|
பூரணக்கண்ணி
|
|
|
|
|
பொன்போல் மணிபோற் புறம்பிற் பலபொருட்போ
|
|
|
லென்போலிலங்கிநின்றா யேகபரி பூரணமே
|
(1)
|
|
|
|
|
ஆடாத கூத்தெல்லா மாடிப்பரதவிக்கு
|
|
|
மூடமன தோடலைய முற்றுமோ பூரணமே
|
(2)
|
|
|
|
|
எள்ளுக்ககுளென்ணெயென வெங்கெங்குந்தானாகி
|
|
|
யுள்ளுக்குளின்னமுதொத்தூறிநின்றாய் பூரணமே
|
(3)
|
|
|
|
|
ஆசைக் கொடும்பாச மற்றுவிடாயாறிப்
|
|
|
பேசாதவாழ்வு பெறுவேனொ பூரணமே
|
(4)
|
|
|
|
|
கிட்டவிருந்தெல்லாங் கேட்டிருந்துங்
கேளார்போற்
|
|
|
கட்டவினைக்காளாகக் காட்டியதேன் பூரணமே
|
(5)
|
|
|
|
|
எல்லாங்கவர்ந்து நின்று மென்னைக்
கவருகில்லாய்
|
|
|
பொல்லேன் பிழையைப் பொறுப்பதென்று பூரணமே
|
(6)
|
|
|
|
|
ஆங்காரப்பேய்வந் ததட்டிப் பிதற்றுதெல்லாம்
|
|
|
போங்காலமென்று புகலுவாய் பூரணமே
|
(7)
|
|
|
|
|
எல்லாரும் வாழ்கின்றா ரேழையொருவன் மட்டும்
|
|
|
புல்லறிவனாகிப் புலம்புகின்றேன் பூரணமே
|
(8)
|
|
|
|
|
கள்ளக்கொடும்புலனுங் காமாதிமெய்க்குலமுந்
|
|
|
துள்ளுமனமுந் துணையாமோ பூரணமே
|
(9)
|
|
|
|
|
ஆய்ந்து மலரோனளித்த வாயுளெல்லாமிக்காமப்
|
|
|
பேய்க்குவிருந்திட்டலையும் பெற்றியென்னே
பூரணமே
|
(10)
|
|
|
|
|
அந்திப்பிறைநுதலார்க் காவலா யோர்மரம்போற்
|
|
|
புந்திகெட்டு நின்றதெல்லாம் போதாதோ பூரணமே
|
(11)
|
|
|
|
|
ஆசாரநேசமுள்ள தத்தனையுமாற்றியபுன்
|
|
|
வாசனைப்பேயென்னை மறக்குமோ பூரணமே
|
(12)
|
|
|
|
|
நினையாச் சனன நிகழக்காய் காய்க்கும்
|
|
|
வினைமாமரவேர்கள் வீவதென்று பூரணமே
|
(13)
|
|
|
|
|
பார்ப்பதார் பார்த்திங்கு
பற்றுபொருளியாதுமெல்ல
|
|
|
வீர்ப்பதாரெல்லா மியம்புவாய் பூரணமே
|
(14)
|
|
|
|
|
தள்ளரிபாசத் தளைபோய்ப்பரானந்தக்
|
|
|
கொள்ளைவெள்ளமூழ்கிக் குளிப்பேனோ பூரணமே
|
(15)
|
|
|
|
|
கற்றிருந்துங் கேட்டதெல்லாங் காட்டுத்கெரித்த
நிலா
|
|
|
இற்றைவரை யென்னபல னெய்தினேன் பூரணமே
|
(16)
|
|
|
|
|
வள்ளமுலைப்பால்குடிப்பான் வந்து முந்தி
பற்றியழும்
|
|
|
பிள்ளைதனைத்தாய்வெறுக்கும் பெற்றியென்னே
பூரணமே
|
(17)
|
|
|
|
|
நெஞ்சறியாப்பேயாட்டு நீலிகற்றநாடகமு
|
|
|
மஞ்சாது நெஞ்சமிங்கே யாடுவதேன் பூரணமே
|
(18)
|
|
|
|
|
பொல்லாப்புலன்களோடு போந்திங் குழல்வதினிற்
|
|
|
கல்லாய்ப்பிறக்கினன்மை கண்டிருப்பேன் பூரணமே
|
(19)
|
|
|
|
|
