|
திரு ஆசிரியவிருத்தம்
|
||||
|
1.
|
பூமருவு தருநிழலிலுரகர்
புவியரசர்வரை புரையவுணர் யாழ்வலத்தோர்
|
|||
|
பொற்சுணங்கணி முலையை மருவிவளர்
போகர் பலர் போற்றிசெய போற்றியென்னப்
|
||||
|
பரமருவுமினிய சொல்லெழு
பருவநலனுதவுபதுமையெனு மிந்திராணிதன்
|
||||
|
பணைமுலக் கோடுதோய்ந்தோயாது செம்மையாம்
பவளாசலப் புயத்திற்
|
||||
|
காமர்வண்டிசை பாடு மந்தாரமாம்
புதிய கண்ணிவேய்ந்தாசி கூறக்
|
||||
|
கனகவரியாசனமீதில் வாழ்பவன்
வாழ்வு கனவினுமினிய தென்னாக்
|
||||
|
கோமளமதாகுமோருணர்வு தந்தாண்டவா
குணரூபவல்லியெனு மோர்
|
||||
|
குறமகளினொடு மியானை தருமகளினொடுமேவு குமரகுருபரநாதனே.
|
||||
|
2.
|
இடையறாதுருகியிருவிழிநீர்பெருக்கி
நிதமெந்தையே யென்னம்மையே
|
|||
|
யேகமே யன்பினுக்கெளியதே
யென்று சொலியிசையோடு தமிழ் மாலை-சொற்
|
||||
|
றுடை நெகிழ்ந்ததுமெணா திருகை
கூய்யிப் பரவுமுன்னடியர் தன்னடிக்குள்
|
||||
|
ளுணர்வு கெட்டலை கின்றவடியேனை
விலை கொண்டுமுன்றிருக் கருணைவெள்ளம்
|
||||
|
விடைகொடுத்தூழியங்கொள்ளாது
தன்னரசை மேவச் செய்திரவுபகலாய்
|
||||
|
வெம்பேயெனத்திரிந்தரிய பவமொரு
கோடிவினைபுரிய விட்டதேன் பொன்
|
||||
|
கொடைகொடுத்தடுமை கொளயெது
குறித்தோதிடாய் குணரூபவல்லியெனுமோர்
|
||||
|
குறமகளினொடுமியானை
தருமகளினொடுமேவு குமரகுருபரநாதனே.
|
||||
|
3.
|
நரியெனக் கொன்றோத
நாயெனக்கென்றுசொல நத்திவருசெந்நாயினம்
|
|||
|
நடுவுடம்பெமது
கூறென்றிசலமாண்டு வெடிநாறுபிணமாமுடம்பைக்
|
||||
|
கருநிறப்பாசக்கடாவுந்து வஞ்சகன்
கண்டித்து விட்டெறியுமோர்
|
||||
|
கட்டையைத்தூக்கிச் சுமந்திடென
விட்டதே கடிய கொடியதாயிருக்கப்
|
||||
|
பெருகவூண்பிணிமருந்தாடை
பூணிவையெல்லாம் பேணிக்கொடுத்து நித்தம்
|
||||
|
பேரிழவுகொண்டாடி
நொந்திடவும்விட்டதேன் பேசொணாமுடிவு பேசக்
|
||||
|
குருவாய கடவுளே யானிதற்கருகனோ
குணரூப வல்லியெனுமோர்
|
||||
|
குறமகளினொடுமியானை
தருமகளினொடு மேவுகுமரகுருபரநாதனே.
|
||||
|
4.
|
தத்தைமொழியார்மயல்கொள் ரூபமுமலர்
நன்றுச்சால நன்றென்றுகூறச்
|
|||
|
சந்ததம் பேசி வருமின்
சொலுஞ்சங்கீத சாகித்யத்தில் வல்லோன்
|
||||
|
உத்தமனெனச் சொலச்
செய்கோலமுஞ்சபையிலுன்மத்தமாய் தங்கினோர்
|
||||
|
ஒப்புவணமாசுமதுரஞ்சித்ரவித்தார்மோதி
வருவீண்டம்பமுனு
|
||||
|
சத்துவகுணம்பெறும் நீன்னன்பர்
போற்செயுஞ்சாலமு முள்ள பிறவும்
|
||||
|
தண்ணனிதுதைந்து தத்தெய்
யெனப்பாடி டுந்தனிவெட்சி நீ பங்குராக்
|
||||
|
கொத்தலரு நின்பதங்கொண்டு தரவல்லவோ
குணரூபவல்லியெனுமோர்
|
||||
|
குறமகளினொடுமியானை
தருமகளினொடு மேவுகுமரகுருபரநாதனே.
