|
குருபராபரணம்
|
|
|
1.
|
பத்தியிலேன்
ஞானப்பழக்கமிலேன் கல்வியிலேன்
|
|
முத்திநெரிக்
கெங்ஙன் முயலுகின்றேன் நான்பேதை
|
|
|
அத்திக்கிறை
வாவரனார் தருமுருகா
|
|
|
சத்திவடிவே
லெடுத்ததந்தாய் குருபரனே.
|
|
|
2.
|
அன்றேயுனக்களித்தே
னாவியுடல்பொருளை
|
|
யின்னோர்குறையுமெனக்
கிங்குளதாமோ
|
|
|
நன்றே
விளைவைவினை விளைவை நானவற்றி
|
|
|
லொன்றேனும்
வேண்டுகிலேனுண்மை குருபரனே.
|
|
|
3.
|
ஊனறுடற்சுமைக்கு
மொண்டொடியார் தந்துவரு
|
|
மானாதமையதுக்குமானாக
வைத்தாயே
|
|
|
நானாவிதற்கெல்லாம்
நாயகமென் கண்மணியே
|
|
|
ஏனோவென்
குற்றமியம் பாய் குருபரனே.
|
|
|
4.
|
சுகாதீத
மேவாது தோற்பாவை போலலைந்தால்
|
|
நகாளோவுலகார்
நின்னற் கருணைக் கேற்றதுவோ
|
|
|
மகார்
மனைவி சுற்றமெனும் மாமோக வாரிதியுட்
|
|
|
புகாமலொன்று
சொல்லிவைத்தபொன்னே குருபரனே.
|
|
|
5.
|
வாக்கை
மவுனமென்பார் மனத்தை மவுனமென்பார்
|
|
ஆக்கமற்ற
வைம்பொதிகளத்தை மவுனமென்பார்
|
|
|
போக்கிலிகள்
சோம்பிகளாய்ப் போல தேயல்லாது
|
|
|
தேக்குமோ
மோனநிலை செப்பாய் குருபரனே.
|
|
|
6.
|
நின்னடியான்
யானென்ன நீதெரிவிக்காதிருந்தால்
|
|
உன்னடியான்
யானென் றுரைத்திடவும் நாணாதோ
|
|
|
தன்னடியானுக்கிச்
சகலமுங்கைக் கொண்டவுனக்
|
|
|
கென்னவோக
வாய் மவுன மெந்தாய் குருபரனே.
|
|
|
7.
|
ஆற்றுக்கோ
ரோட்டமிலை யாற்று நீர்க்கோட்டமுண்டு
|
|
தோற்றுமதிக்கேது
சுனை நீரசைவாகு
|
|
|
மேற்றிமவுன
நிலையின்னதுவே சத்தியமாம்
|
|
|
வேற்றொருவர்க்கோதில்வெறுப்பாங்குருபரனே.
|
|
|
8.
|
பாடவந்த
நாள் முதலாய்ப்பாக்கியமே நின்னையல்லா
|
|
லீடில்லாத்
தேவர்களை யேனையரைப் போற்றினனோ
|
|
|
ஏடவிழ்தார்ச்
சோன்மாடேகியோறைந்து கவி
|
|
|
சூடியவோர்
குற்றமுண்டு சொன்னேன் குருபரனே.
|
|
|
9.
|
எட்டுமட்டும்
வந்து மெட்டா திருந்தக்காள்
|
|
பட்டி
மனந்தான் பதைத்துக் கொதியாதோ
|
|
|
வட்டவெழுத்தின்னவகை
தெரியாவேதாவைக்
|
|
|
குட்டிச்
சிறையிருத்துங் கோவே குருபரனே.
|
|
|
10.
|
மண்ணுக்
கழுவேனோ மாழுலையாலே மருட்டும்
|
|
பெண்ணுக்
கழுவேனோ பேதையெனதாண் குறியிற்
|
|
|
புண்ணுக்
கழுவேனோ போதம் விளைக்குமுள்ளக்
|
|
|
கண்ணுக்
கழுவேனோ கண்ணே குருபரனே.
|
|
|
11.