ஆடுமுயிருமதை நோக்குமோரறிவுங்
|
|
|
கூடஸ்தருநீயாய்க் கூறலாம் பூரணமே
|
(20)
|
|
|
|
|
தூரமுள்ள தல்லவெளி தோன்றாப்பொருளுமல்ல
|
|
|
ஆருமுணராதலைவதேன் பூரணமே
|
(21)
|
|
|
|
|
என்னைவேறாக்கி யிந்த வீடணையில்விட்டதுவு
|
|
|
முன்னைவினைதானோ மொழிகுவாய் பூரணமே
|
(22)
|
|
|
|
|
முந்தைவினைக் கொடியன் மூர்க்கமெல்லாம்
பேதைமனத்
|
|
|
தந்தமட்டோ வப்பாலுக்கப்பாலோ பூரணமே
|
(23)
|
|
|
|
|
பக்கத்துலகர் வினைப் பாழனிவ னென்றுரைக்குந்
|
|
|
துக்கத்தை யாரோடு சொல்லுவேன் பூரணமே
|
(24)
|
|
|
|
|
நாற்றச்சரீரமதை நானாய்க்கருதியலைந்
|
|
|
தாற்றநாட்போக்கி விட்டேனையையோ பூரணமே
|
(25)
|
|
|
|
|
தேடாத்திரவியமே தேவருண்ணாத்தெள்ளமுதே
|
|
|
வாடாமலரே முன்வாராயோ பூரணமே
|
(26)
|
|
|
|
|
எங்கும் நிறைந்தவுன்னை யேத்தவறியாமலையோ
|
|
|
இங்குமட்டுமுள்ளாயென் றெண்ணினேன் பூரணமே
|
(27)
|
|
|
|
|
மெய்கண்டாற்பொய்மை வெருண்டோடுமென்பதெல்லாம்
|
|
|
பொய்மட்டுமல்ல வெறும்பொய்யாச்சே பூரணமே
|
(28)
|
|
|
|
|
காமக்கொடும் புலையன்கட்டோடெனைக்கெடுத்து
|
|
|
நாமமறச்செய்ய நடிக்கின்றான் பூரணமே
|
(29)
|
|
|
|
|
மூண்டகுடும்பத்தின் மூத்தோனென்றூர்மதிக்கப்
|
|
|
பூண்டிருந்தகோலமெல்லாம் போதாதோ பூரணமே
|
(30)
|
|
|
|
|
ஆயத்தார் போலமறித்தன்றன்று கூலிகொளுங்
|
|
|
காயக்கொடுமை கடப்பேனோ பூரணமே
|
(31)
|
|
|
|
|
வட்டவார் பூண்மலையார் மையலாலன்றுமுதற்
|
|
|
பட்டதெல்லா மெண்ணிப்பதைக்கின்றேன் பூரணமே
|
(32)
|
|
|
|
|
பத்திநெறி சென்றறியேன் பண்பாடக் கற்றறியேன்
|
|
|
முத்திநெறிக்கெவ்வாறு முன்னுகின்றேன் பூரணமே
|
(33)
|
|
|
|
|
சிந்துகனல்விழியான்றீய நமன்கோபமெல்லா
|
|
|
மிந்தவுடன் மட்டல்லாலென்செய்யும் பூரணமே
|
(34)
|
|
|
|
|
கோடைக்குருந்தேபோற் கோலங்குலையவென்னை
|
|
|
வாடவைப்பதெல்லாம் வழக்காமோ பூரணமே
|
(35)
|
|
|
|
|
காய் மும்மலப்பிணக்கின் கட்டெல்லாம்வெந்தொழிய
|
|
|
வாய்திறந்தோர்வார்த்தை வழங்கலென்று பூரணமே
|
(36)
|
|
|
|
|
ஆர்க்குநமன்குறும் புக்கஞ்சாதயராது
|
|
|
பேர்க்குடியாய் நானும் பிழைப்பேனோ பூரணமே
|
(37)
|
|
|
|
|
கிட்டிவந்து சொன்னபடி கேட்கவந்தபேதை நெஞ்சைக்
|
|
|
கட்டவறியாது கலங்குகின்றேன் பூரணமே
|
(38)
|
|
|
|
|
ஊன்விரும்புநாய்க்காயுனது திருவாய்மலர்ந்தா
|
|
|
லேனோரிகழ்வரென்ன வெண்ணினையோ பூரணமே