|
||||
|
5.
|
எப்பொழுது மெங்கு நிறைகின்ற பொருளாமுன்றனின்னருளை
நாடிவசமா
|
|||
|
யெந்தையே யென்று
ருகியதனையகவிகள் சொலுமியல்புற்றிருந்துமின்னங்
|
||||
|
கைப்பாசம்
விம்குறக்கட்டிப்பிடித்தெமன் கையாரவாரி வஞ்சக்
|
||||
|
காதகா வாயையங்காவெனப்போடுங்
கனற் பொறியை யுண்ணலுமூன்
|
||||
|
றப்பதே நாடும் விதிகைப்பொறியை யுண்ணலுந்தாய்வயிற்றோர்கருவதாய்த்
|
||||
|
தங்கிக் குரங்கு
போற்குந்திவெந்தொன்று காற்றள்ளுண்டிடுக்குண்டிவண்
|
||||
|
குப்புற்று வீழ்தலு நலமதோ
கூறிடாய் குணரூபவல்லியெனுமோர்
|
||||
|
குறமகளினொடுமியானை
தருமகளினொடுமேவு குமரகுருபரநாதனே.
|
||||
|
6.
|
வாய்கொண்டுநன்னெறிகள் கூறவும் பேரின்பு
வந்தாய் விவரிக்கவும்
|
|||
|
மனமுருகலில்லாத சிலகவிகள்
கலகலென வந்தமட்டுக்குமெழுதிப்
|
||||
|
பேய்போற்பிதற்றவுமுணர்ந்ததல்லாதுனது
பேரருளைநாடி நிலையிற்
|
||||
|
பிரியாது நிற்கும்
வழியாதொன்று முணர்கிலாப் பேதையேன்றன்னையன்பாய்த்
|
||||
|
தாயனையகருணை
வைத்தாண்டுநிகழ்சமயங்கள் தன்னதிங்கொன்னதென்னத்
|
||||
|
தர்க்கமிடநடைபுரிந்தருண்மறையின்
முடிமீது தங்குநீயென்றறுள்ளங்
|
||||
|
கோயிலாக்கொள்ளலெவ்வண்ணமோவறிகிலேன்குணரூபவல்லியெனுமோர்
|
||||
|
குறமகளினொடுமியானை
தருமகளினொடுமேவு குமரகுருபரநாதனே.
|
||||
|
7.
|
நிலையிலாதனவெலாங் கற்பாந்தகாலத்து
நிலைநிற்பதாக வெண்ணி
|
|||
|
நெஞ்சூடழிந்து கெடுபாழுலகர்
நடையெலா நீதிநெறியற்றதென்றுந்
|
||||
|
தொலைவிலாவானந்த முதவநன்னெறியுண்டு
தோய்ந்திடிலெலாந்தன்னதாய்த்
|
||||
|
தூக்கியுண்டிலகுமென்றினியநல்லுணர்வொன்று
தோன்றிடச்செய்தகருணை
|
||||
|
மலையாகியனையிலாக்குழவிபோலமுற்றுமனதீடழிந்து
புண்ணாய்
|
||||
|
மாறாது விழிநீர்பெருக்கியழுதோய்ந்துவருமரணத்தையெண்ணியெண்ணிக்
|
||||
|
கொலைபுரிந்தவர்போற்றிடுக்கிடச்செய்வதேன்
குணரூபவல்லியெனுமோர்
|
||||
|
குறமகளினொடுமியானை
தருமகளினொடுமேவு குமரகுருபரநாதனே.
|
||||
|
8.
|
அஞ்சுமுகமின்றியிங்காறு முகமாயிலகுமன்னையேயிற்றைவரையும்
|
|||
|
அங்கங்கலைந்ததிற்கற்றசிலசொற்களையடுக்கியொர்பாமாலையாய்க்
|
||||
|
கஞ்சமலரன்னபொற்பாதமிசை சூட்டிக்கருத்திற்கிசைந்தகதியைக்
|
||||
|
காணலாமென்றுனத்தெண்ணினேன்பேதையேன்கருணைகொடுமுற்றும்வரையும்
|
||||
|
வஞ்சமடமடியிவைகளணுகாதுசெய்வித்துவரவுபோக்கற்றநிலையோர்
|
||||
|
மதுவுண்டவண்டெனத்தூங்குசிவயோகர்பலர்வதியுமின்னருணிழற்கீழ்க்
|
||||
|
கொஞ்சுமொழி
மதலையாய்வாழச்செய்யையனே குணரூபவல்லியெனுமோர்
|
||||
|
குறமகளினொடுமியானை
தருமகளினொடு மேவுகுமரகுருபரநாதனே.
