|
திருப்பரங்குன்றப்
பதிகம்
|
|
இரட்டையாசிரிய விருத்தம்
|
|
|
|
|
|
1.
|
பொன்மயிலுலவிவரு சூர்வென்ற
வீரனீ பூரணானக்த வருளாற்
|
|
பொருளாவியுடன் மூன்று நின்றனக்கீந்திட்ட
பொருவிலாவொருதீரன் நான்
|
|
இன்னல் தருமாணவ விருட்போர்வை
கீறியென் இளைப்பெலா மாறக்கரத்
|
|
தேந்தியருளமுதீந்த வன்னைநீ
பிள்ளைநானிப்படி யெலாமிருந்தும்
|
|
கன்ம மலவாதனைகள்
சற்றுமஞ்சாமலொருகைபார்ப்பமென்று மெள்ளக்
|
|
கண்பார்த்தொளித்தெனது வளனெலாமினிதிற்
கவர்ந்து கொண்டர்புரம்போய்
|
|
நன்னகைபுரிந்திடவும் வந்ததே
தெய்வமே நற்பரங்கிரியுலாவு
|
|
நாதனே வேதமறை முடிவான பரவெளியினடமாடும்
வடிவேலனே.
|
|
|
|
2.
|
உலகவர்களோடிங்கு பழகுவதனாவென்று
மொளியாது வளர்துன்பமும்
|
|
உன்னருட்பூரணமதாயெங்கு மாகாத
வொப்பிலாவொரு துன்பமும்
|
|
கலகமதனம்படர வருதுன்பமுங்கொடிய
கன்மவாதனையரவு போற்
|
|
கட்படம் விரித்தெனைச் சீறவருதுன்பமுங்
காணாததற்குமேலா
|
|
இலகுமுலகன்னை மனைமக்கள்
மெய்யென்றுளத் தேங்கமாமாயை செய்யும்
|
|
இடையறாத் துன்பமுங் கூடியெளியேன்றனை
யெறும்புண்ட நாங்குழுப்போல்
|
|
நலிய வாட்டிடுகின்றவே
யென்னசெய்குவேன் நற்பரங்கிரியுலாவு
|
|
நாதனே வேதமறை முடிவான பரவெளியினடமாடும்
வடிவேலனே.
|
|
|
|
3.
|
நீபமலர்மார்பமு நாடியவர்கலிகீறு
நெடுவேலும் புயம்போல்
|
|
நிகழ்சடானனவழகுமுதயகிரியிற்
கதிரை நிகருகுண்டல நிரைகளும்
|
|
பாபவிருள் சிதறவருள்
முதிரப்பழுத்தொழுகு பன்னிருவிழிக்கருணையும்
|
|
பவளாசலப்புயமீராறு மியானெனும்
பற்றறுத்தன் புருவமாய்த்
|
|
தாபமுறு மடியனிருதயமும்
விட்டகலாத தண்டையும் பொற்சரணமும்
|
|
தாவி வருமயிலுமொரு வெண்
கோதியுங்கனவு தன்னினுமியான் மறக்கேன்
|
|
நாபன்மறை நாபனொடு சுரர்தேடு
தெய்வமே நற்பரங்கிரியுலாவு
|
|
நாதனே வேதமறை முடிவான பரவெளியினடமாடும்
வடிவேலனே.
|
|
|
|
4.
|
ஊன்றினால் நில்லாத திம்மாயை யெங்கணுமுண்டில்லையென்ன
நிறைவா
|
|
முன்னதருளிவை யிரண்டினிவந்த
மாயையை யுபசரித்துலகிலுள்ளோர்
|
|
ஏன்றமட்டிலுமிந்த வாழ்வு
பெற்றமைதி யோடேமாப்பில் வாழ்கின்றார்
|
|
ஏழையோ நின்னருளை யோயாது
பாசித்து மிற்றவரையொன்று மறியேன்
|
|
ஆன்றமறையருணாடிலருளாவரென்றவுரையடியனேன்
மட்டுமிலையோ
|
|
அல்லதிம்மாயைவலியருள் வலியை
வென்ற தோவதுவுமின்றென்னிலறியா
|
|
நான்றவ முயன்றநெறி நெறியல்லவோ
புகல்வை நற்பரங்கிரியுலாவு
|
|
நாதனே வேதமறை முடிவான
பரவெளியினடமாடும் வடிவேலனே.