|
(39)
|
|
|
|
|
வீட்டுப்புறவின்வலிமேம் பட்டிருக்கிலன்றோ
|
|
|
காட்டுப்புறவையெல்லாங் கட்டலாம் பூரணமே
|
(40)
|
|
|
|
|
ஊரார்களொப்புவண்ணமுண்டு டுத்துவாழ்பவனு
|
|
|
மாறாகநொந்திங்கழுகின்றேன் பூரணமே
|
(41)
|
|
|
|
|
எட்டுக் கொடாமலென்னோடேன்றதெல்லாம் பார்க்கும்
வினைக்
|
|
|
கட்டுக்குலைந்திடவுங் காண்பேனோ பூரணமே
|
(42)
|
|
|
|
|
நீயுரைக்கச்சற்று நினைக்காயேல்மற்றியாவர்
|
|
|
வாயுரைக்கக் கேட்டுமயல்தவிர்வேன் பூரணமே
|
(43)
|
|
|
|
|
கோனாயொருகுடைக்கீழ்க் கோலோச்சுநீசலித்தோ
|
|
|
நானெனற் கோவலிமைநல்கினாய் பூரணமே
|
(44)
|
|
|
|
|
வாடுவதும்பாடுவதுமாறாது கண்ணீரா
|
|
|
றோடுவதுமுள்ளபடிக் குண்மையன்றோ பூரணமே
|
(45)
|
|
|
|
|
ஆடைமணிப்பூணு மாடரங்குமாளிகையுங்
|
|
|
கூடவருந்துணையோ கூறுவாய் பூரணமே
|
(46)
|
|
|
|
|
பாமரனாய்வாழ்ந்தாலும் பண்புண்டஃதைவிட்டுத்
|
|
|
தாமரையினீர் போற்றவிக்கின்றேன் பூரணமே
|
(47)
|
|
|
|
|
நல்லார்கயவரிவர் நண்பரிவரென்னாமல்
|
|
|
எல்லோருநீ யென்றிருப்பேனோ பூரணமே
|
(48)
|
|
|
|
|
மானார் தமைவெறுத்து மற்றுமவாப்புல்லவைத்தாய்
|
|
|
ஆனாலுமென் கொடுமையார்க்குமில்லை பூரணமே
|
(49)
|
|
|
|
|
தக்கதருவிடத்தைச்சார்ந்து மிடிதீரார்போற்
|
|
|
பக்கத்திருந்தும் பதைக்கின்றேன் பூரணமே
|
(50)
|
|
|
|
|
எத்தனைக்குக் கிட்டவுள்ளதென்றெளிதிற்
சொல்லு(மொழி)
|
|
|
யத்தனைக்குந்தூரமுள்ள தாகின்றாய் பூரணமே
|
(51)
|
|
|
|
|
கையாவமுதே கணுவிலாச்செங்கரும்பே
|
|
|
செய்யாதசித்திரமே தேனேயென் பூரணமே
|
(52)
|
|
|
|
|
சான்றாய்த்தமரா யென்றம்பியராய்முன்னோராய்
|
|
|
ஈன்றாளுமாகி நின்றாயேகபரி பூரணமே
|
(53)
|
|
|
|
|
வெம்மாயப் பேயுமிகுமாணவச்செறுக்குஞ்
|
|
|
சும்மாவிருக்கி றொலைந்துவிடும் பூரணமே
|
(54)
|
|
|
|
|
அன்பென்னுநெய்விட்டறி வென்னுநூற்றிரியிட்
|
|
|
டென்பரமஞானவிளக்கேற்றுவனோ பூரணமே
|
(55)
|
|
|
|
|
குன்றுங்கடலுமுள கோணமும் போய்வீழுமன
|
|
|
மொன்றுமட்மே மாண்டுவிட்டாலொப்பில்லை பூரணமே
|
(56)
|
|
|
|
|
உற்றுணரார் மூடவுலகினைவிட்டுன்னருளைப்
|
|
|
;பற்றுவதற்கென்ன தவம்பண்ணினனோ
பூரணமே
|
(57)
|
|
|
|
|
நூலாலுணர்ந்து நல்லநுண்ணறிவாற்காண்பதல்லாற்
|
|
|
காலானடந்தவரோ காணவல்லார் பூரணமே
|
(58)
|
|
|
|
|
மின்னனையபொய்யுடலை மெய்யென்றிருப்போர்க