|
||||
|
9.
|
ஆராதவழுதப்பெருங்கருணைவாரியுண்டன்னதே
வலியவந்தாண்
|
|||
|
டருமறைகள் வாயெடாவீட்டினுக்கோ
ரொளியதாக்கிவைத்திடுமிதற்காய்
|
||||
|
வாராத சொலையெலாமவர
வழைத்தோயாதவல்வழக்கோதி நித்தம்
|
||||
|
வாடலேன் பிறர்கள்போராடவேன்
என்னவொரு வலியதாயுணர்வு மட்டுங்
|
||||
|
தீராது திக்கின்ற தல்லாது
மேலோர்கள் தேர்ந்தெழுதிவைத்த நூலை
|
||||
|
தேடவாவோர்வழியைநாடவாகனவிலுஞ்
சிந்திக்கு தில்லையேயிக்
|
||||
|
கோரநிலையுற்றயான்வாழ்வதெவ்வகைசொலாய்குணரூபவல்லியெனுமோர்
|
||||
|
குறமகளினொடு மியானை
தருமகளினொடு மேவுகுமரகுருபரநாதனே.
|
||||
|
10.
|
இந்த வழி போயினாலினியசுகம்
வெருமென்றுமின்னபடிவாழ்த்தி நின்றல்
|
|||
|
இலகு நின்றிருவுள்ளமாமென்றுமறிகிலாவேழையேன்னவாவோ
|
||||
|
பந்தம்புகுந்திடவொணாதென்றுமேலாம்பரானந்தவாரிமூழ்கிப்
|
||||
|
பரமசுகமனுபவத்திடவேண்டுமென்றும்
வெம்பவமகலவேண்டுமென்றும்
|
||||
|
அந்தமில்லாதெண்ணிவருகின்ற பேராசை
யாளனிவனென்றுள த்தில்
|
||||
|
அனுவளவு கருதிலோவுய்கு
வேனையனை யாதரவுபற்றிநிற்கக்
|
||||
|
கொந்தலருபாத நிழலல்லாது வேறில்லை குணரூபவல்லியெனுமோர்
|
||||
|
குறமகளினொடுமியானை
தருமகளினொடு மேவுகுமரகுருபரநாதனே.
|
||||
|
11.
|
காவிமலர்வேளைத்துணைகொண்டு
நாடாளுகாதிகிகள்பாழ்ந்தோசிகள்
|
|||
|
கண்மயக்கிலுநாறு புண்மலக்கிலு
நிதங்கட்டுண்டுவாழுவண்ணம்
|
||||
|
பாவிவினைசெய்து வரவுசிதமாகடவுளே பஞ்சுப்பொதிக்குலங்கள்
|
||||
|
படுநீறதாக்குமொருதீப்பொறி
முன்னிற்குமா பழவினையைவேரறுத்துத்
|
||||
|
தூவுபொடிநுறதாக்கிடுமுன்னதருள்விழிகள்சும்மாவிருப்பதல்லோ
|
||||
|
தொண்டர்நிலைவழுவாது
காத்துரியபேரின்புதோய்ந்துசுகமாகவெதிராய்க்
|
||||
|
கூறிவருநற்கருணையெங்குற்றதெந்தையேகுணரூபவல்லியெனுமோர்
|
||||
|
குறமகளினொடுமியானை
தருமகளினொடுமேவு குமரகுருபரநாதனே.
|
||||
|
12.
|
ஓடாது கால்களைமுறித்து
விட்டிடுமந்தவொய்யிலான்பேரருளென
|
|||
|
உள்ளத்துளஞ்சியே
யென்கொடியமனமானதொன்றிநிற்கின்றநிலையே
|
||||
|
ஆடாத கூத்தெலாமாடிடுமெஞ்
ஞானியவனென்ன சிறியனென்றும்
|
||||
|
அண்டயோகர்சில யோகரிவரெலாமோர்வழியும்றியாதபேர்களென்றும்
|
||||
|
தேடாது
நிற்குநிலையாமறிவமென்றிடுஞ்சிவலோகவைகுண்டநற்
|
||||
|
தேவருலகயனுலகமிங்குண்டுமென்றிடுஞ்சித்தறிவமென்றமின்னல்
|
||||
|
கோடானகோடி வினைசெய்தி மட்பனே
குணரூபவல்லியெனுமோர்
|
||||
|
குறமகளினொடுமியானை
தருமகளினொடுமேவு குமரகுருபர நாதனே.