|
ஓடியுழைப்பதெல்லா
மொண்டொடி யாருண்மகிழ
|
|
வாடியிருப்பதெல்லா
மாமுலையைக் காணவென்று
|
|
|
ஊடியிருப்பதெல்லா
முன்றன்றிருவருளோ
|
|
|
டாடு
மயிலேறு மென்றனப்பா குருபரனே.
|
|
|
12.
|
கிட்டியெனைக்கூட்டிக்
கீழ்க் குழியிற்றள்ளாமிந்தப்
|
|
பட்டிமனத்தோடு
பதை பதைக்கவிட்டதல்லாற்
|
|
|
கட்டிமுத்தத்
தந்தையிலை கண்ணீர் துடைத்தையிலை
|
|
|
யிட்டமென்ன
வெண்ணுயிலை யெந்தாலே குருபரனே.
|
|
|
13.
|
பாடிப்
படிப்பதெல்லாம் பாவையர்தம் பேரழகைத்
|
|
தேடித்
தவிப்பதெலாஞ்சீ யொழுகுங் கீழ்க்குழியைச்
|
|
|
சூடிக்கிடப்பதெல்லாந்
தோதகியார் சீறடியை
|
|
|
நாடியெனை
யாளவந்த நாதா குருபரனே.
|
|
|
14.
|
காணவழுவேனோ
கட்டள காநின்றுருவைப்
|
|
பேண
வழுவேனோ பேசாப்பரமசுகம்
|
|
|
பூணவழுவேனோ
பொல்லாத வெண்போதங்
|
|
|
கோண
வழுவேனோ கோவே குருபரனே.
|
|
|
15.
|
கன்றிக்
கதறிக்கரைந்தே யிணை பிரிந்த
|
|
அன்றிலைப்போலானே
னரசே நிணைக்கான
|
|
|
இன்றைக்கோ
நாளைக்கோ விவ்வுடலிற்றீமூட்டு
|
|
|
மன்றைக்கோ
நீவருவதையா குருபரனே.
|
|
|
16.
|
பாழுக்கழுவேனோ
பாய்புலி போற் சீறிவரு
|
|
முழுக்கழுவேனோ
வுள்ள தெல்லாந் தோற்றிருக்குந்
|
|
|
தாழ்வுக்
கழுவேனோ தண்டையன் தாள் சூட்டுபெரு
|
|
|
வாழ்வுக்
கழுவேனோ மன்னே குருபரனே.
|
|
|
17.
|
ஊனுருக்கும்
பேரழகே யுள்ளூறும் பேரமுதே
|
|
கானிருக்கும்
பூங்கடம்பே கண்ணிருக்கும் பேரொளியே
|
|
|
வானிருக்குங்
கற்பகமே வாயிருக்கும் செந்நாவே
|
|
|
மானிருக்கும்
பங்காளா மன்னா குருபரனே.
|
|
|
18.
|
மார்பிலனைத்
தையிலை வாய்முத்தங் கொண்டையிலை
|
|
சார்பிலிருத்தித்
தவிப் பெலாந் தீர்த்தையிலை
|
|
|
ஆரென்றானம்
மடியனா மென்றுரைத்தையிலை
|
|
|
சீரரசே
பேரின்பத்தேவே குருபரனே.
|
|
|
19.
|
தேனெனவா
பாலெனவா தெவிட்டாக்கனியெனவா
|
|
வானெனவா
காலெனவா மண்ணெனவா மற்றெனவா
|
|
|
நானெனவா
நீயெனவா நானிறந்து போன விடந்
|
|
|
தானெனவா
வென்னென நீசாற்றாய் குருபரனே.
|
|
|
20.
|
பெற்றவனை
நொந்தாற் பெருவினையின் கோபம் வரும்
|
|
உற்றவனை
நொந்தாலுயர் பிரமன்றன் கோபம்
|
|
|
மற்றவனை
நொந்தக்கால் வானமுய்ய வெஞ்சூரைச்
|
|
|
செற்றவுன்றன்
கோபம் வந்து சேருங் குருபரனே.
|
|
|
21.