|
|
|
ளென்னபயனெய்து வரோயானறியேன் பூரணமே
|
(59)
|
|
|
|
|
வாக்கின்றிறனும் வலிபெற்றதிண்டோளு
|
|
|
மார்க்குகமத்தீயன் முன்போராற்றுமோ பூரணமே
|
(60)
|
|
|
|
|
வேகமெனுங்கோவீந்து வெவ்வினையாங்கூலிகொடுத்
|
|
|
தாகச்சுமைக்கு நல்லவாட்பிடித்தாய் பூரணமே
|
(61)
|
|
|
|
|
ஊட்டியிங்கு வாழவைக்கவுற்றவனாய் நீயிருந்துந்
|
|
|
தேட்டநினைந்திங்கு திரிகின்றேன் பூரணமே
|
(62)
|
|
|
|
|
மையன்மனையார்கள் மக்கள்சுற்றமுள்ளதெல்லாம்
|
|
|
பொய்யென் றுகண்டும் புகுவதேன் பூரணமே
|
(63)
|
|
|
|
|
கையிலமுதைக் கமர்வெடிப்பில் விட்டார்போ
|
|
|
லையமறந்தம் பலத்திலானேனே பூரணமே
|
(64)
|
|
|
|
|
துட்டமனத்தினுக்குஞ் சொல்லுமுணர்வினுக்கு
|
|
|
மெட்டாததொன்றதின் பேரென்சொலலாம் பூரணமே
|
(65)
|
|
|
|
|
ஊனாறுடலாச்சுள மாச்சறிவாச்சு
|
|
|
நானென்பதெங்கே நவிலுவாய் பூரணமே
|
(66)
|
|
|
|
|
காமக்குரோ தமெனுங்கான் வேட்டைக்காரரெல்லா
|
|
|
மூமைமனத்துள்ளுறைபவரோ பூரணமே
|
(67)
|
|
|
|
|
ஆணவப்பேய்மற்றிரு பேயாக்ஷியரசுசெங்கோல்
|
|
|
பூணுமிடமியாது புகலுவாய் பூரணமே
|
(68)
|
|
|
|
|
கோபனொடுடம்பன் கொடியவுதாசீனனுக்குந்
|
|
|
தாபரமிம் மூடமனந்தானோசொல் பூரணமே
|
(69)
|
|
|
|
|
முன்னஞ்சிலகாலமொய்ம் பழித்தகாமனென்மே
|
|
|
லின்னங்கழையெடுத்தாலென் செய்வேன் பூரணமே
|
(70)
|
|
|
|
|
காயாபுரியாக்ஷி காமனுக்கே யென்றுமுன்னம்
|
|
|
வாயாரச் சொல்லிநன்னீர் வார்த்தனையோ பூரணமே
|
(71)
|
|
|
|
|
அன்பொன்றிருக்கிலன் றோவாறான கண்ணீர்விட்
|
|
|
டென்புருகிப்பாடல் செய்வேனேகபரி பூரணமே
|
(72)
|
|
|
|
|
நல்லோர்கள் சென்றநெறி நானடக்கினல்லாது
|
|
|
புல்லறிவாலெந்தமட்டும் போகவல்லேன் பூரணமே
|
(73)
|
|
|
|
|
வான்மறைகள் காணாமலரடியைக்காண்பனென
|
|
|
வேனிந்தப்பேதையிங்ங னெண்ணுகின்றேன் பூரணமே
|
(74)
|
|
|
|
|
நேர்நிலைப்பினிற்க வொட்டா
நீண்டகொடுமைம்புலத்தார்
|
|
|
சோரமனராஜனுக் குத்தூதுவரோ பூரணமே
|
(75)
|
|
|
|
|
சிட்டுக்குருவிகளாய்ச்
சேர்ந்திருக்குமிக்கூட்டைச்
|
|
|
சுட்டுவிட்டாற்போமென்று யரமெல்லாம் பூரணமே
|
(76)
|
|
|
|
|
வன்னப்புறவேமணிப்புறவே மாங்குயிலே
|
|
|
அன்னப்பெடையே யென்னன்புருவே பூரணமே
|
(77)
|
|
|
|
|
துன்றுஜெனனத்தொடக் கெல்லாம்விட்டொழிந்து
|
|
|
என்றுவிடாயாறி யானிருப்பேன் பூரணமே
|
(78)