|
||||
|
13.
|
நீதிதவவிரதநெறிபலபூஜைநித்யஜெபநித்யானந்தநிஷ்டை
|
|||
|
நேடுதற்கணுமளவு நெஞ்சமிசை
யாததானித்ய மன்றேயிச்சடம்
|
||||
|
வாதநமன்வருவனேயென்னவோர்ந்தன்ன
பவம் வாராது பலகவிகளை
|
||||
|
வாய்கொண்டுசொல்லியாகிலும்
வாழ்வமென்னவேமனமனத்தின்மிக கெண்டை முற்றேன்
|
||||
|
சோதியேயக்கவியுபுநின்னதாய்விட்டபின்னோத்திரமும்நின்னதாகத்
கெண்ண முற்றேன்
|
||||
|
தோன்றுகின்றனவினி பாழ்வினைக்
கொடியயேன்றுன்புற்றுமாண்டிடாவோர்
|
||||
|
கோதிலாவாழ்வுபெறலெவ்வண்ணம்றிகுலேன்
குணரூபவல்லியெனுமோர்
|
||||
|
குறமகளினொடுமியானை
தருமகளினொடுமேவு குமரகுருபரநாதனே.
|
||||
|
14.
|
ஒரு
கணத்தண்டங்களியாவையுங்கண்டுபின்னொன்றென்றுமில்லையென்ன
|
|||
|
ஒப்புவமையற்றிலகுசுகவாரிநல்லன்பருள்ளமாங்கமலமலரின்
|
||||
|
மருவாகியதிலூறுமதுவாகியதிலுள்ளமதுரமதுவாக்கியத்தை
|
||||
|
மறந்தவனுமாகுமோர்
மெய்க்கடவுளென்னநின்வளனெலாந்தேர்ந்திருந்தும்
|
||||
|
திருவிலார்போனித்தம் வீணுக்குழைத்திடச்செய்வித்துநீதிநெறியைத்
|
||||
|
தேடுமெய்யன்பராமன்ன
குழாத்தினுட் செயலற்று வாடியோர்வெண்
|
||||
|
குருனெத்தூங்கிடவும் விட்டதே
னெந்தையே குணரூபவல்லியெனுமோர்
|
||||
|
குறமகளினொடுமியானை
தருமகளினொடுமேவு குமரகுருபரநாதனே.
|
||||
|
15.
|
உலகோரெலாஞ் செல்வதின்றுவரை கண்டதிலொரேவழிதாயிருக்க
|
|||
|
வுன்மத்தனிவன்மட்டு மென்னவோ
வேறுவழியுண்டென்றுமதி னடந்தால்
|
||||
|
அலகிலாவாழ்வுபெற்றுய்யலாமென்றுமிங்கசையாது
சொல்வதென்ன
|
||||
|
அப்படிக்குண்டுமா சொல்லுநீர்
சொல்லுமெனவங்கங்கு கூடிநின்று
|
||||
|
பலரேச வின்றுவரையான் கண்டதல்லாது பரமார்த்தமேதுகண்டேன்
|
||||
|
பாவியேனொரு கோடி சொன்னாலு
நின்னருள் பழுத்தொழுகவந்துளத்திற்
|
||||
|
குலவிநின்றாண்டிடவுமில்லையென்செய்வேன்
குணரூபவல்லியெனுமோர்
|
||||
|
குறமகளினொடுமியானைதருமகளினொடுமேவு
குமரகுருபரநாதனே.
|
||||
|
16.