|
கட்டாணி
முத்தே கருப்பமுத்தே கண்ணின்முத்தே
|
|
எட்டாத
முத்தே யெனக்குள்ளிருக்குமுத்தே
|
|
|
மட்டார்
கழற்குறத்திமார்பில் வளருமுத்தே
|
|
|
யுட்டுளையாமுத்தே
யொண்முத்தே குருபரனே.
|
|
|
22.
|
கண்டதுண்டோ
நின்னு ருவங்கண்டொரு காலுன்னுடனே
|
|
யுண்டதுண்டோ
பேரமுத முண்டவிடாயாற்றி முத்தங்
|
|
|
கொண்டதுண்டோ
நின்றன் குறங்கினில்வைத்தோர் மாற்றம்
|
|
|
விண்டதுண்டோ
வோங்கு பரவிண்ணே குருபரனே.
|
|
|
23.
|
சோலைக்குயிலே
சுகம் விளைக்குங்குஞ்சுகமே
|
|
மாலைப்பொழுதே
மறுநாளே முன்னாளே
|
|
|
காலைப்பொழுதே
கடையுகமே பல்லுகமே
|
|
|
வேலைத்துறையே
யென்வேந்தே குருபரனே.
|
|
|
24.
|
கண்ணாரப்பார்த்தநிலை
கண்டு களித்தநிலை
|
|
யண்ரை
வெள்றேதி யருச்சனைகள் செய்தநிலை
|
|
|
மண்ணாவேனின்னுமிந்த
மண்ணாகவே துணிந்த
|
|
|
தெண்ணாயோ
வென்னுயரை யெந்தாய் குருபரனே.
|
|
|
25.
|
கல்லாயிருந்த
நிலைகட்டழகா நின்னூரிற்
|
|
புல்லாயிருந்த
நிலை போந்தார் குடியிருக்கு
|
|
|
மில்லாயிருந்த
நிலை யெந்தாவர்க்கமுதாம்
|
|
|
நெல்லாயிருந்த
நிலை நித்தா குருபரனே.
|
|
|
26.
|
பாலானாலூன்றன்
பணிமுடியிலாட்டிடுவார்
|
|
நூலானுன்
மார்பினின் முநூலோடு சேர்ந்திருப்பேன்
|
|
|
காலானாலுன்
கோவிற்காலோடுலாவிடுவேண்
|
|
|
ஏலாதானென்
செய்வே னெந்தாய் குருபரனே.
|
|
|
27.
|
பாடவறியேன்
படிப்பாரிடமறியேன்
|
|
றேடவறியேன்
சிதம்பரத்தினின் வடிவைக்
|
|
|
கூடவறியேன்
குராமணக்கு நின்பாதஞ்
|
|
|
சூடவறியேனென்
சோதி குருபரனே.
|
|
|
28.
|
வேலா
விசாகா விவாக விளங்குமை
|
|
பாலா, பரமா, பகவா வெனப்புலம்பி
|
|
|
நாலாவிதத்து
நெஞ்சம் நைந்து நைந்து சுட்டபுண்ணை
|
|
|
போலாச்சுதையோ
யென் பொன்னே குருபரனே.
|
|
|
29.
|
அறிவுக்கறிவே
யப்பாலுக்கம்பாலே
|
|
குறியிற்குறியே
குணத்திற்றனிக்குணம்
|
|
|
நெறியினெறியே
நினைவிற் பெருநினைவே
|
|
|
செறிவிற்செறிவே
சிவமே குருபரனே.
|
|
|
30.
|
போதமே
போதம் புணராத பூரணமே
|
|
நாதமே
நாதமுடியிருக்கு நற்பரமே
|
|
|
யேதமே
யின்மே யிழுக்கே பெருவழக்கே
|
|
|
வாதமே
யில்லதுவே மனனே குருபரனே.
|
|
|
31.
|
ஆகமெல்லா
நின்றிடு நீரள்ளியணியுமெனின்
|
|
மோகமெல்லா
நின்பதத்தின் மூழ்கிக் கிடக்குமெனின்
|
|
|
ஊகமெல்லா
நின் வடிமுன்னதனையாயு மெனிற்
|
|
|
றேக
மென்றும் வேண்டு மெந்தாய் செந்திற் குருபரனே.