|
|
|
|
|
ஊக்கவுயிர்ப்பறவை யோடிவிட்டாலிக்கூட்டைத்
|
|
|
தூக்கிக்கிடத்திச் சுடுவாரே பூரணமே
|
(79)
|
|
|
|
|
என்னெனவோபேசிநின்ற விச்சடலமாண்டதென்னப்
|
|
|
பண்ணியிருந்தழவும் பண்ணுவையோ பூரணமே
|
(80)
|
|
|
|
|
கள்ளமனமென்னுங் கடுங்குரங்கின்சேட்டையினாற்
|
|
|
கிள்ளப்பழுத்தவனங் கெட்டதுவே பூரணமே
|
(81)
|
|
|
|
|
ஏய்ந்த கொடுமைம்புலன் கனிந்தமனக்குரங்கு
|
|
|
பாய்ந்துவிளையாடும் பருங்கோடோ பூரணமே
|
(82)
|
|
|
|
|
நானகைத்துப்பேசிவந்த நாள்போய் நமக்குறும்பன்
|
|
|
றானகைத்துப்பேசியிங் குசாருவனோ பூரணமே
|
(83)
|
|
|
|
|
குஞ்சிச்சிகையான் கொடியபிறைவாளெயிற்றான்
|
|
|
அஞ்சு பெருந்தடியானண்டுவனோ பூரணமே
|
(84)
|
|
|
|
|
மட்டில்லாத் துன்பமுற்றுவாடி நான்றேடு பொருள்
|
|
|
எட்டாப்பழமோ வியம்புவாய் பூரணமே
|
(85)
|
|
|
|
|
பந்தவினைகெட்டுப் பரமசுகவாழ்வுபெற
|
|
|
விந்தஜெனனமதிலில்லையோ பூரணமே
|
(86)
|
|
|
|
|
ஆனாக்கொலைபுரிந்த வாக்கமிலியிவனுக்
|
|
|
கேனாமருள்வமென வெண்ணினையோ பூரணமே
|
(87)
|
|
|
|
|
அம்பனையகண்ணாருக் காளாயான்செய்தபணி
|
|
|
இம்பரிலுமும் பரிலுமியாவர்செய்தார் பூரணமே
|
(88)
|
|
|
|
|
வானவுடுமதிபோல் மாமுகத்தார்மையல்கொண்டு
|
|
|
போனநாள்வந்து பொருந்துமோ பூரணமே
|
(89)
|
|
|
|
|
போதமில்லானூன் விரும்பும்
புன்புலையனென்றென்னைக்
|
|
|
கோதிறவத்தோரிகழ்ந்து கூறினரோ பூரணமே
|
(90)
|
|
|
|
|
பக்குவமில்பாழன்
முகம்பார்த்தாண்டாலின்னருளுக்
|
|
|
கெக்குறையுமுண்டோவென்றெண்ணுகின்றேன் பூரணமே
|
(91)
|
|
|
|
|
உள்ளப்பேய்மற்றவைகளுன் மத்தங்கொண்டாடும்
|
|
|
துள்ளலெல்லா மாளிற்றுறவாகும் பூரணமே
|
(92)
|
|
|
|
|
உந்துமனமாளாதொளித்துத் துறந்தோர்கள்
|
|
|
சந்திதொறுநின்று தவித்திடுவார் பூரணமே
|
(93)
|
|
|
|
|
ஒட்டுந்தவமிலையேற்குன் பொற்கழல்நாடி
|
|
|
எட்டுமுணர்வுவந்த தெந்தவகை பூரணமே
|
(94)
|
|
|
|
|
கிட்டிய நல்லிவ்வுடற்கோர் கேடுவரினியான்பாவி
|
|
|
பட்டபாடத்தனையும் பாழாமே பூரணமே
|
(95)
|
|
|
|
|
ஆருரையும்வேண்டா நின்னாரருளே வாழ்த்துமென்னு
|
|
|
மோருணர்வேயென்று முதிக்குமா பூரணமே
|
(96)
|
|
|
|
|
கீற்றுப்பிறைநுதலார்
கேண்மையினாற்கற்றதெல்லாந்
|
|
|
ஆற்றிற்கரைத்த புளியாச்சுதே பூரணமே
|
(97)
|
|
|
|
|
எக்கோலம்பூண்டாலு மெக்கிரியைசெய்தாலும்
|
|
|