|
அறியாதபேதையிவனானாலுநமதருளையணுவிலுமறக்குகில்லா
|
|||
|
னாதலாற்பழவினையைமாற்றியாண்டிஉடுவமெனுமன்பொன்றுசெய்வதுண்டே
|
||||
|
லுறவதாயுடல்கொஞ்சநாள்வரைக்கு
நிற்கு மொப்பிடா யென்னிலோவூன்
|
||||
|
உருசுநொந்துனைநாடிவெந்து
வெண்ணீறதாயொருபலனுமின்றிவிணாய்த்
|
||||
|
தறையின்மாள்வதுமன்றியின்றுவரையுஞ்செய்தசலியாவினைக்கிடதாய்ச்
|
||||
|
சரம்பலவசரமதாய்த்தோன்றியே
பலகோடிதரம் மாண்டுமாண்டுமிக்காங்
|
||||
|
குறைவதே
நேரிடவுமேதுவாமையனேகுணரூபவல்லியெனுமோர்
|
||||
|
குறமகளினொடுமியானைதருமகளினொடுமேவுகுமரகுருபரநாதனே.
|
||||
|
17.
|
பாபவினை
வாரிதியன்முக்காலமென்னுமோர்பாழலைகள்வந்துமோதப்
|
|||
|
பம்மூற்றெழுந்துலைந்தோர்பற்றுமின்றிவெம்பாம்புண்ணுதேரைபோலாய்த்
|
||||
|
தாபமுனுபேதையேன்றன்னைவாவெனத்தன்னருள்விரைந்துகூவித்
|
||||
|
தாவிதேபற்றனப்பற்றவைத்துதெங்கணுந்தானாகியென்னும்வீயாத்
|
||||
|
தீபவொளிவீட்டிலோர்குடியாகவையாது
செகவரசர்மெச்சுவண்ணம்
|
||||
|
செக்கான்வளர்த்தவொருபேரெருதுபோலித்தேகச்சுமட்டையேற்றிக்
|
||||
|
கோபமெனுமூன்றுகோலாலலையவிட்டுதென்குணரூபவல்லியெனுமோர்
|
||||
|
குறமகளினொடுமியானைதருமகளினொடுமேவுகுமரகுருபரநாதனே.
|
||||
|
18.
|
தடைவரையின்முடிமீதிலசைவற்றுரோமங்கள்சடைகளாய்த்தினைமுனைத்த
|
|||
|
தருவின்விழுதென்னவீழ்ந்திடநின்றுமான்மறைகடங்குமிகுகங்களெல்லாம்
|
||||
|
படருமோர்தருவென்னமெய்யுரசமெய்த்தபசு
பல்லாண்டுசெய்து வேண்டும்
|
||||
|
பரகதியையோர்
தவமுமுயலாதபாவியேன் பாடித்துதித்து வேண்டன்
|
||||
|
முடமுற்ற சண்டாளன் முடிமன்னன் மகண்மீதுமோகமுற்றேங்கல்போல்
|
||||
|
முடிகின்றதோவலது
முற்றுபெருகின்றதோமூடனேனியாதுமறியேன்
|
||||
|
குடியுற்று மெய்யன்பருளமேவு
மெளியதே குணரூபவல்லியெனுமோர்
|
||||
|
குறமகளினொடுமியானை
தருமகளினொடுமேவு குமரகுருபரநாதனே.
|
||||
|
19.
|
ஓருணர்வுமில்லாத வெறியாளனொரு
பேயனுன்மத்தனென்று பலபே
|
|||
|
ரோடித்துதொடர்ந்து கைக்கல்லெறிங்தோட்டிவரவூள்ளணர்விலேஎழுந்திட
|
||||
|
பாராதியறியாத பேரருளை யோயாது
பாடித்துதித்து வாழ்த்திப்
|
||||
|
பகலிரவு தெரியது வாழ
வெண்ணிடுமெனைப்படுமுடவனாக்கி யென்றுங்
|
||||
|
கார்நிறக் குழன்மனைவி மக்களெனும்
வலையினு கட்டுணடிருக்கும் வண்ணம்
|
||||
|
கற்பித்து விட்டதேனெந்தையே யித்துயர்களைந்திடகோடிவிதநான்
|
||||
|
கோரியுந் திருவுளஞ்செய்யாத
தன்மையேன் குணரூபவல்லியெனுமோர்
|
||||
|
குறமகளினொடு மியானை
தருமகளினொடுமேவு குமரகுருபரநாதனே.
|
||||
|
20.