|
|
|
|
5.
|
பட்டதெல்லாம்போது மாயையே போவென்று பலதரஞ்சொல்லினாலும்
|
|
பரிகாசமாயெண்ணிமீளவுஞ் சூழ்கின்ற
பாரிலுள்ளோர்கள் தம்மோ
|
|
டிட்டமாயில்லறவழப்பமதை
யோதினாலிவனினைவு வேற தென்ன
|
|
ஏதுமொழியாதகன்றப் புறம்போயென்னையிகழும்
வழி தேடுகின்றார்
|
|
அட்டமாசித்திபெறு நின்னன்பர்
பாலேகியடி பணியினிவன் வஞ்சகன்
|
|
ஆகுமென்னோதிடாருள்ளபடியிவையெலாமதுதினங்கண்டு
நொந்து
|
|
நட்டநடுவினின் நடைப்பிணமாகி
வாழ்வதோ நற்பரங் கிரியுலாவு
|
|
நாதனே வேதமறை முடிவான பரவெளியினடமாடும்
வடிவேலனே.
|
|
|
|
6.
|
கலகலெனவொரு கோடிகவிகள் சொன்னாலுமென் காலலோடு பேதை மனதைக்
|
|
கட்டியொரு கிரியோகமுற்றாலுமென்வறிய
காய் கனிகளுண்டாலு மென்
|
|
உலகாசை விட்டினியவருளாசை யுற்று
நின்றுருகியனன் மெழுகதாகி
|
|
உள்ளுடைந்தது கண்டு பேரருட்பிரகாச
முள்ளவிருளைப்பருகிடத்
|
|
தலமுள்ளபடி கண்டு
மெள்ளவங்கேநின்னு தற்போதமதையருத்தித்
|
|
தானுமெதிரும் போகவங்குபோயினதென்ற
தன்மையுமறிந்திடாத
|
|
நலமொன்னுமே
முத்தியாமென்றுரைத்தவா நற்பரங்கிரியுலாவு
|
|
நாதனே வேதமறை முடிவான பரவெளியினடமாடும்
வடிவேலனே.
|
|
|
|
7.
|
கெண்டையங்கண்ணியர்கள் மயல்கொஞ்ச
மனதனிற்கிட்டிவிடின் மென்னமென்ன
|
|
கெட்டுவிடுமப்பானன்னிலையடையலாமென்று
கேட்டேனெனெண்ணமாறாது
|
|
விஷயபண்டையர்கள் சொன்ன
காமாதிமுதலுள்ளபற்பல விஷயமொவ்வொன்றையும்
|
|
பார்க்கிற்றுரும்புதூணாகவுந்தூணதோ
பருமரமதாகவும் மேற்
|
|
கொண்டந்தமரமலையதாகவுமலை பெரிய
கொடுமுடியின் மேரு வாயுங்
|
|
குலவியினம் வளர்கின்ற தென்
செய்வேன் தெய்வமே வென்னறிவானது
|
|
கண்டளந்திடுநாழியாச் சுதே
யோகர்வளர் நற்பரங்கிரியுலாவு
|
|
நாதனே வேதமறை முடிவான பரவெளியினடமாடும்
வடிவேலனே.
|
|
|
|
8.