தக்கோர்கள்பெற்ற வொன்றைத்தந்திடுமோ பூரணமே
|
(98)
|
|
|
|
|
சாமானியவடி வந்தன்னைத்தொழுது நிற்கி
|
|
|
லாமான நின்னருளையண்டவைக்கும் பூரணமே
|
(99)
|
|
|
|
|
மந்திரத்துந்தந்திரத்து மற்றுமுள்ளவாசனத்து
|
|
|
மெந்திரத்துமில்லை நின்னையெட்டும்வகை பூரணமே
|
(100)
|
|
|
|
|
அன்பாங்கயிறுகொண்டுன்னம் புயப்பொற்பாதமதை
|
|
|
இன்பாகக் கட்டவல்லார்க்கெட்டிடுவாய் பூரணமே
|
(101)
|
|
|
|
|
எத்துறையிற் சென்றலுமியாதனையற்றிவ்வுடல
|
|
|
மொத்திருக்கினன்னதுவு மோர்தவமாம் பூரணமே
|
(102)
|
|
|
|
|
முத்ததவளநகை மோகமின்னாராவல்கெட
|
|
|
வெத்தனையோ சொல்லிநின்னையேத்தினனே பூரணமே
|
(103)
|
|
|
|
|
வந்தமுகிற்காலூன்றி மாமழையைப்பெய்யவொட்டா
|
|
|
திந்தவினைக்கிந்த வலியார்கொடுத்தார் பூரணமே
|
(104)
|
|
|
|
|
அஞ்சுபுலனா வியடங்குகின்ற தென்னமக்கள்
|
|
|
பஞ்சினிற்பால்தோய்த்தொழுக்கப்பண்ணாதே பூரணமே
|
(105)
|
|
|
|
|
ஐந்துவழிச்சென்றவாப் பறவைமேயந்துகரு
|
|
|
வந்து பந்தமென்னுமகவீனும் பூரணமே
|
(106)
|
|
|
|
|
சொல்லற்கெளிதாகத் தோற்றிவந்தமோனநெறி
|
|
|
சொல்லற் கரிதாய சித்திரமேன் பூரணமே
|
(107)
|
|
|
|
|
மட்டுண்டபூங்குழலார் மையல்வலைப்பட்டுடலம்
|
|
|
வெட்டுண்டார் போற்றுடித்து வீழ்ந்ததுவே
பூரணமே
|
(108)
|
|
|
|
|
சொல்லிறந்தவோர்நிலையைச்
சொல்லாற்றுதித்தெங்ஙன்
|
|
|
புல்லிடப்போகின்றே னென்போதபரி பூரணமே
|
(109)
|
|
|
|
|
வாழவைப்பான் றாழவைக்கில்மற்றியாரே
யுள்ளம்வந்து
|
|
|
பாழன்முகம்பார்க்கும் பரிசுடையார் பூரணமே
|
(110)
|
|
|
|
|
பழுதற்றவித்தின் முளைபற்றியிலைவிட்டுக்
|
|
|
கொழுகொம்பிலாது குறுகியதே பூரணமே
|
(111)
|
|
|
|
|
என்னை நீவேறாக்கியிங்கு வைத்ததாலலவோ
|
|
|
உன்னையான் பஞ்சரித்திங்கோதுகின்றேன் பூரணமே
|
(112)
|
|
|
|
|
சொல்லைக்கடந்தவொரு சூக்ஷியே யென்றன்மனக்
|
|
|
கல்லைக்கரைக்கவழி காட்டியதே பூரணமே
|
(113)
|
|
|
|
|
கன்னலென்றாபா கென்றாகட்டவிழாப்போதென்ற
|
|
|
என்னென்றுவமை சொலியேத்துவேன் பூரணமே
|
(114)
|
|
|
|
|
ஆறகநீர்விட்டழவல்லான் மற்றொன்றுந்
|
|
|
தேறாச்சிறுவனென்ன செய்குவேன் பூரணமே
|
(115)
|
|
|
|
|
தேகத்தை நம்பினர்கடேகமே யாவரென்றால்
|
|
|
ஏகத்தை நம்பினர்களென்னாவார் பூரணமே
|
(116)
|
|
|
|
|
எங்குமுள்ளாய் நீயெனவென்னெண்ண மற்றவக்கணத்தி
|
|
|