|
வேதனெனு
மொருபாணனீரல்குடர்நிணைமூளை வெள்ளென்புதசையிவைகளின்
|
|||
|
மீதுசெந்நீர்ப்பதந்தோய்ந்திட்ட
ஒருவண்ண வெந்தோலையிட்டு மூடிப்
|
||||
|
பாதமுதலுச்சீவரை
வெண்ணரம்பாமினழகன் பம்பவுட்டையல்தைத்துப்
|
||||
|
பாலிடும்பாவையைச்சூலென்னுமொருபாவிபலதரமூடி
மூடி
|
||||
|
யேதமொடு தொய்வுனுப் போர்வையை
வார்த்தீகமென்னும் வண்ணான் வெளுத்திங்
|
||||
|
கீகின்ற சாயப்பழங்கந்தையை
தினமுயிணையிலாவின்னமுதமே
|
||||
|
கோதையேயென்று வரலொழிவ தென்றையனே
குணரூபவல்லி யெனுமோர்
|
||||
|
குறமகளினொடுமியானை
தருமகளினொடுமேவு குருபர நாதனே.
|
||||
|
21.
|
காண்பனவெலாமித்தெ மெய்யான
தொன்றுண்டு கருவிகரணங்களெல்லாம்
|
|||
|
கால்சடைந்தோய்ந்தந்த
மயமாகுமலையிலாக்கருணையங்கடலதென்ன
|
||||
|
மாண்புடையவோருணர்வு பெற்று மோர்நிமிடத்தின்
மாறிமாறிச்சுழன்று
|
||||
|
மையலுறுமுலக்ரோடொயித்திரிந்துவரல்வன்பாவமென்னையனே
|
||||
|
சேணண்டமியாவிலுந்தானுகவாழுமொருஜெயபக்ஷியைப்பிடித்துச்
|
||||
|
சிறுகுரம்பையிலிட்டு
நாடிமொழிபேசிச்சிரித்து விளையாடிவருதல்
|
||||
|
கோணிலாப்
பொருளினியல்பன்னுகாதெய்வமே குணரூபவல்லியெனுமோர்
|
||||
|
குறமகளினொடுமியானை
தருமகளினொடு மேவுகுமரகுருபரநாதனே.
|
||||
|
22.
|
ஒருவேளையென்னுள்ளினீவந்தை வந்தை
யென்றேதியானந்த மாகி
|
|||
|
யுடலெலாம்புளக மெழநிற்கின்ற
வொருவேளையொன்றுமில்லாதுசும்மா
|
||||
|
வருவனோ வருவனோ வென்கின்ற
வொருவேளைவரவினைக்கண்டிலேனே
|
||||
|
மாபாவியென்செய்வனென்றுருகியழுகின்ற
மற்றுமொவ்வோர்வேளையி
|
||||
|
லிருகால்கள்கைகளிடையோய்ந்துடலும்நீங்குதற்கேற்றவோரயர்வுதுன்ப
|
||||
|
மீகின்றதிவையெலாமின்னபடியென்னுதீயெளியேனையானும்
வண்ணங்
|
||||
|
குருவாகவரினலான்முடியாதுதெய்வமேகுணரூபவல்லியெனுமோர்
|
||||
|
குறமகளினொடு மியானைத்தருமகளினொடுமேவு
குமரகுருபரநாதனே.
|
||||
|
23.
|
அலகிலியாவரும்பகலிலுண்டிரவிலுண்டஞ்சற்றுரங்கியப்பால்
|
|||
|
அவரவர்கள் தொழிலெதோவதை
நோக்கியுள்ளத்தினமைவடைந்தானந்தமாய்க்
|
||||
|
குலவிடச்செய்தநீயென்மட்டுமோரமைவுகொள்ளவொட்டாது
செய்து
|
||||
|
கொடிதவர்கள் நடையெலாம் பொய்,
பொய், பொய் மெய்யான கோமளமதானநடையி
|
||||
|
லுவிநின்றிடவேண்டுமென்னவோருள்ளுணர்வை
யோயாதளித்து வாய்கொண்
|
||||
|
குளறி நின்றுருகும்
வணம்விட்டதே னெந்தையேயுல கோரெலா நிகைக்கக்
|
||||
|
கொலைபுரிந்தவனாக வாழ்ந்து
வரனன்றன்னு குணரூப வள்ளியெனுமோர்
|
||||
|
குறமகளினொடுயொனைதருமகளினொடுமேவுகுமரகுருபரநாதனே.
|
||||
|
24.