|
|
|
32.
|
விட்டுப்பிரிந்தேனே
வேற்றுடலமானேனே
|
|
கட்டிக்குலைந்தேனே
கதிகெட்டா னானேனே
|
|
|
மட்டார்
கழற்குறத்தி மாலா வடிவேலா
|
|
|
வெட்டுணையும்
வாய்திறவாதென்னே குருபரனே.
|
|
|
|
|
|
33.
|
நோக்கமெல்லா
நின்னுடைய நூபுரப்பபொற்பாதமதி
|
|
லாக்கமெல்லா
நின்னுடைய வாறெழுத்தை யோதியது
|
|
|
லூக்க
மெலா நின்றிருமுன் னோடிவிளையாடியதாற்
|
|
|
பாக்கியமே
செந்திற்பரமே குருபரனே.
|
|
|
34.
|
துன்னிவிளங்குஞ்சுடர்
மகுட மோராறும்
|
|
வன்னவனசமலர்
முகமுங் குண்டலமும்
|
|
|
பன்னிரண்டு
திண்டோளும் பட்டுடையுமுந்நூலும்
|
|
|
என்னெ
திரிந்தோன்றிடுவ தென்றோ குருபரனே.
|
|
|
35.
|
நோயோ
தெளியவில்லை நொந்தபுண்ணோ வாறவில்லை
|
|
வாயோ
வடங்கவில்லை வாழ்நாளோ நீடவில்லை
|
|
|
காயோ
பழமோ கனிகாயல்லாத துவோ
|
|
|
ஆயானா
னென்று மறியேன் குருபரனே.
|
|
|
36.
|
அன்னையலுத்தாளயனும்
படைத்தலுத்தா
|
|
னுன்னையான்
நேடியுருகிய லுத்துவிட்டேன்
|
|
|
என்னையோ
மேல் வருவதெத்துயரோ நானறியேன்
|
|
|
முன்னவா
முன்னுக்கு முன்னே குருபரனே.
|
|
|
37.
|
பாட்டுக்
கழுவேனோ பண்டிபெருக்க வைக்கும்
|
|
ஊட்டுக்
கழுவேனோ உண்டாற் கிடக்க வொரு
|
|
|
வீட்டுக்
கழுவேனோ வெந்நீரொழுகுபுலாற்
|
|
|
கூட்டுக்
கழுவேனோ கோவே குருபரனே.
|
|
|
38.
|
மூடமனத்தோடு
முற்றுஞ் சுழல விட்டுத்
|
|
தேடவொளித்தாற்
சிறியேன் சகிப்பேனோ
|
|
|
ஆடரவப்
பூணுடையாராதரிக்குமோர் குழந்தாய்
|
|
|
வடவிழுஞ்
செச்சை யணியெந்தாய் குருபரனே.
|
|
|
39.
|
ஆங்கால
மெல்லாம வத்திலளையவிட்டுச்
|
|
சாங்காலமோ
நினது தண்டையந்தான் சூட்டுவது
|
|
|
நீங்கத்துணையே
நினைப்பற்றவர் நினையே
|
|
|
யீங்குள்ளதுவே
யென்ணெண்ணே குருபரனே.
|
|
|
40.
|
கானிருகம்
பூங்கொன்றைக் கன்னியர்க்கு மோனமொழி
|
|
கோனா
யெதனிடத்துங் கூடாத நின்றனைக்கு மானோர்பிடிவந்து
|
|
|
வாய்த்ததுவுஞ்
சேயாக
|
|
|
நான்
வாய்த்ததுவும் நன்று நன்று குருபரனே.
|
|
|
41.
|
அன்னை
வயற்றுதித்த வன்று முதலின்றுவரை
|
|
யென்னகுறைவு
வைத்தாய் ஏதுங்குறைவில்லை
|
|
|
தன்னந்தனியே
தவிக்கவெனை விட்டொளித்த
|
|
|
இன்னவொரு
குறைவுண்டு எந்தாய் குருபரனே.