லெங்குமுளதாகி யிருக்கின்றாய் பூரணமே
|
(117)
|
|
|
|
|
தேகம்பிரமமெனச் செப்புமிரண்டுரையும்
|
|
|
போகநின்ற புண்ணியரே புண்ணியராம் பூரணமே
|
(118)
|
|
|
|
|
உள்ளும்புறமுமுனை நிறையப்பார்த்தக்காற்
|
|
|
கள்ளமனங்காந்தக் கடத்தூசி பூரணமே
|
(119)
|
|
|
|
|
மாயையுண்டுமென்பவர்க்கே மாயாமயக்கமெல்லா
|
|
|
மாயையிலை யென்பவர்க்குமற்றதில்லை பூரணமே
|
(120)
|
|
|
|
|
கீழிருந்து மாயையில்லை யென்றுகிளத்துவதைப்
|
|
|
பாழ்மாயைமேலிருந்து பார்த்துநகும் பூரணமே
|
(121)
|
|
|
|
|
உன்னுமனம் மாயையிடத்தொப்பிவித்துப்போம் மாயை
|
|
|
நின்னிடத்திலொப்பு வித்தானில்லாது பூரணமே
|
(122)
|
|
|
|
|
தன்னிடத்து மேலானசத்திடத்துவாழ்ந்துவரு
|
|
|
மன்னரையிம் மாயைமயக்காது பூரணமே
|
(123)
|
|
|
|
|
உள்ளதை யெல்லாந் துறந்தோமொன்று
மற்றோமென்றோலுந்
|
|
|
துள்ளுமனத் தம்பிதுனைக்குண்டு பூரணமே
|
(124)
|
|
|
|
|
புண்ணாகச்செய்யுமனம் போனாற்பரசுகமென்
|
|
|
றெண்ணாதுனைப் பணியிலேகிவிடும் பூரணமே
|
(125)
|
|
|
|
|
இம்மனத்துக்காதாரமென்ற சுத்தமாமாயை
|
|
|
அம்மாயைகைக்குவரினக் கணம்போம் பூரணமே
|
(126)
|
|
|
|
|
சேட்டையற்றுச் சீதலமாய்த்தீர்ந்தவொருமாமாயை
|
|
|
கேட்டதெல்லாமீயக் கிடைத்ததரு பூரணமே
|
(127)
|
|
|
|
|
வேண்டாரிம் மாயைதனை வேண்டிடவும் வந்துவிடும்
|
|
|
ஆண்டானடிமையென வாக்கிடும் பூரணமே
|
(128)
|
|
|
|
|
பிம்பஞ்சலித்ததெனப் பேசுவர் போலாம்பிரதி
|
|
|
பிம்பஞ்சலித்த தெனப்பேசவரும் பூரணமே
|
(129)
|
|
|
|
|
பிம்பந்தானென்று முத்திபெற்றாலும்
பெற்றமெனும்
|
|
|
வன்போதம் போதல் வழக்காகும் பூரணமே
|
(130)
|
|
|
|
|
நாம்பிரமமென்றிடலாம் நற்பிரமந்தன்னிலென்றும்
|
|
|
நாமென்னற்கில்லையென நன்குணரிற் பூரணமே
|
(131)
|
|
|
|
|
பேசாதமோனமதைப் பேசுவதிலேதுபலன்
|
|
|
பேசிடினும் பேசாப்பெருமையதே பூரணமே
|
(132)
|
|
|
|
|
மாயாஜனனமென்பார் மாறாதமுத்தியென்பார்
|
|
|
நேயவெனக்கோ நினக்கோசொல் பூரணமே
|
(133)
|
|
|
|
|
தம்நிலைமையின்ன தெனத்தாம றியாமேலோர்கள்
|
|
|
என்னிலையை நல்லதெனவெண்ணவல்லார் பூரணமே
|
(134)
|
|
|
|
|
தான்றேய்ந்ததனை நெஞ்சந்தான றியாதேஞானம்
|
|
|
என்றேயந்ததென்ன வியம்பிநிற்கும் பூரணமே
|
(135)
|
|
|
|
|
ஞானமெனக்கில்லையென நாளிடையினெஞ்சோய்ந்தா
|
|
|
லானசகஜமதற் கயலாம் பூரணமே
|
(136)
|
|
|
|