|
எல்லா
நடத்துபவனுமெப்பொருளுமெத்தேவுமியாவுநீயாயிருக்க
|
|||
|
விதையணுவிலுணராதுநான்சொன்னகவியென்றுமிவையெனது
பொருள்களென்றுங்
|
||||
|
கல்லாலினீழலி தருள்தவன் விடையேறு
கர்த்தன் முராரி முதலாங்
|
||||
|
கடவுளர்கள்வேறென்று மாறுதலமே
நினது கருணைபெறுதலமேதென்னும்
|
||||
|
பல்லோருமறியும்வணமோதினேனின்றுவரைபாவியேனாற்றிவந்த
|
||||
|
படுபிழையெலொம்பொறுத்துள்ளுணர்வின்மானாதுபாடச்செய்தன்பிரக்கங்
|
||||
|
கொல்லாமை, பொறையுடைமைதந்து காவையனே குணரூபவல்லியெனுமோர்
|
||||
|
குறமகளினொடு மியானை தருமகளி
னொடுமேவுகுமரகுருபரநாதனே.
|
||||
|
25.
|
ஏனிங்கு வீணுக்குழைக்கின்றையிடையிடை
லென்னவோ வொன்ருண்டுமென
|
|||
|
னெட்டிப்பிடிக்க வொரு
பறபறப்புற்றையதையெய்தவொட்டாதுசெய்தோ
|
||||
|
நானென்பதறியைநீபின்னுமவ்வழியையேநாடுகின்றாய்நடக்கா
|
||||
|
நானுள்ளமட்டுமென்றோதிமனமென்னோடுநலியாதுபோராடுதே
|
||||
|
யானிந்தவல்லலுக்காளன்று
நடுவற்றவிச் செய்திகூறுனத்தை
|
||||
|
யென்றுமில்லாது
செயவில்லையேயகிலாண்டமெங்குஞ்சிறந்துமுறைசெய்
|
||||
|
நோனென்ன நினையோதல் பொய்யதோ
மெய்யனே குணரூபவல்லியெனுமோர்
|
||||
|
குறமகளினொடுமியானை
தருமகளினொடுமேவு குமரகுருபரநாதனே.
|
||||
|
26.
|
அறியாது தேகமே நானென்று
பலரோடகம்பேசி யிம்மனதினோ
|
|||
|
டங்கங்கலைந்து பவவினைதோடி
செய்ததனை யாராய்ந்து முடிவிட்டதிற்
|
||||
|
சிறிதெனினுநின்கருணைபற்றிடாதென்னவே
தேக்குற்றனிப்பொழுதிலோ
|
||||
|
சிலவுணர்வை யணுவளவதாயுதவி
வலுவினிற்றேடி யாட்கொள்ளுமன்பிற்
|
||||
|
செறியுநீமெள்ள
மெளவருதலுஞ்சேர்தலுந்தேர்ந்து கொண்டேனிது முதற்
|
||||
|
றினையளவுமஞ்சுறேனீயாளுவாயெனச்
செயிடற்கையமுமிலை
|
||||
|
குறிகுணஞ்சோதிக்கவேண்டுவதுமில்லையாங்குணரூபவல்லியெனுமோர்
|
||||
|
குறமகளினொடுமியானை
தருமகளினொடுமேவு குமரகுருபரநாதனே.
|
||||
|
27.
|
மெய்யானகடவுளுனையொரு நொடியுமறவாது
மிருதுவசன நிறைத்து
|
|||
|
மென்கவிகள் சொல்லித்துதித்துருகியண்டினர்கள்
வெம்பொய்யினூடுபுகிச்
|
||||
|
செய்யாது செய்து
வரவுசிதமாவாதநோய்தீரலொருபேதை நெடுநாட்
|
||||
|
டேடிக்கிடைத்தவோரருமருந்தினையுணதீனமுன்னிலுமதிக்கமாய்
|
||||
|
கைகால்முடங்கிவரவேற்றதா பாலைக்கரும்பனையினடியிலுண்ணிற்
|
||||
|
கள்ளென்பரல்லாது பாலென்று சொல்வராகர்த்தனே
கருணைகொடு யான்
|
||||
|
கொய்ச்சிறைப்பற
வையாமுன்னமேவந்துகா குணரூபவல்லியெனு மோர்
|
||||
|
குறமகளினொடுமியானை
தருமகளினொடுமேவு குமரகுருபரநாதனே.
|
||||
|
28.
