திருக்கவு மாட்டேன் சொன்னாலுளத்துன்பமென்னப்
|
|
|
பல்காலு
மஞ்சிப் பயப்படுவேன் செந்திற் பண்ணவனே.
|
|
|
74.
|
குங்குமவண்ணத்
திருகுமரா கொடியேனுயிருக்
|
|
கிங்கு
வெங்கூற்றந் தொடர்ந்திடுங்காலமெதிரினின்று
|
|
|
நங்குடித்தொண்டன்
தொடாதிருதொட்டிடினம்மயிலாற்
|
|
|
பங்கப்படுத்துவமென்றோதியேக்ருமை
பாலிப்பையே.
|
|
|
75.
|
தொல்வினைபோக
நின்மாயாரகிதசுகானுபவத்
|
|
தல்லும்பகலுமிருந்திடநித்தமிங்காய்ந்துணருங்
|
|
|
கல்வியதே
கல்விமற்றையகல்விகள் கன்மவல்லற்
|
|
|
புல்லியதீநெறிக்கேயுய்ப்பவாம்செந்திற்புண்ணியனே.
|
|
|
76.
|
சோதிடம்பக்ஷிசரநூல்
வயித்தியஞ் சூக்கு கர்மம்
|
|
ஆதவனன்னிலை
மாரண மந்த்ரமறைந்ததெல்லாம்
|
|
|
பாதக
நம்முடல் சாமென்று நிச்சயம் பற்றுதற்காம்
|
|
|
பாதனை
யென்றுணர்ந்தேங்குமரேசனைப் போற்றுமினே.
|
|
|
77.
|
உடலுக்குட்சூலை
படுவன் கவுசிகை குட்டங்குன்மம்
|
|
உடலைப்பவுந்திர
மீழையிளைப்பின்னபற்றிநம்ம
|
|
|
துடலைக்குருக்கியுயிருண்ணச்
சாவம்பின்னுற்றவர்கள்
|
|
|
சுடலைக்கொடுப்பதுச்சத்தியஞ்செந்திலைச்சொல்லுமினே.
|
|
|
78.
|
என்
மனைமக்களு நின்னவர் காயமிருந்த பொறி
|
|
நன்மதிசீவனு
நின்னவைநாடொறுநாவில் வருஞ்
|
|
|
சொன்மலிபாக்களுநின்னவை
நானறினந்தோய்ந்துவருஞ்
|
|
|
சின்மயவாழ்வு
நினதே செந்தூரிற் சிவக்கொழுந்தே.
|
|
|
79.
|
உண்ணலும்
பூசியுடுத்தலுஞ் சாரியுறங்கலுபின்
|
|
னெண்ணலு
மெண்ணியிசைபாடி யாடலுமிக்குடும்பி
|
|
|
நண்ணலுமக்கடனைப்
பெற்றெடுத்தலும் நாரிக்கின்பம்
|
|
|
பண்ணலு
நின்றனக்காயே செந்தூரிற்பரானந்தனே.
|
|
|
80.
|
ஜெகமற்றுச்
சிந்தையற் றெல்லாமு மற்றுத் திகம்பரியாய்
|
|
மிகநோக்கிநானென்னிரு
கண்ணிடத்திலுமுத்து திர்த்துன்
|
|
|
அகநோக்கம்
பெற்றுக்குறு நகையோ டொன்றைச் சுட்டலற்ற
|
|
|
மிகநோக்கி
லென்றிலிருப்பேன் செந்திலாய் நித்தியானந்தனே.
|
|
|
81.
|
காட்டத்தை
யொப்பக்கிடந்தன்று நீயங்கு காட்டித்தந்த
|
|
நாட்டமதாய்
நிற்குநாளையிந்நாளினவிலுதியால்
|
|
|
வாட்டமில்லாத்தன
வேடிச்சிகேள் வமனோ மயமுங்
|
|
|
கூட்டுவிஞ்
ஞான முமானந்தமுஞ் சொன்ன கோகிலமே.
|
|
|
82.
|
பொல்லாய்
மடநெஞ்சமே யுன்றன் சிந்தனைபோக்கிக் கொண்டா
|
|
லெல்லா
நலனும் பெறலாமதற்கிடையூ றென்றில்லை
|
|
|
யுல்லாச
நம்மிடத் தெல்லாமு முண்டதை யூன்றிச் செல்ல
|
|
|
வல்லாளன்
செந்திற்கு குருநாதனுண்டு மயங்கலையே.
