மருதுறைப்பதிகம்

மருதுறைப்பதிகம்
1
நாதமுங்கடந்து விந்துவுங்கடந்து நாமதுவாயினமெனுமோர்
போதமுங்கடந்தோய் செழிய வைகுந்தப்புனிதனே மருதுறைவானே
ஏதமே பெருக்குமிக்கொடுவாழ்வையினிதினிதென்னவே நத்தி
வேதனை பலவும் விளைத்திடவல்லேன் எவ்வணமுய்வண விளம்பே.
2
புத்தமுதனைய மொழிமறச்சிறுமிபுயாசலந்தழீஇக்கொள்வளரும்
மத்தனே மறையோர் நிகழும் வைகுந்த மன்னவோ மருதுறைவானே
தத்தை மென்மொழியார் காமுறப்பவநோய் தழைவுறச்சந்ததமாய
வித்தையே பயில்வேனானொ ருபேதை யெவ்வணமுய்வணவிளம்பே.
3
செய்வராலினங்கள் கமுகினந் தாற்றச்சிதறி வெண்ணறவினையொழுக்கி
மைவரம் பொழிலூடுலாவு வைகுந்த மன்னவோ மருதுறைவானே
ஐயமொன்றின்றியாணவவிருணின்றகண்வாழ்வதினிலை மன்னா
வெய்யனேன் வெகுளி யோடலைகின்றே னெவ்வண முய்வணவிளம்பே.
மருதுறைப்பதிகம் மூன்று பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளது
மற்ற பாடல்கள் கிடைப்பின் பதிவேற்றம் செய்கிறோம்.