|
|
|
42.
|
தேவச்சிறியபிடி
சேர்ந்திருக்குஞ் செம்மலையே
|
|
காவற்புனமான்
கலக்குங்கருமலையே
|
|
|
ஆவற்கள
விளையேயையோ பெருமலையே
|
|
|
ஏவற்குரைத்திடுவேனினெ
ந்தாய் குருபரனே.
|
|
|
43.
|
கட்டிச்செழுங்கரும்பே
கட்டவிழாப் பூங்கரும்பே
|
|
துட்டர்க்
கருவருப்பே சூழ்ந்தார்க்குகொருவிருப்பே
|
|
|
முட்டியுண்ணும்
பாலே முதுமறைக்குமப் பாலே
|
|
|
எட்டவருபண்பே
பேரின்பே குருபரனே.
|
|
|
44.
|
பற்றுங்குணமே
யுட்பங்கேரு கமணமே
|
|
முற்றுஞ்சுகமே
மொழியாருங்கிஞ்சுகமே
|
|
|
உற்றவெனக்
கோருருவே பெருந்திருவே
|
|
|
கற்றிலர்க்குப்புண்ணே
யென கண்ணே குருபரனே.
|
|
|
45.
|
அன்றைக்
கொருவார்த்தை யவ்விடத்திற் சொன்னதல்லாற்
|
|
கன்று
மனம் போகக்கருதி யொரு வார்த்தை
|
|
|
இன்று
வரை சொன்னதில்லையென் செய்வேனின்னருனே
|
|
|
குன்றைப்
பொருத குமரகுருபரனே.
|
|
|
46.
|
இட்டவிரை
முளைந்தே யெப்பருவப்பட்டதென்ன
|
|
நட்டவுழவன்
வந்து நாடோறும் பார்க்கானோ
|
|
|
துட்டமிருகம்
வந்து சோரவழித்ததிதைக்
|
|
|
கிட்டிவந்து
காணாயோ கேனே குருபரனே.
|
|
|
47.
|
பொன்னையழித்தோமே
புந்தியைத்தான் போற்றுமல்
|
|
என்னசெய்தானோ
வென்ற வெண்ணமொன்று த்திலையாற்
|
|
|
றுன்னுபுலக்கள்வர்வந்து
சூரை கொண்டாரையோ நீ
|
|
|
இன்ன
முணர்ந்திலையா வெந்தாய் குருபரனே.
|
|
|
48.
|
வாடா
மலரளிதாய் மாளாது வெங்காமக்
|
|
கோடைவந்து
தாக்கிக் கூம்பக் கருகியதே
|
|
|
ஏடவிழுங்
காந்தனணியெந்தாய் குறத்திமகிழ்
|
|
|
தாடா
ளாவென்றவமே சத்தே குருபரனே.
|
|
|
49.
|
மானும்
பிடியுமகிழ்ந்தணையும் பூங்காவே
|
|
தேனுந்தினை
மாவுந்தேக்கவுண்ணு மென் கோவே
|
|
|
வானுமுலகும்
வணங்கும் பெருந்தேவே
|
|
|
யூனுமுருக
வருமொன்றே குருபரனே.
|
|
|
50.
|
இந்தீவரமே
யெளியேன்ற னதரமே
|
|
செந்தீயின்
வண்ணா தேவர் சிறை மீட்டவண்ணா
|
|
|
தந்தி
முகர்க்கிளையாய் சாகுஞ் சமர்க்கிளையாய்
|
|
|
நொந்தீடழிந்தேனே
நோக்காய் குருபரனே.
|
|
|
51.
|
உத்தமர்
கட்கோது மிடத்தோதினையா லென்றனக்கோ
|
|
இத்துணையுமுற்ற
பலனின்னதென நானறியேன்
|
|
|
மத்த
மதியினனோ மந்தனோ வாயிலியோ
|
|
|
யெத்துணையானோ
வறியேனெந்தாய் குருபரனே.
|
|
|
குருபராபரணம் முற்றிற்று
|
|
குருபராபரணம்
Subscribe to:
Comments (Atom)