|
|
|
83.
|
மோன
பரானந்தவாரிதியாடி முடிந்தபின்னர்
|
|
தானந்தனக்
கென்றதீத மதாகிடச் சம்மதித்து
|
|
|
நான்மறையுங்குமரேசனுஞ்
சொன்னதல்லா னெஞ்சமே
|
|
|
ஆனந்தத்தொன்று
மதீதமின்றாலிதை யாய்ந்து கொள்ளே.
|
|
|
84.
|
வெங்காமப்
பண்டப்பெருங்கப்பலே விகற்பத்தருவே
|
|
சங்கற்பசாகரமேயவிவேக
சரபுஞ்சமே
|
|
|
மங்குமஞ்ஞானமகமேருவே
கொடுமாயைமைந்தா
|
|
|
வெங்கோடுகின்றனை
நீயிங்குவா செந்திற்கேகிடவே.
|
|
|
85.
|
ஆலென்பை
நீண்ட வயிலென்பை தேவவமிர்த மெய்யை
|
|
சேலென்பை
பாவிகள் கண்களை யன்னவர் தீயசொல்லைப்
|
|
|
பாலென்பை
கண்டென்யை மெய்ஞ்ஞான மூறிப்படர்ந்த வெற்றி
|
|
|
வேலென்ன
மட்டு நின்னாச் செத்ததோ வெல்வினை நெஞ்சமே.
|
|
|
86.
|
நானென்று
போவனென்றெண்ணா திருசுகம் நங்குமரன்
|
|
வானெனவந்துட்புறம்
பெனல் போகவளைந்து கொள்வான்
|
|
|
கூன்காந்தப்பாண்டத்திடு
மூசியாய்ப்பின் கொதுகெனவாய்த்
|
|
|
தான்போன
போக்குந்தெறியாது போவை தனிநெஞ்சமே.
|
|
|
87.
|
ககராஜராஜன்
மறைராஜன் போற்று கனைகழலான்
|
|
நகராஜன்
பெற்ற மகதராசி போற்றிடுநங்குமரன்
|
|
|
மகராஜராஜனவனை
யல்லாலிந்த மானிலத்தே
|
|
|
சுகராஜனாய்
நம்மை வாழச் செய்தார் ரெவர் சொல் நெஞ்சமே.
|
|
|
88.
|
காலமகாலமிரண்டுங்
கடந்த கடவுணின்றன்
|
|
கோலமுணர்ந்திலன்
சின்னூலைக்கற்றுச் சில குறியிட்
|
|
|
டேலு
நாதியனே யென்பனாதியென்றென்றுஞ் சொல்வேன்
|
|
|
மூலமறைக்குமப்பாலேயிங்
கென்னை முனியலையே.
|
|
|
89.
|
கடலேறிமன்னர்
சபையேறிநீள் கழையேறிப்பனை
|
|
மடலேறியுச்சிமலை
யேறித்தேடிவருந்துகின்றா
|
|
|
ரடலேறிய
வடிவேலாவிதென்ன வகிலத்தவ
|
|
|
ருடலேறிய
வுயிரோர்பிடி சோறுண்ப தோர்ந்திலரே.
|
|
|
90.
|
கைக்கட்டுங்
காற்கட்டுங் கட்டிக்கிடத்திக் கடக்கு மட்டிற்
|
|
பொய்க்கொட்டு
கொட்டிக் சுடலைக்குக் கொண்டுபுகா முன்வரார்
|
|
|
செய்கொட்டிச்
சூற்சங்கமேறுந்திருச் செந்திற்சேவகனை
|
|
|
மெய்கட்டழகனைவேலனைப்பாடுமின்மேற்கதிக்கே.
|
|
|
91.
|
காலாயுதக்
கொடி வேலா விதென்ன கதியறிய
|
|
வேலாதவென்னையிம்மா
யைப்பிசா சோடிணைத்து விட்டாய்
|
|
|
பாலாய்வருமென்
கனத்தடித்தாற் சிறுபாலகனா
|
|
|
னாலாயிரந்தரஞ்
சொன்னுலுங்கேட்கிலை நல்லதன்றே.
|
|
|
92.