|
எல்லாமுமாயையென்று மெல்லாமும்பிரமமென்றுஞ்
|
|
|
சொல்லாததே சகஜசுத்தநிலை பூரணமே
|
(137)
|
|
|
|
|
ஏய்ந்த சகஜநிலை யெய்தியதாய்ச் சொல்லி நெஞ்சம்
|
|
|
தேய்ந்த சமாதி நிலை சேர்ந்திருக்கும் பூரணமே
|
(138)
|
|
|
|
|
உள்ளுக்குட் சீதஜலமோர் தாரையாய்க்குளிர்ந்து
|
|
|
தள்ளுமனந்தேயந்த சமாதிசுகம் பூரணமே
|
(139)
|
|
|
|
|
ஆரோகணக்கெதியாயச் சுத்தமாயையொடு
|
|
|
சேர்ந்தேவிடுஞ்சீவன் சிற்சிலர்க்கும் பூரணமே
|
(140)
|
|
|
|
|
ஒயாவிவகரிப்பேயோ ரொருவர்க்குச்சகஜ
|
|
|
மாயிருக்குமிந் நிலையுமந்நிலையே பூரணமே
|
(141)
|
|
|
|
|
மாயாவழுகையொடும் மந்தச்சிரிப்போடும்
|
|
|
தூய சகஜநிலை தோய்வர்சிலர் பூரணமே
|
(142)
|
|
|
|
|
காட்டம் போலாகியந்தக் காலமட்டின் நிற்குமுடற்
|
|
|
றேட்டவிதுவுஞ்சிலர் சகஜம் பூரணமே
|
(143)
|
|
|
|
|
நின்னடியார் பூசைசெய்ய நேர்ந்திடுமேற்கிட்டாத
|
|
|
தென்னுளது நீயுமிதிலமைவாய் பூரணமே
|
(144)
|
|
|
|
|
வேண்டாதவொன்றை மிகத்தருவாய்என்றனுக்கு
|
|
|
வேண்டியதைக் கேட்கில்விளம்பாயென் பூரணமே
|
(145)
|
|
|
|
|
ஆங்காரமான திரண்டற்றவிடமே சகஜம்
|
|
|
ஆங்காரம்போவதற்கே யாயுளில்லை பூரணமே
|
(146)
|
|
|
|
|
உள்ளபடியாகுமென வோர்நிலைமை பற்றிடலுங்
|
|
|
கள்ளமனச் சடலங்கண்டுதான் பூரணமே
|
(147)
|
|
|
|
|
லிங்கஜலனம் போலேலிங்கத்தினிச்சலமு
|
|
|
மங்கதர்மந்தானே யமைவதுவரம் பூரணமே
|
(148)
|
|
|
|
|
இவ்விடத்தினிற் கவெனயாம்புகன்ற வக்கணமே
|
|
|
அவ்விடத்தினிற்கும் நெஞ்சமற்றதுவாம் பூரணமே
|
(149)
|
|
|
|
|
தன்னையுணர்ந்தபின்னுஞ் சாதனங்கள் செய்தபின்னு
|
|
|
மன்னுமுத்தியின் பெருமைவந்தடையும் பூரணமே
|
(150)
|
|
|
|
|
கடையிற்கனியுமுண்டு கையதனிற்காசுமுண்டு
|
|
|
நடைநடக்கச் சோம்புவரேனண்ணலெங்ஙன் பூரணமே
|
(151)
|
|
|
|
|
தேகாந்தந்தன்னின் முத்திசேரலாமென்றுசிலர்
|
|
|
கேகாந்தமாகவியம்பினையோ பூரணமே
|
(152)
|
|
|
|
|
இப்பொதிலெங்குமிருக்கின்றாய் முத்தியென்பார்க்
|
|
|
கப்போதிலெந்தவுருவாகிநிற்பாய் பூரணமே
|
(153)
|
|
|
|
|
ஒன்றென்பதொன்று மற்றதென்பற்குமோரிரண்டாய்
|
|
|
என்றுவருமென்பதற்குமேதுவாம் பூரணமே
|
(154)
|
|
|
|
|
ஒன்றுமற்றதொன்றிரண்டு மோங்குபலதென்பதெல்லா
|
|
|
மென்றுமுள்ளநின் கோவிற்கிட்டபடி பூரணமே
|
(155)
|
|
|
|
|
பூரணக்கண்ணி முற்றிற்று
|
|