|
பன்னாளூமுன்னோடு வாதாடியுங்
கவிகள்பாடியு முடலமெல்லாம்
|
|
படபடெனவுளமுருக விருகணீ ரோடிடப்பரவசமதாகி நின்றும்
|
|
என்னாளினீயெனக்
கருள்புரிவையென்றுன்னை யிதமதாய்க் கேட்டுநொந்து
|
|
மிற்றவரையெனதுளமுமாளவிலை
நற்சுகமுமெய்தவிலையாதயாலே
|
|
யுன்பொருளிவ்வுடலென்ன நின்ற
நிலை தன்னைவிட்டூனுடம் பென்பொருளென
|
|
வுன்னியிதை விட்டுவிட்டப்பாற்கிடைக்கின்றவுடலியானாலு
மருளின்
|
|
நன்மை
பெறலாகுமென்றெண்ணுகின்றேனரிய நற்பரங்கிரியுலாவு
|
|
நாதனே வேதமறை முடிவான பரவெளியினடமாடும்
வடிவேலனே.
|
|
|
|
9.
|
அத்தணியுமிடையிலே வுடையிலே தொடையிலேவணிநடையிலே சடையிலே
|
|
ஆடுநயமொழியிலே தளதளப்பாகுமுகமதியியே
யமுதமுமிழ்வெண்
|
|
முத்தணியும் நகையிலே மூலையிலே
தலையிலே முழுமோச நிலையிலே யென்
|
|
மூடமன மோகித் தெதிர்த்தெதிர்த்தென்னோடு
முடியாது போராடுதே
|
|
கத்தனீயறியாததல்ல நான்
நாமினுங்கடையான பாவியெனினுங்
|
|
கருணை வைத்தாளுவது மூனையலால்
வேறு கதிகாட்டுவாரெவரையனே
|
|
நத்தனையன்றியாத முதல்வர்க்கு
முதல்வனே நற்பரங்கிரியுலாவு
|
|
நாதனே வேதமறை முடிவான பரவெளியினடமாடும்வடிவேலனே.
|
|
|
|
10.
|
ஊனொழுக வொருபுறங்கிருமிகருணைத் தொழுகவுட்கி நாறும் விடக்கை
|
|
யொப்பிலாவழு தென்ன நத்தியுண்டடி
யற்றுலர்ந்த வொரு பழுமரம் போற்
|
|
றான்முடிவில் வீழுமிப்பாழுடல்
வளர்த்திடுஞ் சவசமில்லாப்புலையனைத்
|
|
தையலாரல் குலாங்குழியிலிழி
நாற்ற நீர்தனை மோந்து திரிநாயினைத்
|
|
தேனொழுகு கவிகள் சொலு
நின்னருளொதுக் கிடஞ்சேர்ந்து பேதங்கடந்து
|
|
செத்துத்திரிந்திடாப் பாழ்ங்கொடியனைக்
கொடியதீய போகத்தையுண்ண
|
|
நானென்றெழுந்துவருதீயேனையாள்வையோ
நற்பரங்கிரியுலாவு
|
|
நாதனே வேதமறை முடிவான பரவெளியினடமாடும்
வடிவேலனே.
|
|
|
|
11.
|
புல்லறிவரோடென்று மேலாது மாயமாம் பொய்ப்போக மெய்யெனாது
|
|
போக்குவரவற்ற பரிபூரணானந்த
நிலைபோந்து மெய்த்தேவராய்
|
|
வல்லவரினஞ் சேர்ந்து வாழ்த்திய
வரிருபாதமலர்சூடி நல்லூழியம்
|
|
வாஞ்சை யொடு மவரடியிலோயாது
மேலவர் வாக்கிலூறுமமுதை
|
|
மெல்லமெலவுண்டினப்பாறிப்ரமானந்த
மேவியென்னாளுமரிய
|
|
மெய்ஞ்ஞானமான பயிர் தழையவருள்
மழை பொழியுமெய்யன்பருள்ளிலங்கு
|
|
நல்லறிவினுருவாகி வாழச்
செய்யையனே நற்பரங்கிரியுலாவு
|
|
நாதனே வேதமறை முடிவான பரவெளியினடமாடும்
வடிவேலனே.
|
|
|
|
திருப்பரங்குன்றப்
பதிகம் முற்றிற்று
|