|
வேண்டாம்
விருப்பும் வெறுப்பும் யுமென்று லிங்த வேதைமனம்
|
|
தூண்டா
நின்றோர் பொருளைப் பற்றியாடி துடிக்கின்றது
|
|
|
மாண்டாலு
மத்தை விடுவனோ வென்று வழக்கிடுதே
|
|
|
ஆண்டாய்நீ
முற்று மறியாததல்லவயிலரசே.
|
|
|
93.
|
மநுமுதல்யாரு
மடிந்ததைக்கேட்டும் புன்மாயையிந்தத்
|
|
தநுவொன்றுஞ்
சாதலிலை யென்றுநெஞ்சஞ் சலிக்கின்றது
|
|
|
மினுகெனு
மிவ்வுடல் சாஞ் சாருமென்றெண்ணிடுமேன் மதிக்கே
|
|
|
யநுதாபமுற்றும்
வரச் செய்குவாய் செந்திலாண்டவனே.
|
|
|
94.
|
காலத்திரிசூலந்தனக்குமஞ்சேன்
சற்கதியழிக்குங்
|
|
கோலப்பயோதரத்தார்க்குமஞ்சேன்
கொடுஞ்சூரைவென்ற
|
|
|
வேலப்பநின்றன்றிருநாமந்தன்னை
விளம்பல் செய்யா
|
|
|
மூலப்பகுதயிருட்டருக்
கஞ்சுவன் முற்றிலுமே.
|
|
|
95.
|
ஆகின்னா
நாளுமிருக்கின்றது செல்வராயிருந்து
|
|
சாகின்ற
நாளுமிருக்கின்றது சத்துப்போயுடலம்
|
|
|
வேகின்ற
நாளுமிருக்கின்றது நம்மை விட்டிங்கொன்றும்
|
|
|
போகின்றதில்லை
கண்டீர் செந்தூரனைப் போற்றுமினே.
|
|
|
96.
|
ஊழென்பதில்லை
நம்மாசை கெட்டாலிழிவோதி நிற்குந்
|
|
தாழ்
வென்பதில்லையகம் போயினாலென்றனிநெஞ்சமே
|
|
|
வாழ்வென்பதில்லையொரு
படித்தா நிலைவந்ததென்றற்
|
|
|
பாழென்பதில்லை
பரிபூரண மெங்கும்படர்ந்திடிலே.
|
|
|
97.
|
ஞானமும்
பெய்யனு சந்தானமும் பொய்யங்கு நாங்குளித்த
|
|
மோனமும்
பொய்யகண்டாகார விர்த்திமுன்னிட்டு நின்ற
|
|
|
வானமும்
பொய்மற்று மெல்லாமும் பொய் மதிப்பேதுமற்ற
|
|
|
வானந்த
மொன்றும் மெய்யாம் நெஞ்சமே யிரையாந்து கொள்ளே.
|
|
|
98.
|
நிராமய
நிர்த்தொந்த நிர்த்தோஷநித்ய நிவாரண
|
|
அராகம
மலது விரோதமாயைக் கதீதமதாம்
|
|
|
பராபரம்
நித்தியஞ் சூன்யத்தையுண்டிடு பாதமதும்
|
|
|
தராதலம்
போற்றுங்குமரேசன்சொன்னதனிப்பொருளே.
|
|
|
99.
|
கங்காதரன்
கண்ணன் வேதன்றனபதி கண்ணதிகன்
|
|
தங்கும்
வடுகருருத்திவர்பூதச் சதாகதியோர்
|
|
|
அங்குளதேவர்
முனிவருரகரகிலத்துள்ளோர்
|
|
|
எங்குளருந்தங்கலெம்மிடத்தென்றனனென்குருவே.
|
|
|
100.
|
வேதம்பூவாணமிதிகாசஞ்
சாஸ்த்வம் வியன் பலநூல்
|
|
யாதுமொருங்குத்
தொடர்ந்தோடித் தேடியுமெட்டவொண்ணா
|
|
|
பாதன்மரமணிதேகுறிநீகிட்டிப்பார்குமரா
|
|
|
போதம்
பெருகுமென்றான் நெஞ்சமே செந்திற் புண்ணியனே.
|
|
|
குமரபோதம் முற்றிற்று
|
குமரபோதம்
Subscribe to:
Comments (Atom)