|
பாடானமுண்டதிற்புழுவுமுண்டன்னதின்பண்பாகலாமென்னிலோ
|
|||
|
பாழுலக மாயை யிதுபொல்லாது
வெம்பணிகள்பந்து பந்தாய் சுருண்டு
|
||||
|
வாடாது வாழ் சந்தனத்தருவை
நிகராக்கும் வலுவிற்ற மிதவை சேர்ந்த
|
||||
|
வன்கல்லுமாக்கிவிடுமிசையாதுநல்லதெனவாய்கொண்டு
சொல்லினாலு
|
||||
|
நாடாது பேதையுண்ணடுநடுக்குறுகின்ற
நாதாந்த முடிவினின்று
|
||||
|
நலிவினொடு வரவு போக்கற்று
மெய்ஞ்ஞானத்தினற்போக வாட்சிபெற்று
|
||||
|
கோடாநு கோடியர்கள் வாழுநின்பதமுதவுகுணரூபவல்லியெனுமோர்
|
||||
|
குறமகளினொடுமியானை
தருமகளினொடு மேவுகுமரகுருபர நாதனே.
|
||||
|
29.
|
அத்திபூத்ததுபோல வொருவேளை
யென்னுள்ளமழுது மோரயர்வு காட்டி
|
|||
|
மலறுவதெலாஞ்சுத்த
வேடமேமெய்யாகிலங்கிங்கெணாமலெங்கு
|
||||
|
நித்தியமதாய் நிறையுமொளியதாய்த்திருவுள்ளநேடியிவனன்பனென்ன
|
||||
|
நிகரிலாவாழ்வுதவழில்லையெனிலண்டும்வகைநேராய
பாதை காட்டிப்
|
||||
|
பத்திமுதிரச்செய்யுமதுவுமில்லாவிடிற்பாவினை
கோடி தேடும்
|
||||
|
பாழ்மலமதாந்தாளைத்துண்டுதுண்டாக்கிப்படர்ந்துவருவேரையெல்லாங்
|
||||
|
கொத்தியழன் மூட்டியே வாழச்
செய்யையனே குணரூபவல்லியெனுமோர்
|
||||
|
குறமகளினொடுமியானை
தருமகளினொடுமேவு குமரகுருபரநாதனே.
|
||||
|
30.
|
வஞ்சமனமென்னுமோர் மாபாவிராவுத்தன்
வன்புலக்குதிரையேறி
|
|||
|
வையாளி விடுகினான் சற்று,
நில்லென்னிலோவசமாகுவாறுமல்லன்
|
||||
|
அஞ்சாமலொருவேளை யென்னையும் போவென்றுதட்டுகின்றான்பேதையே
|
||||
|
னனுதினமுமோயாது போராட
முடியுமா வஃதோதும் வல்வழக்கை
|
||||
|
நஞ்சுமிழனந்தனாவாயிரமு மிரவு
பகலியாது பேசியற்று
|
||||
|
நடுவின்னதிந்தவழிநீர்
போகலாமென்று நவில நாற்கோடியாண்டுந்
|
||||
|
கொஞ்சமேயென்செய்வனையையோ தெய்வமே
குணரூபவல்லியெனுமோர்
|
||||
|
குறமகளினொடுமியானை
தருமகளினொடு மேவுகுமரகுருபரநாதனே.
|
||||
|
31.
|
தேகநமதெக்காலு
மழிவுறாவயிரமலைசிதைவுறாதென்றுபொன்னைத்
|
|||
|
தெய்வமாய்த் தொழுது
வருசிற்றறிஞர்பாலுனது சித்தெலாஞ்செய்தலுசித
|
||||
|
மாகுநரிநாய் கருகு
செம்பருந்திவையெலாமவ்வளவவ்ளவதா
|
||||
|
யாக்கிப் பகிர்ந்துண்ணுமுடலைநமதென்றெண்ணுமறிவிலாச்
சண்டாளனை
|
||||
|
மோக முற்றவர்போலமருவிவருவேசையரின்
முறையிலுந்தாழ்ந்தமுறையா
|
||||
|
முற்றிலுங்கொண்டதிப்பொன்னென்று
மெண்ணுமென்முளமோன முற்று நிற்றல்
|
||||
|
கோகனகமதிலூறுதேரலேயுசிதமா; குணரூபவல்லியெனுமோர்
|
||||
|
குறமகளினொடுமியானை
தருமகளினொடு மேவுகுமரகுருபரநாதனே.
|
||||
|
திரு ஆசிரியவிருத்தம்
முற்றிற்று
|
||||
திரு ஆசிரியவிருத்தம்
Subscribe to:
Comments (Atom)